அனில் குமார் சகானி

இந்திய அரசியல்வாதி

அனில் குமார சகானி (Anil Kumar Sahani) (பிறப்பு: 4 சூலை 1963) இந்தியாவின் பிகார் மாநில இராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி அரசியல்வாதியும், 2010 முதல் 2018 வரை பிகார் மாநிலம் சார்பில் மாநிலங்களவை முன்னாள் உறுப்பினராக இருந்தவரும்[1]; , 2020 முதல் பிகார் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.[2] இவர் குற்ற வழக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதியும் ஆவார்.[3]

அனில் குமார் சகானி
மாநிலங்களவை உறுப்பினர், பிகார்
பதவியில்
சனவரி. 2010 – 2 ஏப்ரல் 2018
பின்னவர்அஷ்பக் கரீம், இராஷ்டிரிய ஜனதா தளம்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஐக்கிய ஜனதா தளம்

குற்ற வழக்கில் தகுதி நீக்கம் தொகு

அனில் குமார் சகானி மாநிலங்களவை உறுப்பினராக இருந்த காலத்தில் போலி விமானப் பயணச் சீட்டுகளை அரசிடம் செலுத்தி ரூபாய் 23.71 இலட்சம் மோசடி செய்த வழக்கில், மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றம் குற்றவாளி என தீர்ப்பு அளித்து, 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால், அனில் குமார் சகானி பிகார் சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து 15 அக்டோபர் 2022 முதல் பிகார் சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்[4]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Ethics Committee of Rajya Sabha takes up JD(U) MP Anil Sahani case". The Indian Express (in ஆங்கிலம்). 2016-05-25. பார்க்கப்பட்ட நாள் 2020-08-23.
  2. அனில் குமார் சஹானி
  3. RJD MLA Anil Kumar Sahni disqualified from Bihar legislative assembly
  4. RJD MLA Anil Kumar Sahni disqualified from Bihar legislative assembly
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனில்_குமார்_சகானி&oldid=3854952" இலிருந்து மீள்விக்கப்பட்டது