இக்கால் ஏஞ்சலீ

கென்யாவின் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்

இக்கால் ஏஞ்சலீ (Ikal Angelei) கென்ய நாட்டைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியும் சுற்றுச்சூழல் ஆர்வலருமாவார். கென்யா நாட்டிலுள்ள கிட்டாலி நகரத்தில் இவர் பிறந்தார்.

இக்கால் ஏஞ்சலீ
Ikal Angelei
இக்கால் ஏஞ்சலீ, 2017
பிறப்புகிட்டாலி , கென்யா
தேசியம்கென்ய நபர்
பணிஅரசியல்வாதி
விருதுகள்கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது (2012)

எத்தியோப்பியாவில் உள்ள கில்கெல் கிபே III அணையின் சுற்றுச்சூழல் தாக்கங்களுக்கு எதிராகவும் , கென்ய பழங்குடி சமூகங்கள் சார்பாகப் பேசியதற்காகவும் 2012 ஆம் ஆண்டு இவருக்கு கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது வழங்கப்பட்டது.[1] துர்கானா ஏரியைச் சுற்றியுள்ள பிராந்தியத்தில் சுற்றுச்சூழல் நீதிக்காக பிரச்சாரம் செய்யும் துர்கானா எரி நண்பர்கள் அமைப்பை இக்கால் ஏஞ்சலீ நிறுவினார்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "Ikal Angelei". Goldman Environmental Prize. பார்க்கப்பட்ட நாள் 29 May 2012.
  2. "Friends of Lake Turkana". friendsoflaketurkana.org. பார்க்கப்பட்ட நாள் 4 March 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இக்கால்_ஏஞ்சலீ&oldid=3147058" இலிருந்து மீள்விக்கப்பட்டது