ஆன் றணசிங்க

ஆன் றணசிங்ஹ (அக்டோபர் 2, 1925 - திசம்பர் 17, 2016) செருமனியில் பிறந்த யூதப் பெண்மணி. இரண்டாவது உலக யுத்தம் தொடங்குமுன்பு, இனப் படுகொலையிலிருந்து தப்பி இங்கிலாந்து சென்று, தாதியாகக் கடமை புரிந்தார்; அங்கு சந்தித்த இலங்கையரைத் திருமணம் செய்தார்.[1] ஆங்கிலத்தில் கவிதை எழுதுபவர். கவிதைகள் (1971), சொற்களினால் எமது வாழ்க்கையை எழுதுகிறோம் (1972), அழியாநிலைக்கும் இருளிற்கும் எதிராக (1985) முதலிய தொகுப்புக்கள் வெளிவந்துள்ளன.[2]

ஆன் றணசிங்க
பிறப்பு2 அக்டோபர் 1925
எசன்
இறப்பு17 திசம்பர் 2016 (அகவை 91)
கொழும்பு
பணிகவிஞர்

மேற்கோள்கள் தொகு

  1. "Anne Ranasinghe passes away". 19 திசம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 20 திசம்பர் 2016.
  2. "Anne Ranasinghe -- English writer: The South Asian Literary Recordings Project (Library of Congress New Delhi Office)". பார்க்கப்பட்ட நாள் 20 திசம்பர் 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆன்_றணசிங்க&oldid=3459582" இலிருந்து மீள்விக்கப்பட்டது