ஆந்திரப் பிரதேச மகளிர் ஆணையம்

ஆந்திரப் பிரதேச மாநில மகளிர் ஆணையம் என்பது ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான பிரச்சினைகளைக் கையாள்வதற்காகவும், ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் பெண்களின் நிலையை மேம்படுத்துவதற்கும், பெண்களைப் பாதிக்கும் நியாயமற்ற நடைமுறைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய விஷயங்களை விசாரிப்பதற்கும் ஆந்திரப் பிரதேச மகளிர் ஆணையச் சட்டம், 1998 இன்படி 1998 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட ஒரு சட்டரீதியான அமைப்பாகும். [2]

ஆந்திரப் பிரதேச மகளிர் ஆணையம்
ஆணையம் மேலோட்டம்
அமைப்பு1993
ஆட்சி எல்லைஆந்திரப் பிரதேச அரசு
தலைமையகம்பிளாட் எண் 506, 4 வது தளம், எம்ஜிஎம் கேபிடல் கட்டிடம், டாக்டர் ஒய்.எஸ்.ஆர் அரிக்யா ஸ்ரீ காம்ப்ளெக்ஸ், என்.எச், சின்னகனி, மங்களகிரி, குண்டூர். பின் கோடு : 522503.[1]
ஆணையம் தலைமை
  • திருமதி வசிரெட்டி பத்மா,, தலைவர்
வலைத்தளம்அதிகாரப்பூர்வ இணையதளம்

வரலாறு மற்றும் நோக்கம் தொகு

பெண்களுக்கான அரசியலமைப்பு உரிமைகளை அமல்படுத்துவது இந்தியாவில் மெதுவாக இருப்பதாகவும், பெண்களுக்கு எதிரான வன்முறை வழக்குகள் அதிகரித்து வருவதாகவும் உணர்ந்து, இதனைத் தடுக்கும் வகையிலும், சர்வதேச உலகிற்க்கு இணையாக, மகளிருக்கு அதிகாரமளித்தல் முயற்சிகளுக்கு இணங்கவும், 1996 ஆம் ஆண்டு பெண்களுக்கான தேசியக் கொள்கை அறிவிக்கப்பட்டது. இத்தகைய பின்னணியில், பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், அவர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கவும், தேசிய மகளிர் ஆணையம் மற்றும் அனைத்து மாநில மகளிர் ஆணையங்கள் அமைக்கப்பட்டன.

அதனடிப்படையில் ஆந்திரப் பிரதேச மகளிர் ஆணையச் சட்டம், 1998 இயற்றப்பட்டு,பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், குடும்பத்தாலும், மற்றவர்களாலும் சமூகத்தில் எதிர்கொள்ளும் எந்தவொரு துன்புறுத்தல் மற்றும் பிரச்சினைகளுக்கு எதிராக பெண்களின் பாதுகாப்பு மற்றும் பாலின சமத்துவத்தை உறுதி செய்யவும் அது தொடர்பான குறிப்பிட்ட பிரச்சினைகளை விசாரிக்கவும், ஆய்வு செய்வதற்கும் ஆந்திரப் பிரதேச மாநில மகளிர் ஆணையம் அமைக்கப்பட்டது. [3] பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், குடும்பம் மற்றும் சமூகத்தில் எதிர்கொள்ளும் எந்தவொரு துன்புறுத்தல் மற்றும் பிரச்சினைகளுக்கும் எதிராக அவர்களின் பாதுகாப்பு மற்றும் சமத்துவத்தை உறுதி செய்யவும் இந்த ஆணையத்திற்கு அதிகாரங்கள் உள்ளன.

