உலூத்விக் வில்கெல்ம் பெக்கர்

உலூத்விக் வில்கெல்ம் எமில் எர்னெசுட்டு பெக்கர் (Ludwig Wilhelm Emil Ernst Becker) (1860 – 1947) 1935 முதல் தன் ஓய்வு காலம் வரை கிளாசுக்கோ பல்கலைக்கழக இரேஜியசு வானியல் பேராசிரியரும் எடின்பர்கு அரசு வானியல் கழக ஆய்வுறுப்பினரும் ஆவார்.

உலூத்விக் வில்கெல்ம் எமில் எர்னெசுட்டு பெக்கர்
Ludwig Wilhelm Emil Ernst Becker
பிறப்பு8 சனவரி 1860
வீசெல், செருமனி
இறப்பு11 நவம்பர் 1947
இலாகுண்டோ, இத்தாலி
வாழிடம்இசுகாட்லாந்து
குடியுரிமைபிரித்தானியர் (1893 இல் இயல்பாக்கல்)
தேசியம்பிரித்தானியர்
துறைவானியல்
பணியிடங்கள்கிளாசுக்கோ பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்பெர்லின் பலகலைக்கழகம
பான் பல்கலைக்கழகம்

வாழ்க்கை தொகு

செருமனியில் பிறந்த பெக்கர் பான் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார். இர்ண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பெர்லின் வான்காணகத்தில் உத்வியாளராகச் சேர்ந்தார். கிராவ்போர்டு, பால்காரெசு குறுநில மன்னர் இவரை 1995 இல் அபர்தீன் அருகில் உள்ள துனெச்டு நகரப் பெரிய தனியார் வான்காணகத்துக்குப் பொறுப்பேற்க வைத்தார். அந்த நிறுவனம் 1888 இலையுதிர்காலத்தில் மூடப்பட்டதும், அங்கிருந்த கருவிகள் புதிய அரசு வான்காணகம் கட்டியது அங்கே நிறுவ கருவூல ஆணையர்க்ளிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்காக, எடின்பர்கில் உள்ள பிளாக்கில் மலை தேர்வு செய்யப்பட்டது. பெக்கரும் பணியாளர்களில் ஒருவராகச் சேர்க்கப்பட்டார். இவர் பிறகு நான்கு ஆண்டுகளுக்கு வானியலுக்கான கிளாசுக்கோ கட்டிலில் பணியமர்த்தப்பட்டார்.

உலூத்விக்கின் கிளாசுக்கோ நகர மக்களுக்கு ஆற்றிய உரைக்கு மற்ற ஐக்கிய இராச்சியப் பல்கலைக்கழக உரைகளைக் காட்டிலும் பரவலாக மக்கள் திரண்டு வந்துள்ளனர்.

இவர் 1935 இல் வானியல் கட்டிலில் இருந்து ஓய்வு பெற்றார். நிஅகழ்காலத் தேவைகளை நிறைவு செய்யும் வக்யில் ஆயத்தப்படுத்திய அரசு வான்காணகத்தை விட்டகன்றார். இந்த வான்காணகத் தொடக்க நாட்களில் இவர் கணிசமான அளவுக்குக் கருவிகளைத் திரட்டிக் கூட்டினார். இவர் இத்தாலியில் உள்ள இலாகுண்டோவில் இறந்தார்.[1]

செருமானிய எதிர்ப்புணர்வு தொகு

இவர் 1892 இலேயே கிளாசுக்கோவில் பணியில் சேர்வதற்கு முன்பேபிரித்தானியராக வரிந்துகொள்ளப்பட்டாலும்[2] , இது இரண்டாம் உலகப் போரின்போது, மக்களின் கண்ணோட்டத்தை மாற்றத் தவறியதால் கள் பொதுமக்கள் பார்வையில் கூனிக்குறுகும் நெருக்கடியை உருவாக்கியது. எனவே, இவர் பல்கலைக்கழகத்தில் இருந்து விலகியிருக்க நேர்ந்தது. இவர் தனிமைப்பட்டு அவீமூர் உயர்சமவெளிக்குச் சென்று ஓய்வெடுக்கவும் நேர்ந்தது. இவர் இந்தக் கொடுமைகள் முடிவுக்கு வரும்வரை அங்கேயே வாழ்ந்துவந்தார். இக்காலம் போருக்குப் பின் இவர் மீது எதிர்மறை விளைவைச் செலுத்தி செயல்வேகத்தையும் திறமையையும் குறைத்தது. இதுபற்றி டபுள்யூ. எம். சுமார்ட் பின்வருமாறு பதிவு செய்கிறார். "பெக்கர் மென்மையானவரும் பொறுமை காப்பவரும் உணர்ச்சிவயப் படாதவரும் ஆவார். உலகம் என்ன நினத்தாலும், இவரது ஆழ்ந்த அறிவுக்காகவும் அன்பான பண்புகளுக்காகவும் இவரிடம் பயின்ற மாணவரால் பெரிதும் மதிக்கப்பட்டார்."

மேற்கோள்கள் தொகு

  1. "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 19 September 2015. பார்க்கப்பட்ட நாள் 1 April 2015.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  2. Anon (1893). "List of Aliens to whom Certificates of Naturalization or of Readmission to British Nationality". The London Gazette 26369: 616. http://www.london-gazette.co.uk/issues/26369/pages/616.