இலட்சுமி இந்திரா பாண்டா

இந்தியப் பெண் புரட்சியாளர்

இலட்சுமி இந்திரா பாண்டா (Laxmi Indira Panda) ஓர் இந்தியப் புரட்சியாளர் என்று அறியப்படுகிறார்.[3][4] நேதாச்சி சுபாசு சந்திர போசின் இந்திய தேசிய இராணுவத்தின் இளைய உறுப்பினர்களில் இவரும் ஒருவர்.[5] ஐஎன்ஏ எனப்படும் இந்திய தேசிய இராணுவத்தில் பணியாற்றிய ஒரே ஒடியா பெண்மணி இலட்சுமி இந்திரா பாண்டா மட்டுமே.[2] என்பது இவருக்குரிய சிறப்பாகும்.

இலட்சுமி இந்திரா பாண்டா
Laxmi Indira Panda
பிறப்புஇலட்சுமி பாண்டா
1930
யங்கோன் அருகில், மியான்மர்[1]
இறப்புஅக்டோபர் 7, 2008
தேசியம்இந்தியர்
அமைப்பு(கள்)இந்தியத் தேசிய இராணுவம்
அரசியல் இயக்கம்நாடு கடந்த இந்திய அரசு
வாழ்க்கைத்
துணை
காகேசுவர் பாண்டா (1951)[2]
விருதுகள்தேசிய சுதந்திர சைனிக் விருது (2008)[1]

இலட்சுமி இந்திரா பாண்டா ஜான்சி ராணியின் படைப்பிரிவில் இந்திய தேசிய இராணுவத்தில் சேர்ந்தார், இவருக்கு 14 வயதாக இருந்தபோது, இந்தியாவில் பிரித்தானிய ஆட்சிக்கு எதிராகப் போராடினார்.[2]

2008 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இலட்சுமி இந்திரா பாண்டா இறந்த பிறகு இவரது நினைவாக செய்ப்பூரில் ஒரு சிலை நிறுவ ஒடிசா அரசு அறிவித்தது [6]

2008 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 25 ஆம் தேதியன்று இவருக்கு தேசிய சுதந்திர சைனிக் சம்மான் வழங்கப்பட்டது. இவ்விருது இந்தியாவில் ஒரு சுதந்திரப் போராட்ட வீரருக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த பட்டமாகும்.[1]

இறப்பு தொகு

2008 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி பாண்டா, நீண்டகால நோயினால் தில்லி எய்ம்சு மருத்துவமனையில் இறந்தார்.[7] முழு அரசு மரியாதையுடன் இவரது உடல் தகனம் செய்யப்பட்டது. ஒரிசா காவல்துறை சார்பில் இவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது.[6]

மேற்கோள்கள் தொகு

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலட்சுமி_இந்திரா_பாண்டா&oldid=3940323" இலிருந்து மீள்விக்கப்பட்டது