அமிதாப் பச்சன்

இந்திய நடிகர்

அமிதாப் பச்சன் (பிறப்பு:அக்டோபர் 11, 1942) இந்தி: अमिताभ बच्चन[2]IPA[əmitaːbʱ bətʃːən] இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். அமிதாப் ஹரிவன்ஷ் பச்சன் என்பதன் சுருக்கமே அமிதாப் பச்சன் என்பதாகும். இவர் 'பிக் பீ' மற்றும் 'ஷாஹேந்ஷா' என்ற செல்லப் பெயர்களாலும் அழைக்கப் பட்டார். 1970களில் முதன்முதலாக பாலிவுட் திரை உலகில்[1][2] 'கோபக்கார இளைஞன்' எனப் பெயர் பெற்றுப் பிரபலம் அடைந்தார். மேலும் இந்தியத் திரைப்பட வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தவர்களுள் ஒருவராக கருதப்பட்டார்.

அமிதாப் பச்சன்
Amitabh Bachchan

இயற் பெயர் அமிதாப் அரிவான்ஷ் பச்சன்
பிறப்பு அக்டோபர் 11, 1942 (1942-10-11) (அகவை 81)
அலகாபாத், இந்தியா
வேறு பெயர் பிக் பி
தொழில் சினிமா நடிகர், சினிமா இயக்குனர்
நடிப்புக் காலம் 1969 – இன்று
துணைவர் ஜெயபாதுரி (1973 - இன்று)

பச்சன் பிரபல திரைப்பட நடிகை ஜெய பாதுரியை திருமணம் செய்து கொண்டார். பச்சன் தம்பதிகளுக்கு ஷ்வேதா நந்தா மற்றும் அபிஷேக் பச்சன் ஆகிய இருபிள்ளைகள் இருக்கின்றனர். மகன் அபிஷேக்கும் தந்தையைப் போலவே நடிகராக உள்ளார். அபிஷேக், நடிகையும் உலக அழகிப் பட்டம் வென்றவருமான ஐஸ்வர்யராயை மணந்துள்ளார்.

பச்சன் தனது தொழில்வாழ்க்கையில் பற்பல சிறப்பு விருதுகள் வென்றுள்ளார். அதில் மூன்று தேசியத் திரைப்பட விருதுகள், மற்றும் பன்னிரண்டு பிலிம்பேர் விருதுகள் போன்றவை அடங்கும். அதிலும் பிலிம்பேர் விருதுகளில், சிறந்த நடிகர் என்ற தேர்வுகளில் அதிக பட்ச எண்ணிக்கையில் பரிந்துரைக்கப்பட்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமின்றி, பின்னணிப் பாடகர், படத்தயாரிப்பாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சி அளிப்பவர் என நடிப்புடன் பன்முகங்களையும் வெளிப்படுத்தியவர். 1984-87 வரை இந்தியப் பாராளுமன்றத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராகவும் இருந்தார்.

இவர் கலைத்துறையில் ஆற்றிய பணிகளுக்காக 1984 ஆம் ஆண்டு இந்திய அரசு பத்மசிறீ, 2001 இல் பத்ம பூசண், 2015 ஆம் ஆண்டில் பத்ம விபூசண் ஆகியவற்றை அளித்து கௌரவித்தது. திரைப்பட உலகிலும் அதற்கு அப்பாலும் இவரது தனித்துவமான வாழ்க்கைக்காக பிரான்ஸ் அரசாங்கம் 2007 ஆம் ஆண்டில் அதன் மிக உயர்ந்த குடிமையியல் கௌரவமான நைட் ஆஃப் தி லெஜியன் ஆப் ஹானர் என்ற விருதை வழங்கியது.

தொடக்க வாழ்க்கை தொகு

உத்தரப்பிரதேசத்தில் அலகாபாத்தில் ஓர் இந்துக் குடும்பத்தில் பிறந்தவர் அமிதாப் பச்சன். இவர் தந்தை டாக்டர் ஹரிவன்ஷ் ராய் பச்சன் ஒரு புகழ்பெற்ற இந்திக் கவிஞர் ஆவார். இவரது தாயார் தேஜி பச்சன் இன்றைய பாகிஸ்தான், அன்றைய பைசல்பாத்தைச் சேர்ந்த ஒரு சீக்கியப் பெண்மணி ஆவார்.[3] ஆரம்ப காலத்தில் பச்சன் 'இன்குலாப்' என்றே அழைக்கப்பட்டார். அந்தப்பெயரானது இந்தியச் சுதந்திரப்போரட்ட காலத்தில் எழுப்பப்பட்ட தாரக மந்திரம் 'இன்குலாப் ஜிந்தாபாத்' என்பதை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் அவர் மறுநாமகரணமாக, அமிதாப் என்று அழைக்கப்பட்டார். அதன்பொருளாவது: ' அணையா விளக்கு' என்பதாகும்.[3]ஸ்ரீவத்ஸவா என்பது குடும்பப்பெயராக இருப்பினும், அவரது தந்தை பச்சன் எனும் பெயரைப் புனைப்பெயராக வைத்துக் கொண்டார். அந்தப் பெயரிலேயே, அவரது படைப்புகளை வெளியிட்டு வந்தார். திரைப்படங்களில் முதல்தோற்றத்தில் இருந்து அமிதாப் என்ற பெயரிலேயே நடிக்கத் தொடங்கினார். பச்சன் என்ற பெயரே நாளடைவில் எல்லா பொது நோக்கங்களுக்காகவும் அவரது தற்போதைய குடும்பத்தாரின் பெயராகவே மருவி விட்டது.

அமிதாப், ஹரிவன்ஷ் ராய் பச்சனின் இரு மகன்களில் மூத்தவர் ஆவார். இரண்டாம் மைந்தன் அஜிதாப் ஆவார். அவரது தாயார் மேடைநாடகங்களில் நடித்துள்ளார். அவருக்கும் திரைப்பட வாய்ப்பு தேடிவந்தது. ஆனாலும் குடும்பப் பொறுப்புகளுக்கு முன்னுரிமை தந்து அதைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. பச்சனின் பணிவாழ்க்கையில் விருப்பத்தேர்வுகள் செய்யும் போதெல்லாம் தாயாரின் செல்வாக்கு உரிய தாக்கத்தைச் செய்தது. அவரும் தன்மகன் மேடையில் நடுஇடம் [4] பெறுவதையே வலியுறுத்தி வந்தார். ஆரம்பக்கல்வியை அலகபாத் ஜனன பிரபோதினி மற்றும் சிறுவர்கள் உயர்நிலைப் பள்ளியில் பெற்றார். பிறகு நைனிடாலில் உள்ள ஷேர்வுட் கல்லூரியில் கலைத்துறையையே முக்கியப் பாடமாகப் பயின்றார்.அதன்பின் டெல்லிப் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த கிரோரிமால் கல்லூரியில் அறிவியல் பாடம் கற்று அதில் இளங்கலைப்பட்டம் பெற்றார். தற்போதைய கொல்கத்தா அன்று கல்கத்தாவாக இருந்தபொழுது அங்கிருந்த 'பேர்ட் அண்ட் கோ' கப்பல் கம்பெனியில் இருபது வயதில் சரக்குத் தரகராக வேலை பார்த்து அதைக் கைவிட்டார். நடிப்பின்மேல் தணியாத தாகம் இருந்ததால் அதையே பின்தொடர்ந்தார்.

1973 ஜூன் 3ஆம் நாள் நடிகை ஜெயபாதுரியை, வங்காளத் திருமணச் சடங்குகள்படிக் கைப்பிடித்தார். தம்பதியர்களுக்கு இருபிள்ளைகள் பிறந்தனர் . மகள் ஷ்வேதா மகன் அபிஷேக் ஆவார்கள்.

பணித்துறை தொகு

ஆரம்ப காலப் பணி: 1969-72 தொகு

1969ல் வெளிவந்த சாட்ஹிந்துஸ்தானி அவரது 'முதல்' திரைப்படமாகும்! ஏழு முக்கிய பாத்திரங்களுள் ஒருவராக இவர் திரையில் முதன்முதல் தோன்றினார்! கிவாஜா அஹ்மத் அப்பாஸ் இயக்கத்தில் உட்பல் தத், மது, ஜலால் ஆகா ஆகியோர் நடிப்பில் வந்த சாட் ஹிந்துஸ்தானி படம் வருவாயில் வெற்றி பெறவில்லை. ஆயினும் பச்சனுக்கு சிறந்த புதுமுகம் என்ற தேசியத்திரைப்பட விருது [5] கிட்டியது.