இந்த ஆணையம் பின்வரும் நோக்கங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

  • ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்ட பெண்களின் குறைகளை நிவர்த்தி செய்தல்
  • மாநிலம் முழுவதும் உள்ள பெண்கள் தொடர்பாக நடைமுறையில் உள்ள சட்டங்களை மறு ஆய்வு செய்தல் மற்றும் பெண்களுக்கு நீதி கிடைக்க திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கத்தை கோருதல்.
  • பரிகார சட்ட நடவடிக்கைகளை பரிந்துரைத்தல்
  • பெண்களை பாதிக்கும் அனைத்து கொள்கை விஷயங்களிலும் ராஜஸ்தான் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குதல்[4]
  • பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்தல்.
  • பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் நியாயமற்ற செயல்களை ஆராய்ந்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு அரசைக் கோருதல்.
  • தற்போதுள்ள சட்டங்களை மேலும் திறம்பட செயல்படுத்த நடவடிக்கை எடுத்தல் மற்றும் அவை நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்தல்.
  • தற்போதுள்ள சட்டங்களை மறு ஆய்வு செய்து திருத்தங்களைப் பரிந்துரைத்தல்.
  • அரச பொதுப் பணிகள் மற்றும் அரச பொதுத் துறை நிறுவனங்களில் மகளிருக்கு எதிரான பாகுபாட்டைத் தடுத்தல்.
  • நடைமுறை நலத்திட்டங்களை பரிந்துரைத்தும், சம வாய்ப்புகளை வழங்குமாறு அரசுக்கு வேண்டுகோள் விடுத்தும் பெண்களின் நிலையை மேம்படுத்த நடவடிக்கை எடுத்தல்
  • மகளிரின் நலன்களுக்கு எதிராக செயல்படும் எந்தவொரு பொது ஊழியர் மீதும் ஆணையத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அரசை வேண்டுகோள் விடுத்தல்.
  • மாநிலத்தில் பெண்கள் அடிப்படையிலான சட்டம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல்[5]


அமைப்பு தொகு

ஆந்திரப் பிரதேச மாநில மகளிர் ஆணையம் ஒரு தலைவர் மற்றும் ஐந்து உறுப்பினர்களைக் கொண்டு இயங்கி வருகிறது.

திருமதி வசிரெட்டி பத்மா ஆந்திரப் பிரதேச மாநில மகளிர் ஆணையத்தின் தலைவராக உள்ளார்.[6] இவரோடு இணைந்து திருமதி காரி ஜெயஸ்ரீ, திருமதி கஜ்ஜல வெங்கட லட்சுமி, டாக்டர் எஸ்.கே.ரோகயா பேகம், திருமதி பூசி வினிதா, கும். கெத்தம் உமா ஆகியோர் உறுப்பினர்களாகவும், திருமதி ஒய். ஷைலஜா செயலாளராகவும் பணியாற்றிவருகின்றனர்.[7]

செயல்பாடுகள் தொகு

ஆந்திரப் பிரதேச மாநில மகளிர் ஆணையம் பின்வரும் செயல்பாடுகளையும் முன்னேடுப்புகளையும் அம்மாநில மகளிர் நலனுக்காக செய்து வருகிறது.

