ஆர். என். ஜெயகோபால்

இந்திய கதையாசிரியர்

ஆர். என். ஜெயகோபால் (R. N. Jayagopal, 1935 – 19 மே 2008) என்பவர் ஒரு இந்திய திரைப்பட இயக்குநர் மற்றும் கன்னட திரைப்பட பாடலாசிரியர் ஆவார். இவர் 12,000 திரைப்படப் பாடல்களை எழுதியுள்ளார். [1]

ஆர். என். ஜெயகோபால்
பிறப்பு(1935-08-17)17 ஆகத்து 1935
மைசூர், மைசூர் அரசு, பிரித்தானிய இந்தியா
இறப்பு19 மே 2008(2008-05-19) (அகவை 72)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியன்
மற்ற பெயர்கள்ஆர்.என்.ஜே
பணிபாடலாசிரியர், திரைப்பட இயக்குநர்
செயற்பாட்டுக்
காலம்
1957–2008
பெற்றோர்ஆர். நாகேந்திர ராவ்
வாழ்க்கைத்
துணை
லலிதா ஜெயகோபால்
பிள்ளைகள்1
வலைத்தளம்
www.rnjayagopal.com

ஆரம்ப வாழ்க்கையும் கல்வியும் தொகு

ஆர்.என்.ஜே என்று நண்பர்களாளும், இரசிகர்களாளும் அறியப்படும் ஆர். என். ஜெயகோபால், கன்னட திரையுலகின் மற்றொரு ஜாம்பவானான ஆர். நாகேந்திர ராவுக்கு மகனாக 1935 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் தனது துவக்க மற்றும் கல்லூரிக் கல்வியை பெங்களூரில் பயின்றார். பி. எஸ். ராஜ் ஐயங்காரிடம் கருநாடக இசை கற்றார். இவர் வயலின் வாசிப்பதில் வல்லவராவார். ஜெயகோபால் அவரது பெற்றோரின் நான்கு மகன்களில் ஒருவர். இவரது அண்ணன் ஆர். என். கிருஷ்ண பிரசாத், ஒளிப்பதிவாளராவார். இவரது தம்பி ஆர். என். சுதர்சன், ஒரு மூத்த திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளராவார்.

தொழில் தொகு

ஜெயகோபால் 1957 ஆம் ஆண்டு தனது தந்தை தயாரித்த பிரேமத புத்ரி திரைப்படத்திற்கு "திரிபுவன ஜனனி ஜகன்மோகினி" என்ற பாடல் வரிகளை எழுதி திரையுலகில் நுழைந்தார். அதுமுதல் நூற்றுக்கணக்கான படங்களுக்கு உரையாடல், பாடல் வரிகள் போன்றவற்றை எழுதியுள்ளார். தூமகேது, கேசரின கமலா, அவள அந்தரங்கா உள்ளிட்ட எட்டு படங்களை இயக்கியுள்ளார். மணிரத்னத்தின் முதல் படமான நம்ம மக்களு மற்றும் பல்லவி அனுபல்லவி ஆகிய படங்களுக்கு சிறந்த உரையாடல் எழுத்தாளராக கருநாடக அரசு விருதைப் பெற்றுள்ளார்.

இவர் பல தொலைக்காட்சித் தொடர்களையும் இயக்கியுள்ளார், ஆனால் கன்னடப் படங்களுக்கு பாடல்கள் எழுதுவதில் ஆர்வம் கொண்டவராவார். இவரது பாடல் வரிகள் பொருளுள்ளவையாகவும், மிகுந்த மதிப்பைக் கொண்டவையாகவும் இருந்தன. இவரது பல பாடல்கள் இசை அமைப்பிற்காக மட்டுமல்லாமல், பாடல்களின் தரத்தினாலும் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளன.

இவர் சி. உதயசங்கர், விஜய நரசிம்மா, சரோத் அஸ்வத், ஹுன்சூர் கிருஷ்ணமூர்த்தி போன்ற சிறந்த எழுத்தாளர்களின் நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.

ஜெயகோபால் சென்னையில் கன்னடத்தை இரண்டாம் மொழியாக கற்பிக்கும் முதல் பள்ளியான வித்யா வினயா வினோதா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியைத் துவக்கினார். நாயகன், மைக்கேல் மதன காமராஜன் போன்ற திரைப்படங்களில் நன்கு பாராட்டப்பட்ட பாத்திரங்களில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகிலும் தனது முத்திரையைப் பதித்தார்.

திரைப்படவியல் தொகு

இயக்குநராக தொகு

ஆண்டு திரைப்படம் குறிப்புகள்
1968 தூமகேது திரைக்கதை, உரையாடல், பாடல்கள் போன்றவற்றையும் எழுதினார்
1972 நா மெச்சித ஹுடுகா திரைக்கதை, உரையாடல், பாடல்கள் போன்றவற்றையும் எழுதினார்
1973 கேசரினா கமலா திரைக்கதை, உரையாடல், பாடல்கள் போன்றவற்றையும் எழுதினார்
1979 முத்து ஒந்து முத்து திரைக்கதை, உரையாடல், பாடல்கள் போன்றவற்றையும் எழுதினார்
1981 மரியத ஹாடு திரைக்கதை, உரையாடல், பாடல்கள் போன்றவற்றையும் எழுதினார்
1983 மக்களே தேவரு உரையாடல், பாடல்கள் போன்றவற்றையும் எழுதினார்
1984 அவள அந்தரங்கா
1987 ஹ்ருதய பல்லவி திரைக்கதை, உரையாடல், பாடல்கள் போன்றவற்றையும் எழுதினார்

நடிகராக தொகு

விருதுகள் தொகு

கர்நாடக அரசு திரைப்பட விருதுகள்

  • 1968-69 : சிறந்த உரையாடல் – நம்ம மக்களு (1969)
  • 1982-83 : சிறந்த உரையாடல் - பல்லவி அனுபல்லவி (1983)
  • 1985-86: சிறப்பு விருது (பாடல் வரிகள்) – ஸ்வாபிமனா (1985)

இறப்பு தொகு

இவர் 19 மே 2008 அன்று தன் 72வது வயதில் மாரடைப்பால் இறந்தார். இவரது மனைவி லலிதா இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, சூன் 13, 2010 அன்று இறந்தார்.

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._என்._ஜெயகோபால்&oldid=3841447" இலிருந்து மீள்விக்கப்பட்டது