1971ல் வெளிவந்த 'ஆனந்த்' விமர்சன ரீதியாக பாராட்டுதலும், வியாபார வெற்றியும் பெற்றது. அதில் ராஜேஷ் கண்ணாவுடன் இணைந்து நடித்தார். பச்சனின் வேடம் வாழ்க்கையை வெறுக்கும் சிடுசிடுப்பான மருத்துவர் வேடமாகும். அது பிலிம்பேர் சிறந்த துணை நடிகர் விருது வாங்கித் தந்தது. அதேவருடம் பர்வானா படத்தில் மோகத்தில் லயிக்கும் காதலனாக, எதிர்நாயகனாக, சிறப்பாக நடித்தார் உடன் நடித்தது நவீன் நிச்சொல், யோகிதா பாலி, ஓம் பிரகாஷ் ஆவர். பல படங்கள் தொடர்ந்தன ரேஷ்மா அவுர் ஷேரா உள்பட பல படங்கள் வந்தாலும், வசூலில் வெற்றி பெறவில்லை! அடுத்து 'குட்டி' படம் வந்தது. அதில் கௌரவ வேடம் ஏற்றார். அப்படத்தில் அவரது வருங்கால மனைவி ஜெயா பாதுரி தர்மேந்திரவுடன் நடித்தார். ஏற்ற இறக்கம் கொண்ட குரலுச்சரிப்பு வளம் கொண்டிருந்த அமிதாப்பச்சன் அதை பாவர்ச்சி யில் வெளிப்படுத்தினார். அடுத்து எஸ்.ராமநாதன் இயக்கத்தில் வந்த சாலை விபத்தை அடிப்படையாகக் கொண்ட நகைச்சுவைப்படம் 'பாம்பே டு கோவா' வில் தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார் . அருணா இராணி, மெஹ்மூத், அன்வர் அலி, மற்றும் நசிர் உசேன் ஆகியோருடன் இணைந்து நடித்தார்.

நட்சத்திர அந்தஸ்து உயர்வு 1973-1983 தொகு

1973 பச்சனுக்கு முக்கிய வளர்ச்சி வாய்ந்த வருடமாக அமைந்தது, இயக்குநர் பிரகாஷ்மெஹ்ரா தனது 'ஸாஞ்சீர்' படத்தில் முதன்மைப்பாத்திரம் வழங்கினார். அதில் இன்ஸ்பெக்டர் விஜய்கன்னாவாக அற்புதமாக நடித்தார்! முந்தைய காதல் தீவிர முனைப்புமிக்க திரைப்படங்ளைவிட மாறுபட்டதாக அது அமைந்தது. மேலும் அவருக்கு 'கோபக்கார வாலிபன்' என பாலிவுட் சினிமாவில [2] புதிய பகழைப் பெற்றுத் தந்தது. அதையே தொடர்ந்து பிறபடங்களிலும் பின்பற்றினார். அது இவருக்குத் தொழில்ரீதியாக, பாக்ஸ் ஆபீஸ் வெற்றி பெற ஏதுவாகி, 73ல் பிலிம்பேர் மிகச்சிறந்த நடிகர் விருதுக்காக பெயர் முன்மொழியப்பட்டது. அதேவருடத்தில் இவர் ஜெய பாதுரியைத் திருமணம் புரிந்துகொண்டார். இருவரும் இணைந்து ஸாஞ்சீர் , அபிமான் போல பலபடங்களைத் தந்தனர். பின்னாளில் பச்சன் நமக் கிராம் படத்தில் விக்ரம் வேடத்தில் நடித்தார். அந்த சமூக சித்திரம் ஹிரிகேஷ் முகர்ஜீ இயக்க, பிரெஷ் சட்டேர்ஜீ நட்பின் அடிப்படையில் திரைக்கதைப் பணி செய்து முடித்தார். ராஜேஷ் கண்ணா, ரேகாவுடன் இதில் இவர் துணைவேடம் ஏற்று நடித்தது பாராட்டுதல்கள் பெறவைத்தது. பிலிம்பேர் சிறந்த துணைநடிகர் விருது அதனால் பெற்றார்.

1974ல் பச்சன் பல கௌரவவேடங்களில் நடித்தார். 'குன்வர் பாப்' மற்றும் 'தோஸ்து' அதில் குறிப்பிடத் தக்கதாகும். துணைவேடங்கள் தாங்கிய பிறகு அந்நிலை அந்த வருடம் அவரை வெகுஜன அந்தஸ்து பெறவைத்தது, 'ரொட்டி கபடா அவுர் மக்கான்' திரைப்படம் ஆகும். மனோஜ் குமார் எழுதி இயக்கிய அப்படம் நிலைகுலையாத நேர்மை, வறுமையில் செம்மை குணாதிசயங்களை வெகுவாகச் சித்தரித்துக் காட்டியதால் விமர்சனம் வியாபாரரீதியில் வெற்றி பெற்றது. சஷி கபூர், ஜீனத் அம்மன் மற்றும் குமாருடன் அமிதாப் போட்டி போட்டு நடிப்பில் வெளுத்துக் கட்டினார். 1976 டிசம்பர் 6 ஆம்நாள் வெளிவந்த மஜ்பூர் முதன்மை வேடம் ஏற்று நடித்தார். இது ஜார்ஜ் கென்னடி நடித்த ஹாலிவுட் ஜிக்ஜாக் என்ற ஆங்கிலப்படத்தின் இந்தி மறுவடிவப்படமாகும். அது பாக்ஸ் ஆபீஸ்[6] சுமாரான வெற்றியைத்தான் தந்தது. 1975ல் மாறுபட்ட கதையம்சங்கள் கொண்ட படங்களில் நடித்தார். 'சுப்கே சுப்கே' நகைச்சுவைப் படம், 'பரரர்' குற்றவியல் படம், 'மிலி' காதல்களிப்புப் படம் முக்கியமானவையாகும். அவைகளைத் தொடர்ந்து வந்த இருபடங்கள் இந்தித் திரைப்பட வரலாற்றில் இவரைப் புகழேணியின் உச்சியில் கொண்டுபோய்ச் சேர்த்தது. 'தீவார்' படம் யாஷ்சோப்ரா இயக்கத்தில் ஷஷி கபூர், நிருப ராய், நீடு சிங்க் உடன் இவர் நடித்தார். 75ல் மிகப்பெரும் வெற்றிப் படமாக அது அமைந்து, மிகச்சிறந்த நடிக்கருக்கான பிலிம்பேர் விருதை இவருக்கு ஈட்டித்தந்தது. தரவரிசையில் எண் 4[7] பெற்றது. இன்டியாடைம்மூவிஸ் டாப் 25' தீவார் படம் பட்டியலில் கண்டிப்பாக பார்க்கத்தகுந்த பாலிவுட் படங்கள் [8] என அத்தரவரிசை கொடுத்தது. இரண்டாவதாக 1975 ஆகஸ்ட் 15 சுதந்திரத்தினம் அன்று வந்த ஷோலே (பொருள்: தீப்பிழம்புகள்) இந்தியாவிலேயே அதிக மொத்த வசூல் அள்ளிக் குவித்த பெருமைபெற்றதாகும். ரூ 2,36,45,00,000 தொகை அமெரிக்க டாலர் மதிப்பில் 60 மில்லியன்களாகும்.[9] சரிக்கட்டக் கூடிய அளவிற்கு அமைந்தது. திரைப்படத் துறையில் மிகப்பெரும் நடிகர்களான தர்மேந்திரா, ஹேமாமாலினி, சஞ்சீவ்குமார், ஜெயபாதுரி, அம்ஜத்கான் ஆகியோருடன் பச்சன் ஜெயதேவ் பாத்திரத்தில் மிகச்சிறப்பாக நடித்தார். 1999ல் பிரித்தானிய ஒலிபரப்பு கார்பரேஷன் ஆயிரம் ஆண்டுகளில் மிகச்சிறந்த படமெனப் பாராட்டுதல்கள் தெரிவித்தது. தீவாரைப் போல் இண்டியாடைம்ஸ் மூவீஸ் 'கண்டிப்பாகக் காணவேண்டிய பாலிவுட் படங்கள்'[8]டாப்25' பட்டியலில் இடம் நல்கியது. அதேவருடம் ஐம்பதாதவது பிலிம்பேர் வருடாந்திரவிழாவில் 50 ஆண்டுகளில் இல்லா தனிச்சிறப்புப் பெற்ற படம் என்ற பெருமையை வழங்கியது.

