இலங்கை நாடாளுமன்றக் கட்டடம்

இலங்கை நாடாளுமன்றக் கட்டடம் 1977 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கோட்டே நிர்வாகத் தலைநகரமாக ஆக்கப்பட்ட பின்னர் அங்கே அமைக்கப்பட்டது. சதுப்பு நிலமாக இருந்த பகுதி தோண்டப்பட்டு செயற்கையாக உருவாக்கப்பட்ட ஏரியின் மத்தியில் அமைக்கப்பட்ட தீவு ஒன்றில் இக் கட்டிடம் கட்டப்பட்டது. இலங்கைக் கட்டிடக்கலை மரபை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்ட இக் கட்டிடம், இலங்கையின் புகழ் பெற்ற கட்டிடக் கலைஞரான ஜெப்ரி பாவாவினால் வடிவமைக்கப்பட்டது.

இலங்கை நாடாளுமன்றக் கட்டட வளாகம்
Map
பொதுவான தகவல்கள்
நகரம்சிறீ ஜெயவர்தனபுர கோட்டை
நாடுஇலங்கை
கட்டுவித்தவர்இலங்கை அரசாங்கம்
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)ஜெப்ரி பாவா

வெளி இணைப்புகள் தொகு