அ. சவுந்திரராசன்

இந்திய அரசியல்வாதி

அ. சவுந்திரராசன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)இன் மத்தியகுழு உறுப்பினர்.[2] பெரம்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராவார். 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]

அ.சவுந்திரராசன்
தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2011
தொகுதிபெரம்பூர்.[1]
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

பொதுவுடைமை இயக்கத்தில் தொகு

அ.சவுந்திரராசன் ஒரு பி.ஏ. பட்டதாரி. சென்னை மாநிலக் கல்லூரியில் படிக்கும் போதே மாணவர் சங்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். பின்னர் வி.பி.சிந்தன் போன்ற கம்யூனிஸ்ட் இயக்கத்தலைவர்களின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து, 1971-ஆம் ஆண்டிலிருந்து முழுநேர ஊழியராக பணியாற்றி வருந்தார்.ஃபாக்ஸ்கான் தொழிற்சாலைப் போராட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டு நீதிமன்றத்திற்கு கைவிலங்கிட்டு அழைத்துச் செல்லப்பட்டார் .[4]

மேற்கோள்கள் தொகு

  1. "தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் சுயவிபரகுறிப்பு". தமிழக அரசு சுயவிபரகுறிப்பு.
  2. Leadership, சிபிஐ(எம்), 13 அக்டோபர் 2011, பார்க்கப்பட்ட நாள் 13 அக்டோபர் 2013
  3. TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY (FOURTEENTH ASSEMBLY)LIST OF MEMBERS (PDF), Tamil Nadu Legislative Assembly, 2011, archived from the original (PDF) on 2012-03-20, பார்க்கப்பட்ட நாள் 14 அக்டோபர் 2013
  4. "அ. சவுந்தரராசன் - பெரம்பூர் தொகுதி". பார்க்கப்பட்ட நாள் 10 மே 2014.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._சவுந்திரராசன்&oldid=3942049" இலிருந்து மீள்விக்கப்பட்டது