ஷோலே படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு பச்சன் தொழில்துறையில் தனது நிலையை பலப்படுத்திக் கொண்டமையும் , 1976 முதல் 1984 வரைக்கும் முன் எப்போதும் இல்லாத எண்ணிக்கையில் பிலிம்பேர் சிறந்த நடிகர் விருதுகளும், பரிந்துரைகளும் ஏராளமாகப் பெற்றார். ஷோலே போன்ற படம் அவரது தகுதியைப் பாலிவுட்டின் மேம்பட்ட ஆக்க்ஷன் நாயகன் என்ற புகழ் உச்சிக்குக் கொண்டு சென்றது. பிறவகை வேடங்களையும் அவர் இலகுவாகக் கையாளமுடியும் என்று நிரூபித்துக் காட்டினார். 1976ல்கபீ கபீ படத்தில் காதல் வயப்படுபவராகவும், 1977ல் அமர் அக்பர் அந்தோனியில் நேரத்திற்கேற்ற நகைச்சுவையாளராகவும், அதேபோல் 75ல் சுப்கே சுப்கேவில் நகைச்சுவை வேடத்திலும் சோபித்துக் காட்டினார். 1976ல் இயக்குநர் யாஷ் சோப்ராவின் இரண்டாவது படமான 'கபி கபி' காதல்படத்தில் அமிட்மல்ஹோத்ராவாகப் பூஜா என்ற ஓர் அழகான இளம்பெண் மேல் ஆழ்ந்த காதலில் விழுந்தவராக நடிகை ராக்கி குல்சாருடன் கவர்ச்சிகரமாக நடித்தார். உணர்வு பூர்வமான உரையாடல்கள் மிருதுவான கதைப்போக்கு அவரை கோபதாபம் மிக்க முந்தைய வீர வேடங்களைக் காட்டிலும் மாறுபடுத்திக் காட்டியது. மறுபடியும் பிலிம்பேர் சிறந்த நடிகருக்கான விருது! மறுபடியும் பாக்ஸ் ஆபீஸ் பெரும்வெற்றி! 1977ல் 'அமர் அக்பர் அந்தோணி' படத்துக்கான சிறந்த நடிகர் பிலிம்பேர் விருது கிடைத்தது. அதே அமர் அக்பர் அந்தோணி படத்தில் வினோத் கண்ணா மற்றும் ரிஷி கபூருடன் அந்தோணி கான்சால்வ்ஸ் பாத்திரத்தில் அனைவரையும் கவர்ந்தார். 1978ஆம் ஆண்டு இவரை வெற்றிவிழா நாயகராக மேல்நிலையில் உயர்த்தியது. அந்தவருடம் [10] இந்தியாவிலேயே அதிகபட்சமாக நடித்த பெருமை பெற்றார். தொடர்ந்த படங்களில் இரட்டை வேடங்களிலும் நடித்துத் தன் திறமையை வெளிப்படுத்தினார். கசம் வாடே யில் அமிட்-ஷங்கராக நடித்தார் 'டான்' படத்தில் தலைமறைந்து வாழும் நில உலக தாதாவாகவும், அவரைப் போன்ற உருவ அமைப்பைக் கொண்ட விஜய் பாத்திரமாகவும் நடித்தார். அந்த நடிப்பாற்றல் பிலிம்பேர் சிறந்த நடிகர் விருது பெறவைத்தது. அதேபோல் 'திரிசூல்' முகுட்டர் க சிகந்தர் படங்கள் இன்னும் பல விருதுகள் பெறவைத்தது. முன் எவரும் செய்யாத சாதனை, பெறாத வெற்றி இவர் பெற்ற காரணத்தால் பிரெஞ்சு இயக்குநர் பிரான்கோஇஸ் ட்ருபாட்[11] இவரை 'ஒருநபர் தொழிற்சாலை' என வியந்து பாராட்டினார்.

1979ல் மிஸ்டர். நட்வர்லால் படத்தில் இவரது குரல் இசைக்குரலாக ஒலித்தது. ரேகாவுடன் இணைந்து அதில் நடித்தார். அந்தப்படத்தால் இவர் பிலிம்பேர் சிறந்த நடிகருக்கான விருதுடன் சிறந்த ஆண் பாடகருக்கான விருதும் பெற்றார். அதே வருடம் வெளிவந்த 'காலா பாத்தர்' படத்துக்கான சிறந்த நடிகர்விருது பெற்றார். மறுவருடம் ராஜ் கோசல இயக்கிய 'தோஸ்தானா' படத்துக்காகவும் விருதுக்கு முன்மொழியப்பட்டார்! அப்படத்தில் சத்ருகன் சின்ஹா, ஜீனத் அமனுடன் சேர்ந்து நடித்தார். தோஸ்தானா அதிக மொத்த வசூல்பெற்ற பெருமை அந்தவருடம்1980[12] தந்தது. 1981ல் இசை இன்ப மயமான யாஷ்சோப்ராவின் படம் 'ஸில்ஸில்' மனைவி ஜெயாவுடனும் கிசுகிசுக்கப்பட்ட காதலி ரேகாவுடன் நடித்தார். 1980 முதல் 1982 வரை வெளிவந்த பிறபடங்கள், 'ராம்பல்ராம்' , 'ஷான்', 'லாவாரிஸ்' 'ஷக்தி' ஆகிய யாவும் ஈடில்லாத நடிகர் திலீப்குமாருடன் ஈடுகொடுத்து நடித்தார்.[13]

1982 'கூலி' படப்பிடிப்பில் பட்டகாயம் தொகு

1982ல் கூலிப் படத்தில் நடிக்கும் பொழுது சண்டைக் காட்சியில் புனீத் இஸ்ஸாருடன[14] மோதும் போது, உணவுக்குழாய் பாதிக்கும் வண்ணம் காயமடைந்தார். பச்சன் எப்போதும் சண்டைக் காட்சியில் அபாயகரமான காட்சி என்றாலும் தயங்காமல் நடிப்பார். ஒருகாட்சியில் மேசையில் விழுந்து தரையில் விழவேண்டும். மேசை மூலையின் கூர்முனை அவரது அடிவயிற்றை குத்திவிட்டது. அதிக அளவு குருதியும் கொட்டியது மண்ணீரல் முறிவு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் அவசரச்சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டார். மண்ணீரல் பாதிக்கப்பட்டிருந்தது உயிருக்கும் ஊசலாடும் நிலை! பல மாதங்கள் சிகிச்சை பெற வேண்டிய கட்டாயம்! இவர் நலம் விரும்பும் ரசிகர்கள் நீண்ட வரிசையில் மருத்துவ மனையில் நின்றிருந்தனர். இழந்த வலுமீண்டும் பெற [15] வேண்டினர். இவர் கணமாக மாதக் கணக்கில் ஆனது. உடல் நிலை சீராக ஓராண்டு ஆனது. பிறகே படப்பிடிப்பில் கலந்து கொண்டார். நீண்ட இடைவெளிக்குப்பின் 1983ல் வெளிவந்த கூலி படம் அந்த விபத்தையே விளம்பரமாகப் பயன்படுத்தியதால் மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ[16])வெற்றி பெற்றது

இயக்குநர் மன்மோகன் தேசாய் பச்சனின் விபத்திற்குப்பின் கூலி படத்தின் இறுதி முடிவை மாற்றினார். முதலில் இவரது பாத்திரம் படத்தின் இறுதியில் இறந்துவிடுவதக எழுதப்பட்டிருந்தது. இத் போலவே காட்சி அமைக்கபட்டிருந்தால் சற்றும் பொருத்தமற்றதாக இருந்திருக்கும் என்று இயக்குநர் கருதினார். நிஜவாழ்வில் மரணத்தின் விளிம்பைத் தொட்டுப் பிழைத்தவர் திரைப்படத்தில் மரண மடைந்திருந்தால் அது ஏற்புடையதாக அமைந்திருக்காதென்று எண்ணினார். படத்தில் அந்த சண்டைக் காட்சியில் அபாயக் கட்டத்தில் உறைந்து விடுவது போலக் காட்டினார். அந்தக் காட்சியில் முகப்புரை சேர்த்தார் அதன்படி நடிகர் அடிபட்ட நிகழ்ச்சி என்று குறிப்பிட்டிருந்தமையால் அந்த விபத்து அதிகவிளம்பரம் கொடுத்தது.[15]

பின்னாளில் அவருக்கு தசைநார்கள் பலவீன முற்ற நோய் உள்ளதாகக் கண்டறியப்பட்டது. எனவே திரைப்படத்துறையை விட்டு விலகி விட்டு அரசியலில் நுழைய முடிவுசெய்தார். அந்தக் கட்டத்தில் அவருக்கு அவநம்பிக்கை உணர்வு மேலோங்கியது. எனவே புதிய திரைப்படம் எப்படி வரவேற்கப்படுமோ என்ற மனக்கவலையை வெளிப்படுத்தினார். ஒவ்வொருபட வெளியீட்டின்போது அவர் எதிர்மறையாகவே சொல்லுவார்: 'ஹே! இந்தப் படம் தள்ளாடி வீழ்ச்சிபெறும்'(படம் தோல்வி காணும்) [17]

