ஆ. கோ. பத்மாவதி

ஆ. கோ. பத்மாவதி (A. G. Padmavathi) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். சென்னையில் பிறந்த பத்மாவதி, நுங்கம்பாக்கம் கிறித்துவப் பள்ளியிலும், திண்டிவனம் உயர்நிலைப் பள்ளியிலும் பள்ளிக் கல்வியினை முடித்துள்ளார். பத்மாவதி திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் ஆவார். இவர் 1971ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக வேட்பாளராக முகையூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர் ஆனார்.[1] இவர் மறைந்த தமிழ்நாடு வேளாண் அமைச்சர் ஆ. கோவிந்தசாமியின் துணைவி ஆவார்.

சட்டமன்ற உறுப்பினராக தொகு

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
1971 முகையூர் திமுக 38744 59.98[2]

மேற்கோள்கள் தொகு

  1. Written at Madras. தமிழ்நாடு சட்டப் பேரவை ”யார் எவர்”. 01.01.1972: Tamil Nadu Legislative Assembly Department. 1971. p. 258. {{cite book}}: Cite has empty unknown parameter: |1= (help); More than one of |pages=, |at=, and |page= specified (help); Unknown parameter |trans_title= ignored (help)CS1 maint: location (link)
  2. Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. பார்க்கப்பட்ட நாள் 19 April 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆ._கோ._பத்மாவதி&oldid=3482119" இலிருந்து மீள்விக்கப்பட்டது