ஆயிசா மிரன் வன்கலவி வழக்கு

ஆயிசா மிரன் வன்கலவி வழக்கு (Ayesha Miran rape case) (பாதிக்கப்பட்டவரின் பெயர் சில சமயங்களில் ஆயிஷா மீரான் அல்லது ஆயிஷா மீரா என்றும் எழுதப்படுகிறது) 2007 ஆம் ஆண்டில் நாட்டில் பரவலான ஊடக கவனத்தை ஈர்த்த இந்தியாவின் விஜயவாடாவில் நிகழ்ந்த வன்கலவி வழக்கு ஆகும்.[1][2][3]

சம்பவம் தொகு

ஆயிசா மீரா என்ற 19 வயது மருந்தியல் மாணவி விஜயவாடாவில் உள்ள விடுதியில் பாலியல் வன்கலவி செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரது உடல் 27 டிசம்பர் 2007 அன்று குளியலறையில் கண்டுபிடிக்கப்பட்டது.உடலில் குத்தப்பட்ட காயங்கள் இருந்தது.[4] 'கொலைகாரனால்' கைவிடப்பட்ட கடிதத்தில், 'காதல்' வேண்டுகோளை மறுத்ததற்காக, சிறுமி பாலியல் வன்கலவி செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.[3]

காவல்துறையினரின் கோரிக்கைகளின் சந்தேகம் தொகு

பி. சத்யம் பாபுவின் உறவினர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள், இந்த வழக்கில் உண்மையான குற்றவாளிகளை பாதுகாக்கும் முயற்சியாக காவல் துறையினர் செயல்படுவதாக குற்றம் சாட்டினர். பாபு நரம்பியல் கோளாறால் அவதிப்பட்டதால் நடக்க கூட முடியவில்லை என்று அவர்கள் சுட்டிக்காட்டினர். அவர் ஜிபி நோய்க்குறியால் அவதிப்படுகிறார், இதன் விளைவாக அவரது நரம்பு மண்டலத்தை மோசமாக பாதித்தது மற்றும் அவரது இரண்டு கால்களும் செயலிழந்தன.[5] நிஜாமின் மருத்துவ அறிவியல் கழகத்தின் (NIMS) மருத்துவர்கள் அவரால் நடக்க முடியாது என்பதை உறுதி செய்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர்களும், பாபு கொலை செய்ததாக கூறி, அரசியல் செல்வாக்குள்ள சிலரை காப்பாற்ற காவல்துறையினர் முயன்றதாக கூறியதை நிராகரித்தனர்.[3]

முன்னாள் துணை முதல்வர் கோனேரு ரங்க ராவின் பேரன் கோனேரு சதீசை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க முடியும் என்பதால் தான் சத்யம் பாபுவை காவல் துறையினர் கைது செய்தனர் என்று பல ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.[5] ஆயிசாவின் பெற்றோர் கோனேரு சதீஷ் மற்றும் அவரது நண்பர்கள் தனது மகளது பெண்கள் விடுதிக்கு வழக்கமாக வந்து செல்வதனையும் உறுதி செய்தனர், ஏனெனில் அது அவரது உறவினர் கொனேரா பத்மாவுக்கு சொந்தமானது.[6]

குற்றவாளியை கைது செய்தல், தப்பித்தல் மற்றும் மீண்டும் கைது செய்தல் தொகு

பி. சத்யம் பாபு முதலில் ஆகஸ்ட் 2008 இல் கைது செய்யப்பட்டார்.[3] இருப்பினும், கைது செய்யப்பட்டவுடன் நல்கொண்டா மாவட்டத்தின் சூர்யாப்பேட்டையில் கைதுசெய்யப்பட்ட நள்ளிரவில் காவலில் இருந்து தப்பித்தார், உணவிற்காக காவலர்கள் அவரை விடுதியில் இறங்கியபோது அவர் தப்பித்துள்ளார். ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பிறகு குற்றவாளிகளை விஜயவாடாவுக்கு காவல் துறையினர்அழைத்துச் சென்றனர்.[1] அலட்சியமாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்களை அழைத்துச் சென்ற ஒரு துணை காவல் அதிகாரி இரண்டு தலைமை காவலர்கள் மற்றும் எட்டு காவலர்கள் உட்பட 11 காவலர்களை விஜயவாடா காவல் துறையினரை இடைநீக்கம் செய்தனர்.[3] இருப்பினும், தப்பித்த சில மணி நேரங்களிலேயே ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் பாபு கைது செய்யப்பட்டார்.[3]

நீதித்துறை தீர்ப்பு தொகு

விஜயவாடா மகளிர் சிறப்பு அமர்வு நீதிமன்றம் கொலை வழக்கில், இந்திய தண்டனைச் சட்டம் 302 பிரிவின் கீழ் பி. சத்யம் பாபுவுக்கு 14 ஆண்டுகள் சிறை மற்றும் பாலியல் வன்கலவிற்காக இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376 இன் கீழ் 10 ஆண்டுகள் கடுமையான சிறைத்தண்டனை வழங்கியது. இரண்டு சிறை தண்டனைகளும் ஒரே நேரத்தில் வழங்கப்படும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், சத்யம் பாபுவுக்கு 1,000 ரூபாய் அபராதம் அல்லது ஆறு மாத சிறை தண்டனை விதிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.[2]

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 "Accused in Andhra girl's rape and murder escapes". Zee News. Archived from the original on 14 டிசம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 14 December 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. 2.0 2.1 "Lifer for Satyam Babu in Ayesha murder case". Times of India. 30 September 2010. https://timesofindia.indiatimes.com/india/Lifer-for-Satyam-Babu-in-Ayesha-murder-case/articleshow/6655385.cms. 
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 "Accused in Andhra girl's murder held after escape". Two Circles. பார்க்கப்பட்ட நாள் 14 December 2013.
  4. "Ayesha Meera murder case: Three named for destroying evidence". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2019-12-07.
  5. 5.0 5.1 "His youth lost behind bars, who will give Satyam Babu his life back, his sister asks". www.thenewsminute.com. பார்க்கப்பட்ட நாள் 2019-12-07.
  6. "Ayesha case: Police in dark about whereabouts of key suspects". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2019-12-07.