அரசியல் 1984-1987 தொகு

1984ல் அமிதாப் நடிப்புத்துறையில் இருந்து விலகிக்கொண்டு அரசியல் துறையில் குறுகிய காலத்திற்குள் நுழைந்தார் இவருடைய குடும்ப நண்பர் ராஜிவ் காந்தியின் ஆதரவே அதற்குரிய காரணமாகும். அலகாபாத் தொகுதியில் இவர் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டார். உத்தரப் பிரதேச முதலமைச்சரை எதிர்த்துப் போட்டியிட்டார். அப்பொதுத் தேர்தலில் எச். என். பகுகுணாவை அதிக பட்ச வாக்குகள் வித்தியாசம் காட்டி (68.2 சதவீதம் வாக்குகள்[18] வென்றார். ஆனாலும் இவரது அரசியல் வாழ்க்கை அதிக காலம் நீடிக்கவில்லை! மூன்றே ஆண்டுகளுக்குள் பதவியை ராஜினாமா செய்ய நேர்ந்தது. அரசியலே ஒரு குட்டை என்று சொல்ல நேர்ந்தது. இதற்குக் காரணம் இவரும் இவரது சகோதரரும் போபர்ஸ் பீரங்கி ஊழலில் தொடர்புடையவர்கள் என்று வெளிவந்த பத்திரிகைச்செய்தி இவரை நீதிமன்றம்[19] வரைப் போகச்செய்து. இதனால் தான் குற்றமற்றவர் என்று நிரூபிக்க வேண்டி இவர் பதவி விலகினார்.

இவரின் பழைய நண்பர் அமர் சிங் இவரின் ஏபிசிஎல் நிறுவனம் இழப்பைச் சந்தித்து பணநெருக்கடி ஏற்பட்டதால் உதவிசெய்தார். அதன்விளைவாக அமிதாப் நண்பரின் அரசியல் கட்சியை ஆதரித்தார் அந்த சமாஜ்வாடி கட்சியில் மனைவி ஜெயா சேர்ந்து பிறகு ராஜ்யசபா உறுப்பினரானார்.[20] மனைவிக்காக பச்சன் அவர் சேர்ந்துள்ள கட்சிக்கு அதாவது சமாஜ்வாதி கட்சிக்காக பல உதவிகள் செய்யலானார். விளம்பரங்கள் அளித்தல், அரசியல் போராட்டக்கூட்டங்கள் நடத்துதல் அதில் அடங்கும் இத்தகைய நடவடிக்கைகள் இவருக்கு தொல்லையில் போய் முடிந்தது. அதன்விளைவாக, நீதிமன்றங்கள் செல்ல வேண்டியதாயிற்று. பச்சன் தன்னை ஒரு விவசாயி [21] என்று கூறி, சட்டப்பூர்வமான எழுத்துப் படிவத்தில் குறிப்பிட்டிருந்ததாகவும் அது உண்மையல்ல என்று இவரை வழக்கில் சிக்கவைத்த சம்பவம் இவரை அலைக்கழித்தது.

பச்சனுக்கு எதிராகப் பத்திரிகைச் செய்திகள் வெளிவரத்த்தடையானது இவர் படத்துறையில் உச்சத்தில் இருந்த வருடங்களில் கொணரப்பட்டது. அதுவும் ஓரு 15 ஆண்டுக்காலமாக அது நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. 'ஸ்டார்டஸ்ட்' போன்ற திரைப்பட சம்பந்தப்பட்ட ஒருசில பத்திரிகைகள் அதற்கான காரணமாயின. தனது சுயகாப்பிற்காகவே 1989 இறுதி வரை[22] அவரது படப்பிடிப்புத் தளங்களுக்குப் பத்திரிகையாளர்கள் வரக்கூடாதெனத் தடுத்திருந்ததாக பச்சன் தரப்பில் சொல்லப்பட்டது.

மந்தநிலையும், ஓய்வும்: 1988-1992 தொகு

1988ல் பச்சன் மீண்டும் திரையுலகம் திரும்பினார். 'ஷாஹேன்ஷா' என்னும் பெயர்கொண்ட திரைப்படத்திற்காக அவர் பிரவேசித்தார். படத்திற்குப் பாக்ஸ்ஆபீஸ் வெற்றி கிடைத்தது. ஏனெனில் பச்சனின் மீள்வருகை[23] பற்றிய செய்தி பிரசித்தியே காரணமாகும்! ஆனால் இவ்வெற்றியோ அவருக்குத் தொடர்ந்து கிடைக்கவில்லை. அடுத்து வந்த படங்கள் தோல்வியைத் தழுவின. எனவே இவரது நட்சத்திரப்புகழ் ஒளிமங்கியது என்றாலும் 1991ல் 'ஹம்' என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்தார். அது அன்றைய சரிவைச் சரிக்கட்டுவதாக தோற்றத்தை அளித்தாலும், சொற்ப காலத்திற்குப்பின் மந்தகதி தொடர்ந்தது. பெருவெற்றிப்படங்கள் தராத நிலை நீடித்தாலும், ஒன்றைக் குறிப்பிட்டாகவேண்டும். இரண்டாம் தடவையாக பச்சன் தேசிய விருது வாங்கினார் அதுவும் இந்தக் காலகட்டத்தில்! 1990ல் வெளிவந்த 'அக்னிபாத்' என்ற நிழலுலக தலைவர் படத்திற்காக அது தரப்பட்டது! இந்த வருடங்களே இவர் திரையில் தோன்றிய கடைசி வருடங்கள் ஆகும். 1992ல் வந்த 'குடாகாவா ' படத்திற்குப்பின் பச்சன் ஐந்தாண்டு ஓய்வை தாமாகவே விரும்பி மேற்கொண்டார். 1994ல் தாமதம் தடங்கல்பட்டு வெளிவந்த 'இன்ஸானியாத்' படம் பாக்ஸ் ஆபீஸ் தோல்விப்படமாகவே அமைந்தது.[24]

தயாரிப்பாளர் மற்றும் நடிகராக மறு பிரவேசம் : 1996-1999 தொகு

பச்சன் தன் தாற்காலிக ஓய்வுகாலத்தில் படத்தயாரிப்பாளராக மாறினார். ஆங்கில அகரவரிசைப்படி ஏபிசி லிமிடெட் கம்பெனியை 1996ல் தொடங்கினார்.(அமிதாப் பச்சன் கார்பரேஷன் கம்பெனி) அவரது தொலை நோக்கின் படி 10 பில்லியன் (கிட்டத்தட்ட 250 அமெரிக்க டாலர்கள்) 2000 வருடத்திற்குள் குவிய வேண்டும். ஏபீசிஎல் வரைமுறைத்திட்டத்தின் படி, இந்திய நாட்டு கேளிக்கைத் உலகில் தயாரிப்பு, சேவைப் பணிகள் உள்பட தேசிய அளவில் விரிவாக்கபடவேண்டும். முக்கியமாக வர்த்தகத் திரைப்படங்கள் தயாரித்தல், விநியோகம் செய்தல், ஒலிநாடக்கள், கானொலி குறுந்தகடுகள் உற்பத்தி செய்தல், தொலைக்காட்சி மென்பொருள்கள் சந்தைக்கு கொண்டு வருதல், நிகழ்ச்சி மேலாண்மை என்ற பற்பல செயல் திட்டங்கள் கொண்டு 1996ல் நிறுவனம் உருவாக்கப்பட்டது. உருவான உடனே நிறுவனத்தின் முதல்திரைப்படம் வந்தது. அதன் முதல்படம் 'தேரே மேரே சப்னே' வசூலில் வெற்றி பெறவில்லை! ஆயினும் அர்ஷாத் வார்சி மற்றும் தென்னாட்டில் சிம்ரன் போன்ற நட்சத்திரங்கள் உதயமாக அது வழிவகுத்தது. பின்னரும் இவரின் நிறுவனம் ஒருசில படங்கள் தயாரித்தும் அதில் ஒன்று கூட உருப்படியான பலன்தரவில்லை. ஏபிசிஎல் தயாரிப்புகள் எதிர்பார்த்தபடி வெற்றிகரமாக அமையவில்லை.