  • அரசியலமைப்பு மற்றும் பெண்கள் தொடர்பான சட்டங்களின் கீழ் பெண்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்ட விதிகள் மற்றும் பாதுகாப்பை ஆணையம் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.[8]
  • மாநிலத்தில் உள்ள எந்தவொரு நிறுவனமும் பெண்களுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தத் தவறினால், அதை அரசின் அறிவிப்புக்கு அனுப்ப வேண்டும்.
  • மாநிலத்தின் பெண்களுக்கு நீதி வழங்குவதில் தோல்வியுற்றால் எந்தவொரு சட்டத்திலும் திருத்தங்களுக்கான பரிந்துரைகளை வழங்குதல்.
  • பெண்களின் உரிமைகள் மீறப்படும் எந்தவொரு பிரச்சினையையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் எடுத்துக் கொண்டு, அவர்களுக்கு பின்தொடர்தல் நடவடிக்கையை பரிந்துரைக்கிறது.
  • அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட தங்கள் உரிமைகள் மீறல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை அமல்படுத்தாதது குறித்து புகார் உள்ள பெண்கள் நேரடியாக தீர்வு காண மகளிர் ஆணையத்தை அணுகலாம்.
  • மாநிலத்தில் அட்டூழியங்கள் மற்றும் பாகுபாட்டால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆலோசனை வழங்குதல் மற்றும் உதவுதல்.
  • வெகுஜன பெண்கள் சம்பந்தப்பட்ட எந்தவொரு பிரச்சினையிலும் வழக்கு செலவுகளுக்கு நிதியளிப்பது மற்றும் எப்போதாவது அவர்கள் தொடர்பான மாநில அரசுக்கு அறிக்கைகளை வழங்குவது.
  • பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள வளாகம், சிறை அல்லது பிற ரிமாண்ட் ஹோம் அல்லது வேறு ஏதேனும் வழக்கை ஆய்வு செய்து, தேவைப்பட்டால் அந்தந்த அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வருவது.
  • பெண்கள் சார்ந்த ஏதேனும் குறிப்பிட்ட பிரச்சினைகளைக் கேட்டு, ஆய்வு செய்து விசாரிக்கவும்.
  • கல்வி ஆராய்ச்சியைத் தொடங்கவும் அல்லது எந்தவொரு ஊக்குவிப்பு முறையையும் மேற்கொள்ளவும், மேலும் அனைத்து பகுதிகளிலும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்கான வழிகளைப் பரிந்துரைத்து, அவர்களின் உரிமைகளை பறிக்கும் காரணங்களை அடையாளம் காணவும்,
  • பெண்களின் உரிமைகள் அல்லது பெண்கள் பாதுகாப்புச் சட்டங்கள் அமல்படுத்தப்படாதது அல்லது அவர்கள் தொடர்பான எந்தவொரு கொள்கைகளையும் பின்பற்றாதது அல்லது பெண்கள் நலன் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய நிவாரணம் தொடர்பான அறிவுறுத்தல்களைப் பின்பற்றத் தவறியது போன்ற எந்தவொரு பிரச்சினையையும் சுயமாக விசாரிக்க அல்லது ஏதேனும் புகார்கள் இருந்தால் விசாரிக்கவும்.

மேற்கோள்கள் தொகு

  1. "List of State Women Commissions". List of State Women Commissions. பார்க்கப்பட்ட நாள் 10 January 2022.
  2. "ஆந்திரப் பிரதேச மகளிர் ஆணையச் சட்டம், 1998".
  3. Rajagopalan, Swarna (30 May 2016). "Why National and State Women’s Commissions are important and should be held accountable". dnaindia.com. https://www.dnaindia.com/india/report-why-national-and-state-women-s-commissions-are-important-and-should-be-held-accountable-2217939. 
  4. "ஆந்திர மாநில மகளிர் ஆணையம் பெண்களுக்கான சட்ட ஆலோசனை மையத்தை அமைத்துள்ளது".
  5. "Working to reduce bias towards women in society: Andhra Women's Commission chairperson". New Indian Express. 1 January 2022. https://www.newindianexpress.com/states/andhra-pradesh/2022/jan/01/working-to-reduce-bias-towards-women-in-society-andhra-womens-commission-chairperson-2401845.html. 
  6. "Vasidreddy Padma is new women’s commission chairperson". The Hindu. 19 June 2019. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/vasidreddy-padma-is-new-womens-commission-chairperson/article28078773.ece. 
  7. "TDP is celebrating retrograde anti-women verdict: AP women". Times of India. 23 June 2021. https://timesofindia.indiatimes.com/city/amaravati/tdp-is-celebrating-retrograde-anti-women-verdict-ap-women-commission-chief-vasireddy-padma/articleshow/83779255.cms. 
  8. "Andhra Pradesh: State to take care of children of woman who committed suicide". Deccan Chronicle. 23 September 2021. https://www.deccanchronicle.com/nation/politics/230921/andhra-pradesh-state-to-take-care-of-children-of-woman-who-committed.html.