ஆனந்த கோத்திரர்கள்

இந்திய அரசன்

ஆனந்தர்கள் (Anandas) அல்லது ஆனந்த கோத்திரர்கள் (Ananda Gotrika) 335-425 கிபி வரை காந்தரபுரத்தை தலைநகராகக் கொண்டு கடலோர ஆந்திராவை ஆண்டனர். இவர்களின் தலைநகரம் இன்றைய குண்டூர் மாவட்டத்தில் உள்ள செஜெர்லா மண்டலத்தில் அமைந்துள்ளது.[1] ஆந்திர இசுவாகுகளின் வீழ்ச்சிக்குப் பிறகு ஆனந்த கோத்ரிகர்கள் இப்பகுதியை ஆண்டனர். மேலும் தங்களை ஆனந்த கோத்திரத்தில் இருந்து வந்ததாக உரிமை கோரினர். [2]

இவர்கள், 4 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதி மற்றும் 5 ஆம் நூற்றாண்டின் முதல் பாதி வரை செழித்து வளர்ந்ததாகத் தெரிகிறது. ஆனந்த கோத்திரர்கள் பற்றிய மூன்று பதிவுகள் மட்டுமே உள்ளன. அதில் இரண்டு செப்புத் தகடுகளும் ஒரு கல்வெட்டும் அடங்கும். [3] காந்தாரன், அத்திவர்மன், தாமதோரவர்மன் ஆகிய மூன்று அரசர்கள் மட்டுமே அறியப்படுகின்றனர். ஆனந்த கோத்திர வம்சத்தை நிறுவிய காந்தரன் தலைநகரான காந்தாரபுரத்தையும் நிறுவினார். [3] காந்தார மன்னனும் பல்லவர்களுக்கு எதிரான போர்களில் வெற்றி பெற்று அவர்களை அமராவதி பகுதியிலிருந்து விரட்டினான். [3] இந்த வம்சத்தின் அறியப்பட்ட மூன்று மன்னர்களில் மன்னர் அத்திவர்மனும் ஒருவர். அவர் விலையுயர்ந்த இரண்யகர்ப மகாதானம் (தங்க தானம்) செய்தார் . மேலும், சிவபெருமானின் தீவிர பக்தராக இருந்தார். [3] அத்திவர்மனுக்குப் பிறகு அவரது மகன் தாமதோரவர்மன் பதவிக்கு வந்தான். ஆனால் அவன் பௌத்தத்தைத் தழுவினான் [3]

ஆனந்த கோத்திரர்கள் சாலங்காயனர்களால் வீழ்த்தப்பட்டதாகத் தெரிகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. Sen, Sailendra Nath (1999). Ancient Indian History and Civilization (in ஆங்கிலம்). New Age International. p. 433. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788122411980.
  2. Lakshmanna, Chintamani (1973). Caste dynamics in village India (in ஆங்கிலம்). Nachiketa Publications. p. 27.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 Sen, Sailendra Nath (1999). Ancient Indian History and Civilization (in ஆங்கிலம்). New Age International. p. 433. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788122411980.Sen, Sailendra Nath (1999). Ancient Indian History and Civilization. New Age International. p. 433. ISBN 9788122411980.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனந்த_கோத்திரர்கள்&oldid=3819757" இலிருந்து மீள்விக்கப்பட்டது