1997ல் தனது நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட படம் 'மிரிட்யூதத்தா ' மூலமாக பச்சன் மறுவருகை செய்தார் மிரிட்யூதத்தா இவரால் ஏற்கனவே செய்யப்பட்ட சாதனைகளுக்கான அங்கீகாரம் அளிப்பினும் இவரை அதிரடி நாயகன் என்று ஏற்றுக்கொண்டாலும் அப்படம் விமர்சனம் மற்றும் வியாபார ரீதியில் தோல்வியே தந்தது. 1996ல் இல் முக்கியப் பொறுப்பேற்று பெங்களுரில் நிகழ்த்திய உலகப்பேரழகியர் அணிவரிசை அரங்கம் பலமில்லியன் பேரிழப்பை பச்சனுக்குத் தந்தது! நிதிநெருக்கடிகள் உடன் வழக்கு விவகாரங்கள் பற்பல நிறுவனத்தைச் சூழ்ந்து கொண்டன! அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பலபுகார்கள் வந்தன. முக்கியமாக உயர்நிலை மேலாளர்களுக்காக மிக அதிகப்பட்ச சம்பளம் 1977ல் வழங்கப்பட்டது கம்பெனியில் வீழ்ச்சிக்கு அடிகோலியது என்பதே ஆகும். மேலும் இந்தியத் தொழில்களின் கழகம் அதை ஓரு தோல்வி நிறுவனமாகவே அறிவித்தது. கம்பெனி நிர்வாகமும் அதற்குரிய காரணமாயிற்று. 1999ல் பச்சன் இவரது மும்பை பங்களாவையே (பிராக்தீட்ஷா) விற்க முனைந்தபோது பாம்பே உயர்நீதிமன்றம் அதற்குக்கட்டுப்பாடு விதித்தது. ஏற்கனவே கனரா வங்கியிடம் பெறப்பட்ட கடன்கள் நிலுவையில் இருப்பதும் அதற்குரிய காரணமாக அமைந்தது. எனினும் பச்சன் தனது பங்களாவை விற்காது சஹாரா இந்திய நிதி நிறுவனத்திடம் அடமானம் வைத்திருப்பதாக நீதிமன்றத்தில் மன்றாடினார். அதுகூட இவர் நிறுவனத்தின்[25] நிதிநிலை மேம்படவே அவ்வாறு செய்திருப்பதாக முறையிட்டார்.

பச்சன் நடிப்புத்தொழில் வாழ்க்கையைப் புதுப்பிக்க வேண்டி துறையில் மும்முரமானார். 1988ல் வெளிவந்த அவர் படம் 'பேடே மியான் சோடே மியான்' [24] சுமாரான வெற்றியைப் பெற்றுத் தந்தது. அதேபோல் 1999ல் வெளிவந்த 'சூர்யவன்சம்' [26] நேர்முகமான மதிப்புரைகளே ஈட்டியது. அதே வருடத்தில் வெளியிடப்பட்ட 'லால் பாட்ஷா' மற்றும் 'ஹிந்துஸ்தான் கி கஸம்' போன்ற படங்கள் பாக்ஸ் ஆபீஸ் தோல்வியே கண்டன.

தொலைக்காட்சிப் பணிவாழ்க்கை தொகு

2000ம் ஆண்டில் பச்சன் பிரபல பிரித்தானிய தொலைக்காட்சி ஆட்டமான 'யார் மில்லியனராக விரும்புவது?' என்பதை மாதிரியகக் கொண்டு இந்தியில் நடத்தபட்ட 'கவுன் பனேகா குரோர்பதி' நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முன் வந்தார். பிறநாடுகளைப் போலவே (கவுன் பனேக க்ரோர்பதி) நிகழ்ச்சி துவக்கத்திலேயே இமாலய வெற்றிகண்டது. நவம்பர் 2000ல் கனரா வங்கி இவருக்கு எதிராக தொடுத்த சட்டபூர்வமான வழக்கு விலக்கிக்கொள்ளப்பட்டது. இவ்வாறான கனரா வங்கியின் செயல்பாடு பச்சனுக்கு உதவிகரமாக அமைந்தது. மேலும் இவரே தொகுத்து வழங்கி 2005 நவம்பர் நிகழ்ச்சியை நடத்திக்கொடுத்தார். அந்த வெற்றி இவருக்குரித்தான சினிமாப்புகழை மீட்டுத் தந்தது. 2009ல் வெளிவந்த 'ஸ்லம்டாக் மில்லியனர்' (ஸ்லம்டாக் மில்லியனர்) படம் ஆஸ்கார் விருது வென்றது அனைவரும் அறிந்ததே! அந்த வார்த்தை விளையாட்டில் எழுப்பப்பட்ட துவக்கவினா: யார் கோட்டீஸ்வரன் ஆவது? 'ஜன்ஜீர் படத்தின் நாயகன் யார்?' என்பதேயாகும். அந்த வினாவிற்குரிய சரியான விடை அமிதாப்பச்சன்!! பெரோஸ்கான் ; அமிதாப்பச்சனாக ஒருகாட்சித் தோற்றமளித்தார். அனில்கபூரோ போட்டியின் உபசரிப்பாளராகத் தோன்றினார் விக்கி

முக்கியத்துவம் நோக்கி மீண்டும்வருகை: 2000 முதல் தற்காலம்வரை தொகு

2000 மே மாதம் 7ஆம் நாள் பச்சனின் தோற்றத்தோடு வெளிவந்த யாஷ் சோப்ராவின் வெற்றிப் படமான 'மொஹாபத்தீன்' ஆதித்ய சோப்ரா இயக்கினார். நடிகர் ஷத்ருகன் சின்ஹாவிற்கு நடிப்பில் போட்டியாக பச்சன் அப்படத்தில் வயதான கண்டிப்பானவரான பாத்திரத்தைச் சித்திரித்துக்காட்டினார். பச்சன் குலபதியாக அதாவது குடும்ப முதல்வனாக நடித்து வெற்றிபெற்ற பிற ஹிட் படங்களாவன: ஏக்ரஸ்தா , தி பாண்ட் ஆப் லவ் (2001), கபி குஷி கபி காம் (2001), பாக்பன் (2003) இவ்வாறு நடிகராகத் தொடர்ந்து பல்வேறுபட்ட பாத்திரங்களில் இவர் தோன்றியமையால் வெகுவானப் பாராட்டுதல்கள் பெறலாயினார். அக்ஸ் (2001), ஆங்கன் (2002), காக்கி (2004),தேவ், பிளாக் (2005) போன்ற படங்கள் அவ்வரிசையில் இடம்பெற்றன. இந்தப் புத்தெழுச்சியின் பலாபலனாக அமிதாப் பலதரப்பட்ட தயாரிப்புகள், சேவைகளில் தொலைக்காட்சி மற்றும் விளம்பர ஒளிப்பதாகைகள் போனவற்றில் மும்முரமாக ஈடுபட்டார். 2005 மற்றும் 2006ல் இவர் தன்மைந்தன் அபிஷேக்குடன் பல வெற்றிப் படங்கள் சேர்ந்தளித்தார், அவையாவன: பண்ட்டி அவுர் பப்லி (2005), தி காட்பாதர் போன்ற சர்க்கார் (2005), கபி அல்விடா நா கெஹ்னா (2006) எல்லாமே பாக்ஸ்ஆபீஸ் வெற்றிப்படங்களாகும்.[27][28] இவரது அடுத்த வெளியீடுகள் 2006. 2007 வருடங்கள்:பாபுல் (2006)[29]ஏக்லவ்யா நிஷாப்த் (2007) போன்ற பாக்ஸ் ஆபீஸ் வெற்றி பெறவில்லையாயினும் இவரது நடிப்பாற்றல் அப்படங்களில் நன்கு வெளிப்பட்டதாக விமர்சனதாரிகள் கருத்து அபிப்பிராயங்கள் கூறினார்.[30] மேலும் கன்னடப்படமான அம்ருத்ததாரே படத்தில் கௌரவத்தோற்றத்தில் தோன்றினார். அப்படம் நாகத்திஹல்லி சந்திரசேகரால் இயக்கப்பட்டதாகும்.

இவரது மற்ற இருதிரைப் படங்களான சீனி காம் உடன் பல புகழ் பெற்ற நடிகர்கள் நடித்த திரைப்படம் ஷூட்அவுட் அட் லோகண்ட்வாலா 2007 மே மாதம் வெளிவந்தன. இரண்டாம் படம் ஷூட்அவுட் அட் லோகண்ட்வாளா பாக்ஸ் ஆபிஸில் வசூலில் நன்றாகப் போய் வெற்றி என்றும் அறிவிக்கப்பட்டது. முதலாம் திரைப் படம் சீனி காம் தாமதாகத் தொடங்கிய பிறகு ஈடு கட்டவே மொத்தத்தில் சராசரி வெற்றி திரைப்படம் என்றே அறிவிக்கப்பட்டது.[31]

2007 ஆகஸ்டில் இமாலய வெற்றி பெற்ற 'ஷோலே' வின் மறுபதிப்பு 'ராம் கோபால் வர்மா கி ஆக்' பாக்ஸ் ஆபீஸில்[31] பாதாளச்சரிவாக படுதோல்வி கண்டதால் விமர்சனதாரிகளின் பார்வையிலும் பரிதாபகரமே தென்பட்டது.

