ஈழத்து சமய இலக்கியம்

ஈழத்து தமிழ் இலக்கியத்தின் சமயம் சார் வெளிப்படுத்தல்கள் கருத்துரைகள் ஈழத்து சமய இலக்கியம் எனலாம். ஈழத்து சமய இலக்கியத்தில் சைவம், கிறீஸ்தவம், இஸ்லாம் ஆகிய சமயங்களின் படைப்புக்கள் முக்கிய கூறுகளாக அமைகின்றன.

தக்கிணகைலாசபுராணம், திருக்கரசைப்புராணம், கதிரை மலைப்பள்ளு, வியாக்கிரபாதபுராணம், கண்ணகி வழக்குரை போன்ற நூல்கள் ஆரம்பகாலச் சமய நூல்களாகும். ஐரோப்பியரின் வருகையைத் தொடர்ந்து கிறித்தவ சமய நூல்கள் எழுதப்படலாயின. ஞானப்பள்ளு, அர்ச்யாகப்பர் அம்மானை, ஞானானந்தபுராணம், திருச்செல்வர் காவியம், சந்தியோகுமையூர் அம்மானை, திருச்செல்வர் அம்மானை, மருதப்பக்குறவஞ்சி போன்றவை ஆரம்பகால கத்தோலிக்க இலக்கியங்களாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈழத்து_சமய_இலக்கியம்&oldid=1875811" இலிருந்து மீள்விக்கப்பட்டது