எட்வர்ட் குபேர்

இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதி

கிளெமென்செடு எடுவர்ட் குபேர் (Clemencedu Edouard Goubert, சூலை 29, 1894 - ஆகத்து 14, 1979) புதுச்சேரியின் முன்னாள் மேயரும் முதல் முதலமைச்சரும் ஆவார். சூலை 1, 1963 முதல் செப்டம்பர் 11, 1964 வரை முதல்வராக பணியாற்றினார். துவக்கத்தில் பிரெஞ்சு ஆட்சி நீட்டிப்பிற்கு ஆதரவாக இருந்த குபேர் பின்னர் இணைப்பிற்கான போராட்டத்தில் இணைந்தது பிரெஞ்சு ஆட்சிப்பகுதிகள் விடுதலை அடைந்த இந்தியாவுடன் இணைய உறுதுணையாக அமைந்தது.

எட்வர்ட் குபேர்
புதுச்சேரியில் உள்ள எடுவர்டு குபேரின் உருவச்சிலை
1 ஆவது புதுச்சேரி முதலமைச்சர்
பதவியில்
1 சூலை 1963 – 11 செப்டம்பர் 1964
பின்னவர்வி. வெங்கடசுப்பா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1894-07-29)29 சூலை 1894
புதுச்சேரி, பிரெஞ்சு இந்தியா
இறப்பு14 ஆகத்து 1979(1979-08-14) (அகவை 85)
அசோ, கருநாடகம், இந்தியா

மரணம் தொகு

எட்வார்ட் கவுபர்ட், 1979ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 14 அன்று கர்நாடகாவின் பெங்களூர் மாவட்டத்தில் ஆஷோவில் இறந்தார்.[1]

மேலும் பார்க்க தொகு


  1. Nationale, Assemblée. "Edouard Goubert". assemblee-nationale.fr. Archived from the original on 5 May 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எட்வர்ட்_குபேர்&oldid=3386034" இலிருந்து மீள்விக்கப்பட்டது