இவரின் முதலாவது ஆஙகிலப்படம் ரீட்டுபர்னோ கோஷின் 'தி லாஸ்ட் லியர்' 2007 செப்டம்பர் 9 அன்று டோரன்டோவில் நிகழ்ந்த சர்வதேசத் திரைப்பட விழாவின் முதல்வெளியீட்டுக் காட்சியின் பொழுது நேர்முகப்பாராட்டுதல்கள் விமர்சனதாரிகளிடமிருந்து பெற்றது. அப்படம் இவரது பிளாக் [32] படத்திற்குப்பின் நடிப்பில் மிகச்சிறந்ததென்று உயர்த்திக் கூறினர். பச்சன் தனது முதல் உலகளாவிய திரைப்படத்தில் துணைக்கதாபாத்திரத்தில் நடித்தார். 'ஷாந்தாராம்' என்ற அந்தப் படத்தை மிரா நாயர் இயக்க, ஹாலிவுட் பிரபலநடிகர் ஜானி டெப்ப் முக்கியப்பாத்திரத்தில் நடித்தார். படப்பிடிப்பு 2008 பிப்ரவரியில் தொடங்கவேண்டியது ஹாலிவுட் கதை ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தால் செப்டெம்பரில் நிகழ தள்ளிப் போடப்பட்டது.[33]

'பூத்நாத்' என்ற படத்தில் தலைப்பிற்கேற்ற பேய் வேடத்தில் இவரே நடித்தார். 2008 மே 9 அன்று அதுவெளியானது. ஜூன் 2008ல் 'சர்க்கார் ராஜ்' படம் இவரின் 2005 'சர்க்கார் ' படக்கதையின் பின்தொடர் கதையாக அமைந்தது. அது பாக்ஸ் ஆபீஸில் நேர்முக ஆதரவுபெற்றது.

2008 டிசம்பர் 8 அன்று லைவ் எர்த் இந்திய 2008 நிகழ்ச்சியில் ஜோன் போன் சோவியுடன் தொகுத்து வழங்கி பங்கு கொண்டார். பம்பாயில் அது நடைபெற்றது.

2009 ஜனவரி, 26ல் மும்பை அந்தேரியில் திறக்கப்பட்ட கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனை[34] விழாநாளில் முதன்மை விருந்தினராகப் பங்கேற்று பெருமைப் படுத்தினார்.

குரல் தொகு

பச்சன் ஆழ்ந்த ஏற்ற இறக்கம் காட்டும் குரல்வளத்தைக் கொண்டவர் ஆவார். அந்தநேர்த்தியான குரலால் கதைசொல்லி, பின்னணிப் பாடகர், நிகழ்ச்சி வழங்குநர் ஆகிய பலபணிகளை மேற்கொண்டார். புகழ்பெற்ற வங்க இயக்குநர் சத்தியஜித் ரே இவரது அபாரக்குரல் அழகின்மேல் நல்ல அபிப்பிராயம் கொண்டிருந்ததால், தன் 'ஷத்ரன்ஜ் கி கிலாடி' படத்திற்காக விளக்க உரையாளராகப் பயன்படுத்திக்கொண்டதும் பெருமைதரும் சம்பவமாகும். அப்படத்தில் அமிதாப்பிற்கேற்ற வேடம் [35] அமைந்தது. இதில் குறிப்பிடவேண்டிய செய்தி என்னவெனில் பச்சன் திரைபடத்துறைக்கு வருமுன் அனைத்திந்திய வானொலி அறிவிப்பாளர் வேலைக்கு விண்ணப்பம் செய்து நிராகரிக்கப்பட்டவர் ஆவார்.

முரண்பாடுகளும் விமர்சனங்களும் தொகு

பாராபங்கி நிலபேர வழக்கு தொகு

2007ல் ஆட்சிப்பிடிக்க உத்திரப்பிரதேசத்தில் நடைபெற்ற மாநில சட்டமன்றத்தேர்தலில் பச்சன் முலாயம் அரசின் சாதனைகளை விளக்கி ஒருதிரைப்படம் உருவாக்கினார். எனினும் அத்தேர்தலில் சமாஜ்வாடிக்கட்சி தோல்விகண்டு மாயாவதி பதவிக்கு வந்தார்.

நிலமற்ற தலீத் விவசாயிகள்[36] வசமிருந்த விவசாய நிலத்தை அமிதாப் வாங்கியுள்ளார் என்ற காரணத்தால், 2007 ஜூன் 2ல் பைஸாபாத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது . போலி ஆவணம் தயாரித்ததாக அவர்மீது குற்றம் சுமத்தப்படும் என்ற வதந்தியும் கிளம்பியது. அவர் தன்னை ஒரு விவசாயி[37] என்று கூறியதாகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. 2007 ஜூலை 19ல் அவதூறு கிளம்பியதால் அமிதாப் உத்தரபிரதேசம் பாரபங்கி மற்றும் புனே நிலன்களை திருப்பி அளித்தார். அதுமட்டுமின்றி மகாராஷ்டிர முதலமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக்கிற்கு பூனாவில் உள்ள தனது நிலங்களை [38] தானமாக வழங்கிவிட கடிதம் எழுதி அனுப்பினார். ஆயினும் லக்னோ நீதிமன்றம் தடை ஆணை பிறப்பித்து நில நன்கொடையை நிறுத்தச் செய்தது. ஏற்கனவே இருந்த நிலையையே மறுபடி நிலைநிறுத்த ஆணை பிறப்பித்தது.

2007 அக்டோபர் 12ல் பச்சன் பாராபங்கி மாவட்டம்[39] தவுலத்புர் கிராமத்தில் உள்ள நிலத்தின்மேல் இருந்த உரிமையைக் கைவிட்டார். 2007 டிசம்பர் 11ல் அலகாபாத் உயர்நீதிமன்றம் லக்னோ பெஞ்சு அவரை குற்றமற்றவர் என்று ஒப்புக்கொண்டு பாராபங்கி மாவட்டத்தில் பச்சனுக்கு முறைகேடாக நிலம் வழங்கப்படவில்லை என்று தீர்ப்பளித்தது. லக்னோவில் ஒற்றை நீதிபதி கொண்ட அமர்வு தெரிவித்த கருத்தின்படி, பச்சன் மீது எந்த முகாந்திரமும் இல்லை வருமானத்துறைப் பத்திரங்கள் போலியாகவும் தயாரிக்கப் படவில்லை எனவும் அவர் அத்தகைய ஆவணங்களில் ரகசியமாக எதையும் பதிவு செய்யவில்லை எனவும் தெரிவித்தது [40][41](85)

பாரபங்கி நிலசம்பந்தாக நல்ல சாதககமான தீர்ப்பு வந்ததும் அமிதாப் பச்சன் மகாராஷ்டிர அரசாங்கத்திற்கு மறுபடி கடிதம் எழுதினார் அதன்படி பூனா மாவட்ட மாவல் தேசில் இடத்தில் [42] உள்ள தனது நிலத்தை ஒப்படைக்க விரும்பவில்லை என்று தனது கருத்தைத் தெரிவித்தார்.

ராஜ்தாக்ரேயின் கண்டனம் தொகு

 
விளம்பரத்துக்காக அமிதாப் பச்சன் இந்திய வணிக வளாகத்தில் தோன்றியது.

2008 ஜனவரியில் அரசியல் பேரணி ஒன்றில் ராஜ்தாக்ரே தன் நவநிர்மாண சேனா ஆதரவாளர்கள் முன்னிலையில் அமிதாப்பை குறிவைத்து கண்டனக்கணை தொடுத்தார்! 'வசிப்பதோ மகாராஷ்டிரம் ஆனால் வளர்ப்பதோ சொந்தமாநிலம்' என்று சாடினார்! உத்திரப் பிரதேசத்தில் பாராபங்கியில் ஒரு பள்ளிக் கூடத்தை தன்மருமகள் நடிகை ஐஸ்வர்ராயின் பேரில் தொடங்கியது அவருக்கு எரிச்சலூட்டியது. மகாராஷ்டிரத்தில்[43] இல்லாமல் உத்திரப்பிரதேசத்தில் தொடங்கியது அவருக்குப் பிடிக்கவில்லை! ஆனால் அதற்கு அடிப்படை காரணம் உண்டு அதாவது, தன்மகன் அபிஷேக் ஐஸ்வர்யாராயின் திருமணத்திற்கு பால்தாக்கரே மற்றும் உத்தவ்விற்கு[44][45] அழைப்பிதழ் தந்துவிட்டு ராஜ்தாக்ரேவுக்கு கொடுக்காததால் ஏற்பட்ட மனக்கசப்பே காரணம் ஆனது.

