அவாமி தேசியக் கட்சி

பாக்கித்தான் அரசியல் கட்சி

அவாமி தேசியக் கட்சி ( பஷ்தூ: عوامي نېشنل ګوند , உருது: عوامی نيشنل پارٹی  ; சுருக்கம் : ANP ) என்பது பாக்கித்தானில் ஒரு மதச்சார்பற்ற மற்றும் இடதுசாரி பஷ்தூன் தேசியவாத அரசியல் கட்சி . இந்த கட்சியை 1986 ஆம் ஆண்டில் அப்துல் வாலி கான் என்வவர் நிறுவினார், இதன் தற்போதைய தலைவர் அஸ்பாண்டியார் வாலி கான் என்பவர் கான் அப்துல் கப்பார் கானின் பேரன் ஆவார், மியான் இப்திகார் உசேன் இதன் பொதுச்செயலாளராக பணியாற்றினார். 2008–13 காலப்பகுதியில் பாக்கித்தானிய அரசாங்கத்தில் பாக்கித்தான் மக்கள் கட்சி தலைமையிலான அவாமி தேசியக் கட்சியின் அரசியல் நிலைப்பாடு இடதுசாரிகளாகக் கருதப்பட்டது, இதுமதச்சார்பின்மை, ஜனநாயக சோசலிசம், பொதுத்துறை அரசாங்கம் மற்றும் பொருளாதார சமத்துவவாதம் ஆகியவற்றை ஆதரிக்கிறது. கைபர்-பக்துன்க்வா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பஷ்தூன் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் செல்வாக்குடன் 2008−2013 க்கு இடையில் பாக்கிஸ்தானில் மிகப்பெரிய பஷ்தூன் தேசியவாத கட்சியாக அவாமி தேசியக் கட்சி இருந்தது. அவர்கள் 2008-2013 வரை மாகாணத்தை ஆட்சி செய்தனர், ஆனால் 2013 சட்டமன்றத் தேர்தலில் பாக்கித்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியிடம் தோற்றனர்.

வரலாறு தொகு

கான் அப்துல் வாலி கானின் அரசியல் வாழ்க்கை அவரது தந்தை கான் அப்துல் கஃபர் கான் (பச்சா கான்) என்பவரிடமிருந்து பெறப்பட்ட தீவிரமான பஷ்தூன் தேசியவாதத்தின் பாரம்பரியத்தின் அடிப்படையில் கட்டப்பட்டது. இது இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் உருவாக்கப்பட்டது என்றாலும், பெரும்பாலான தலைவர்கள் இந்தியாவுக்கு ஆதரவானவர்கள், பாக்கித்தான் உருவாகுவதற்கு எதிரானவர்கள். அந்த காலகட்டத்தில் பெரும்பாலான தலைவர்கள் சுதந்திரத்திற்கு முன்னர் காங்கிரஸின் வலது கைகளாக செயல்பட்டனர். இருவருமே பாக்கித்தான் உருவாகுவதை எதிர்த்தனர், 1947 இல் பாக்கித்தானுக்கு சுதந்திரம் பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர் இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். 1956 ஆம் ஆண்டில் வாலி கான் ஒரு கவர்ந்திழுக்கும் வங்காள சோசலிசவாதியான அப்துல் ஹமீத் கான் பாஷானி தலைமையிலான தேசிய அவாமி கட்சியில் (என்ஏபி) சேர்ந்தார். 1965 ஆம் ஆண்டில் இக்கட்சி இரண்டு பிரிவுகளாகப் பிரிந்தது, வாலி கான் மாஸ்கோ சார்பு பிரிவின் தலைவரானார்.[1] கட்சியின் உறுப்பினர்கள் பாக்கித்தான் மக்கள் கட்சியின் தளம் மூலம் தேசிய அவாமி கட்சி 1970 நாடாளுமன்றத் தேர்தல்களில் பங்கேற்று, 1970 ல் சுல்பிகர் அலி பூட்டோவுடன் மிகப்பெரிய சோசலிச கூட்டணியை உருவாக்கினர். இருப்பினும், கூட்டணி பிரிந்து அதன் உறுப்பினர்கள் பாக்கித்தான் தேசிய கூட்டணியில் இணைந்தனர்.

1972 ஆம் ஆண்டில் கட்சிக் கூட்டணி மாகாண அரசாங்கங்களை அமைக்கும் அளவுக்கு வலுவாக இருந்தது, அதன் கூட்டாளர் கைபர் பக்துன்க்வா மற்றும் பலூசிஸ்தானில் ஜாமியத் உலமா-இ-இஸ்லாம் (JUI) கட்சியுடன். இந்த அரசாங்கங்கள் குறுகிய காலம் இருந்தன. வாலி கான் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார், பாக்கிஸ்தான் அரசுக்கு எதிராக அவாமி தேசியக்கட்சி சதி செய்கிறது என்று அதிபர் பூட்டோவின் குற்றச்சாட்டை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்தபோது அவரது கட்சி அரசியலில் இருந்து தடைசெய்யப்பட்டது. ஜெனரல் ஜியா-உல்-ஹக் பின்னர் அவாமி தேசியக்கட்சி மீதான குற்றச்சாட்டுகளை திரும்பப் பெற்றதையடுத்து வாலி கான் விடுவிக்கப்பட்டார், பின்னர் வாலி கான் தேசிய ஜனநாயகக் கட்சியில் சேர்ந்தார், இறுதியில் அவாமி தேசியக் கட்சியை உருவாக்கினார். இதற்கிடையில், அதிபர் பூட்டோ ஏப்ரல் 1979 இல் சிறையில் அடைக்கப்பட்டார் மற்றும் தூக்கிலிடப்பட்டார்.[1]

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 "Pakistan: A Country Study" (PDF). Library of Congress (U.S.). April 1994.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அவாமி_தேசியக்_கட்சி&oldid=2868595" இலிருந்து மீள்விக்கப்பட்டது