இரத்த ஞாயிறு (1905)

இரத்த ஞாயிறு (Bloody Sunday) அல்லது சிவப்பு ஞாயிறு (Red Sunday,[1] உருசியம்: Крова́вое воскресе́нье, பஒஅ[krɐˈvavəɪ vəskrʲɪˈsʲenʲjɪ]) என்பது 22 சனவரி [யூ.நா. 9 சனவரி] 1905 ஞாயிற்றுக்கிழமை உருசியாவின் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் இடம்பெற்ற கொடூர படுகொலைகளைக் குறிக்கிறது. கியோர்கி கேப்போன் பாதிரியார் தலைமையில் இடம்பெற்ற ஓர் ஆர்ப்பாட்டத்தின் போது அரசுப் படைத்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். 30,000 இற்கும் அதிகமான ஆர்ப்பாட்டக்காரர்கள்[2] அன்றைய சார் மன்னர் இரண்டாம் நிக்கலாசுவிடம் விண்ணப்பம் ஒன்றைக் கையளிப்பதற்காக அவர் தங்கியிருந்த குளிர்கால அரண்மனைக்கு சென்ற போதே அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.[3] அமைதிப் பேரணியின் மீது இராணுவம் நடத்திய கொலைவெறி தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர். இறந்தவர்களின் எண்ணிக்கை அரசின் கணக்குப்படி 96 பேர். ஆனால் போராட்டக்காரர்கள் கணக்குப்படி 4000 பேருககும் அதிகமானோர் இறந்ததாக கருதப்படுகிறது.

குளிர்கால அரண்மனைக்கு ஆர்பாட்டக்காரர்கள் திரண்டுசெல்லுதல்

இச்சம்பவம் உருசிரப் பேரரசின் ஆட்சியாளருக்கு எதிராக மக்கள் திரண்டெழ வழிவகுத்தது. நாட்டின் தொழிற்துறைப் பகுதிகளில் வேலை நிறுத்தங்களும், போராட்டங்களும் இடம்பெற்றன. இச்சம்பவம் 1905 உருசியப் புரட்சிக்கும் முதற்படியாக அமைந்ததாக வரலாற்றாளர்கள் கருதுகின்றனர். 1905 புரட்சியுடன் சேர்ந்து 1917 புரட்சிக்கும் இந்நிகழ்வு மூக காரணமாக அமைந்தது என வரலாற்றாளர் லயனல் கோச்சன் என்பவர் தனது உருசியாவில் புரட்சி 1890-1918 என்ற நூலில் கூறியுள்ளார்.

மேற்கோள்கள் தொகு

  1. A History of Modern Europe 1789–1968 by Herbert L. Peacock m.a.
  2. Salisbury, Harrison E. (1981). Black Night White Snow. Da Capo Press. பக். 121. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-306-80154-X. https://archive.org/details/blacknightwhites00unse. 
  3. Gapon, Address to the Tsar, February 1905, in Ascher, The Revolution of 1905, Vol. 1
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரத்த_ஞாயிறு_(1905)&oldid=3641298" இலிருந்து மீள்விக்கப்பட்டது