ராஜ்தாக்ரேயின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் தரவேண்டி, பச்சனின் மனைவி ஜெயா பச்சன் தாங்கள் மும்பையிலும் பள்ளி தொடங்கத்தயார் எனவும் அதற்கு உரிய நிலம் ராஜ்தாக்ரே அளித்துதவவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். 'நான் கேள்விப்பட்டுள்ளேன் ராஜ்தாக்ரேவிற்கு மும்பையில் அதிக உடைமைகள் உள்ளது கோகினூர்மில்கள் உள்பட!' 'எனவே அவர் விரும்பினால் நிலம் நன்கொடையாக வழங்கினால் ஐஸ்வர்ராயின் பேரில் பள்ளி இங்கே தொடங்குவோம் என்றார்.[46] மனைவியின் இந்தப் பதில் பற்றி அமிதாப் விளக்கம் ஏதும்சொல்லாமல் நழுவிவிட்டார்.

இதற்கு உடனடிப் பதிலடியாக பால் தாக்ரே மறுத்துப் பேசினார்: ' அமிதாப் பச்சன் திறந்தமனதுடைய சிறந்தமனிதர் ஆவார். அவருக்கு மகாராஷ்டிரா மீது: அதிக அன்புண்டு. பலநிகழ்ச்சிகள் வாயிலாக அவர் அதை வெளிப்படுத்தியுள்ளார். அடிக்கடி அவரே மகாராஷ்ட்ரா அதுவும் மும்பைதான் அவருக்கு புகழும் அன்பும் கொடுத்துள்ளது. அவரே சொன்னதாவது 'நான் இன்றிருக்கும் இந்த நிலைக்குக் காரணம் மும்பை மக்கள் சொரிந்த அன்புப்பெருக்கே ஆகும்' எனவே மும்பைவாசிகள் அவரை ஓரு கலைஞனாகவே காண்கின்றனர். எனவே அவர்மீது குறுகிய நோக்கம்கொண்ட குற்றச்சாட்டுக்கள் அள்ளிவீசுதல் மடைமையேயாகும். மேலும் அவர் அகில உலகம் அளாவிய சூப்பர்ஸ்டாராவார். புவியெங்கும் மக்கள் அவர்மீது மதிப்புமரியாதை வைத்துள்ளனர். இது யாராலும் மறுக்காத ஒன்றாகும். அமிதாப் இப்படிப்பட்ட அற்பக் குற்றச்சாட்டுக்கெல்லாம் பாதிக்கப்படாத வண்ணம் தனது நடிப்பின் மீது பெரும் அக்கறையைத் தொடர்ந்து செலுத்தவேண்டும்'[47]

2008 மார்ச் கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்தபின்னரே ராஜ்தாக்ரேயின் கண்டனத்திற்கு இறுதியில் அமிதாப் பதில் அளித்தார். உள்ளூர் செய்தி நிறுவனத்திற்கு தந்த செவ்வியின் போது சொன்னதாவது: அங்கொன்றும் இங்கொன்றும் சொல்லும் குற்றச்சாட்டுகள் வெறும் குற்றச்சாட்டுகள் மட்டுமே, இவை கவனத்திற்கு உகந்ததவை அல்ல.[48] அகில உலக இந்திய பிலிம் அகாடமி செய்தியாளர் கூட்டத்தில் வேறு மாநிலத்துக்கு குடியேறும் பிரச்சினை பற்றி கேட்ட போது அமிதாப் சொன்னார்: அது ஒவ்வொருவருடைய ஜீவாதர உரிமையாகும்[49] அரசியல் சாசனப்படி யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் சென்று வசிக்கலாம் இவர் மேலும் சொன்னார்: ராஜ்தாக்ரேயின் விமரிசனங்கள் தன்னை பாதிக்கவில்லை என்றார்.[50]

திரைப்படக்கலை தொகு

அண்மையில் வெளிவந்த திரைப்படங்கள் தொகு

வருடம் படம் பாத்திரம் பிற குறிப்புகள்
2006 பேமிலி வீறேன் சாஹி
தர்ணா ஜரூரி ஹேய் பேராசிரியர்
கபி அல்விதா நா கெஹனா சமர்ஜிட் சிங்க் அக செக்ஸ்ய் சாம் செக்ஸ்ய் சாம் பரிந்துரை , பில்ம்பேர் சிறந்த துணை நடிகர் விருது
பாபுல் பால் ராஜ் கபூர்
2007 எக்லாவ்ய :தீ ராயல் கார்ட் எக்லாவ்ய
நிஷப்த்து விஜய்
சீனி காம் புத்ததேவ் குப்தா
சூட் அட் லோகண்ட்வள திங்கற சிறப்பு தோற்றம்
ஜூம் பாரபர் ஜூம் சூத்திரடர் சிறப்பு தோற்றம்
ராம் கோபால் வர்மா கி ஆக பாபன் சிங்க்
ஓம் ஷாந்தி ஓம் அவரே சிறப்பு தோற்றம்
2008 ஜோதா அக்பர் கதை சொல்பவர்
பூத்நாத் பூத்நாத் (கைலஷ்ணத் )
சர்க்கார் ராஜ் சுபாஷ் நகர் சரகர்
காட் துசி கிரேட் ஹோ கடவுள் எல்லாம் வல்லார்
தி லாஸ்ட் லியர் ஹரிஷ் ஹர்ரி மிஸ்ரா வென்றார் , ஸ்டார் டஸ்து விருது
2009 டெல்லி 6 ததஜீ சிறப்பு தோற்றம்
அலாதின் ஜின் தயாரிப்புக்கு பிந்தைய பணிகள்
ஜானி மஸ்தானா ஜோன் பிரைர தயாரிப்புக்கு பிந்தைய பணிகள்
ஜமானத் சிவ ஷங்கர் தாமதம்
டாலிஸ்மான் படப்பிடிப்பில்
பா பிளிமிங் /பின் தயாரிப்பு . வெளியீடு நவம்பர் 14 2009 தகவல் : இந்தபடத்தில் அப்சேக்க்பச்சன், வித்திய பாலன் ஆகியோருக்கு மகனாக அமிதாப் நடிப்பதார்.
தீன் பட்டி பின் தயாரிப்பு

தயாரிப்பாளர் தொகு

வருடம் படம்
1996 தேரே மேரே சப்னே
1997 உல்லாசம்
மிரித்யூடாட
1998 மெஜொர் சாஹிப்
2001 அக்ஸ்
2005 விருத்
2006 குடும்பம்: குருதி உறவுகள்

பின்னணி பாடகர் தொகு

வருடம் படம்
1979 தி கிரேட் கேம்ப்லெர்
மிஸ்டர் நட்வர்ளால்
1981 லாவாரிஸ்
நசீப்
சில்சில
1983 மகா ன்
புக்கர்
1984 ஷராபி
1989 தூபான்
ஜாதுகர்
1992 {/{0}குதா கவா 0}
1998 மேஜர்சாஹிப்
1999 சூரியவன்ஷம்
2001 அக்ஸ்
கபீ குஷி கபீ காம்
2002 ஆன்கேன்
2003 அர்மான்
பக்த்பன்
2004 தேவ்
எய்த்பர்
2006 பாபுல்
2007 நிஷப்த்
சீனி காம்
2008 பூத்நாத்

