அரச்சலூர்

அரச்சலூர், இந்தியாவின் தமிழ்நாட்டில், ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு பேரூராட்சி.

அரச்சலூர் (ஆங்கிலம்:Arachalur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில், ஈரோடு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இங்கு அறச்சலூர் இசைக்கல்வெட்டு உள்ளது.

அரச்சலூர்
—  பேரூராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் ஈரோடு
வட்டம் ஈரோடு
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

12,034 (201)

463/km2 (1,199/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 26 சதுர கிலோமீட்டர்கள் (10 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/arachalur

அமைவிடம் தொகு

ஈரோடு - பழநி சாலையில் அமைந்த அரச்சலூர் பேரூராட்சிக்கு வடக்கில் ஈரோடு 23 கி.மீ.; கிழக்கில் கரூர் 64 கி‌.மீ.; மேற்கில் கோவை 90 கி.மீ.; தெற்கில் காங்கேயம் 23 கி.மீ. தொலைவில் உள்ளன. அரச்சலூரில் தொடருந்து நிலையம் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு தொகு

26 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 76 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி மொடக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)க்கும், ஈரோடு மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [4]

மக்கள் தொகை பரம்பல் தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,667 வீடுகளும், 12,034 மக்கள்தொகையும் கொண்டது. [5]

சமண கல்வெட்டுகள் தொகு

ஆதாரங்கள் தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. அரச்சலூர் பேரூராட்சியின் இணையதளம்
  5. Arachalur Population Census 2011


"https://ta.wikipedia.org/w/index.php?title=அரச்சலூர்&oldid=3663019" இலிருந்து மீள்விக்கப்பட்டது