கூடுதல் வாசிப்பு தொகு

குறிப்புகள் தொகு

  1. [4] ^அமிதாப் : கோபக்கார பரணிடப்பட்டது 2009-05-05 at the வந்தவழி இயந்திரம் வாலிபன்
  2. 2.0 2.1 [5] ^திரைப்படம் பழையபுராணம் பாலிவுட்டை மேம்பாடு செய்தல்
  3. 3.0 3.1 "sugandh.com". Sugandh.com. பார்க்கப்பட்ட நாள் 2008-11-13.
  4. "Reviews on: To Be or Not To Be Amitabh Bachchan - Khalid Mohamed".
  5. "Bachchan wins his first national award". India Times. Archived from the original on 13 அக்டோபர் 2007. பார்க்கப்பட்ட நாள் 11 March 2007.
  6. இந்திய பாக்ஸ் ஆபீஸ் [13] ^
  7. "Box Office 1975". BoxOffice India.com. Archived from the original on 2012-07-20. பார்க்கப்பட்ட நாள் 2009-08-19.
  8. 8.0 8.1 Kanwar, Rachna (October 3, 2005). "25 Must See Bollywood Movies". Indiatimes movies. Archived from the original on 2018-12-24. பார்க்கப்பட்ட நாள் 2007-12-06.
  9. "Sholay". International Business Overview Standard. Archived from the original on 2012-06-30. பார்க்கப்பட்ட நாள் 2007-12-06.
  10. "Bachchan's historic 1978 year at the box office". ibosnetwork.com. பார்க்கப்பட்ட நாள் 1 February 2008.[தொடர்பிழந்த இணைப்பு]
  11. "Truffaut labeled Bachchan a one-man industry". China Daily. Archived from the original on 1 பிப்ரவரி 2008. பார்க்கப்பட்ட நாள் 1 February 2008. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  12. [25] ^ இந்திய பாக்ஸ்ஆபீஸ் .காம்
  13. "Bachchan's box office success". boxofficeindia.com. Archived from the original on 29 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 10 April 2007.
  14. "Bachchan injured whilst shooting scene". rediff.com. பார்க்கப்பட்ட நாள் 11 March 2007.
  15. 15.0 15.1 "Footage of fight scene in Coolie released to the public". IMDB. பார்க்கப்பட்ட நாள் 11 March 2007.
  16. "Coolie a success". boxofficeindia.com. Archived from the original on 14 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 11 March 2007.
  17. Mohamed, Khalid. "Reviews on: To Be or Not To Be Amitabh Bachchan". mouthshut.com. பார்க்கப்பட்ட நாள் 11 March 2007.
  18. "Amitabh Bachchan: Stint in Politics". HindustanTimes.com. Archived from the original on 2015-01-13. பார்க்கப்பட்ட நாள் 2005-12-05.
  19. "Interview with Amitabh Bachchan". sathnam.com. Archived from the original on 2018-12-24. பார்க்கப்பட்ட நாள் 2009-08-19.
  20. [41] பச்சன் தேர்தல் திட்டங்கள் எதுவும் வைத்திருக்கவில்லை." ஹிந்து.காம் பரணிடப்பட்டது 2007-09-30 at the வந்தவழி இயந்திரம்
  21. "Bollywood's Bachchan in trouble over crime claim". AFP. October 4, 2007. Archived from the original on ஜனவரி 16, 2008. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 13, 2022. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  22. [44] "பச்சன் மீது பதினைந்து ஆண்டு தடை இந்தியன் ஏப் எம் நியூஸ் பீரோ ஜனவரி இருபத்தியேழு "பச்சன் மீது பதினைந்து ஆண்டு தடை" இந்திய எப் எம் நியூஸ் பீரோ. ஜனவரி 27 2007
  23. "Top Actor". www.boxofficeindia.com/topactors.htm. Archived from the original on 2013-10-29. பார்க்கப்பட்ட நாள் 2009-08-19.
  24. 24.0 24.1 "Box Office 1994". Box Office India. Archived from the original on 2013-01-07. பார்க்கப்பட்ட நாள் 2009-08-19.
  25. Patil, Vimla (March 4, 2001). "Muqaddar Ka Sikandar".
  26. Taliculam, Sharmila. "He's back!".
  27. "Amitabh and Abhishek rule the box office". Box Office India. Archived from the original on 30 ஜூன் 2012. பார்க்கப்பட்ட நாள் 11 March 2007. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  28. "Box Office 2006". Box Office India. Archived from the original on 25 மே 2012. பார்க்கப்பட்ட நாள் 11 March 2007.
  29. "Films fail at the BO". Box Office India. Archived from the original on 2012-05-25. பார்க்கப்பட்ட நாள் 2009-08-19.
  30. Adarsh, Taran. "Top 5: 'Nishabd', 'N.P.D.' are disasters". Bollywood Hungma. Archived from the original on 24 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 26 March 2007. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  31. 31.0 31.1 "Box Office India".
  32. "This is Amitabh's best performance after Black".
  33. "Amitabh Bachchan to star with Johnny Depp". ourbollywood.com. Archived from the original on 1 ஏப்ரல் 2007. பார்க்கப்பட்ட நாள் 11 March 2007. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  34. Bhayani, Viral (27 January 2009). "Amitabh, Jaya and Aishwarya at launch of Ambani Hospital". Radio Sargam. http://www.radiosargam.com/films/archives/32372/amitabh-jaya-and-aishwarya-at-launch-of-ambani-hospital.html. பார்த்த நாள்: 27 January 2009. 
  35. }75 இன்துஸ்தான்டைம்ஸ்.இன் அமிதாப் குரல் ஷடின்றஞ் கே க்சிலடி. ஹிந்துஸ்தான் டைம்ஸ்.ஹிந்துஸ்தான் டைம்ஸ்
  36. Sanket Upadhyay (2007-06-01 (Faizabad)). "Land row: Setback for Bachchan". என்டிடிவி இம் மூலத்தில் இருந்து 2007-09-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070929141338/http://www.ndtv.com/convergence/ndtv/story.aspx?id=NEWEN20070014139. பார்த்த நாள்: 2007-06-03. 
  37. "Amitabh's land records look forged". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 2 Jun, 2007. http://timesofindia.indiatimes.com/Cities/Pune/Amitabhs_land_records_look_forged/articleshow/2093299.cms. 
  38. "Amitabh Bachchan is not a farmer: UP court". Rediff.com. June 1, 2007. பார்க்கப்பட்ட நாள் 2008-04-27.
  39. "Big B abandons claim on farmland". Times of India.
  40. [84] உயர்நீதி மன்றம் அமிதாப் பச்சனுக்கு நில சர்ச்சை வழக்கில் குற்றமற்றவர்" என்று தீர்ப்பு தந்தது. நடப்புகள்நியூஸ்:அபுங்கசொஇஸ்.காம்.டிசம்பர்,11 2007.நடப்புகள்நியூஸ்: டிசம்பர்12 2007
  41. [85] "உ.பி நிலபேர வழக்கில் அமிதாப் குற்றமற்றவர் ." பரணிடப்பட்டது 2009-03-07 at the வந்தவழி இயந்திரம். ஆல்பாலிவுட்.காம்"உத்தரபிரதேச நிலபேர வழக்கில் அமிதாப்பச்சன் குற்றமற்றவர் ." ஆல்பாலிவுட்.காம். டிசம்பர் 11 2007
  42. "No question of proceeding further on Amitabh's land: Rane". hindu.com. Archived from the original on 2009-02-01. பார்க்கப்பட்ட நாள் 2009-08-19.
  43. "Big B draws Raj Thakeray's ire over 'UP interests'". The Times of India. http://timesofindia.indiatimes.com/Big_B_draws_Raj_Thackerays_ire_over_his_UP_interests/articleshow/2750611.cms. பார்த்த நாள்: 2008-05-30. 
  44. "Rift between Raj and Big B over a wedding invite". Daily News & Analysis. http://www.dnaindia.com/report.asp?newsid=1149212. பார்த்த நாள்: 2008-04-04. 
  45. "Rift between Raj and Big B over a wedding invite". MSN. 2008 பிப்ரவரி 05 இம் மூலத்தில் இருந்து 2008-03-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080312103245/http://news.in.msn.com/national/article.aspx?cp-documentid=1226808. பார்த்த நாள்: 2008-04-04. 
  46. "I don't know who Raj Thackeray is: Jaya Bachchan". The Indian Express இம் மூலத்தில் இருந்து 2008-07-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080706144818/http://www.expressindia.com/latest-news/I-dont-know-who-Raj-Thackeray-is-Jaya-Bachchan/268548/. பார்த்த நாள்: 2008-05-30. 
  47. "Bal Thackeray: Amitabh loves Maharashtra". The Hindu. 2008 பிப்ரவரி 07 இம் மூலத்தில் இருந்து 2008-04-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080411201438/http://www.hindu.com/2008/02/07/stories/2008020759011200.htm. பார்த்த நாள்: 2008-04-04. 
  48. "Amitabh breaks silence, dismisses Raj's charges against him". Daily News & Analysis. http://www.dnaindia.com/report.asp?newsid=1157267. பார்த்த நாள்: 2008-04-04. 
  49. "The Indian Constitution allows me to live anywhere: Amitabh Bachchan". The Indian இம் மூலத்தில் இருந்து 2009-01-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090101042708/http://www.thaindian.com/newsportal/world-news/indian-constitution-allows-me-to-live-anywhere-in-the-country-amitabh-bachchan_10032279.html. பார்த்த நாள்: 2008-04-04. 
  50. "Everyone has the right to freedom of expression: Bachchan". The Hindu. 2008-03-28 இம் மூலத்தில் இருந்து 2008-04-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080401021514/http://www.hindu.com/thehindu/holnus/002200803281441.htm. பார்த்த நாள்: 2008-04-04. 

பிற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமிதாப்_பச்சன்&oldid=3924504" இலிருந்து மீள்விக்கப்பட்டது