என் உயிர் நீதானே

எஸ். பி. இராஜ்குமார் இயக்கத்தில் 1998 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

என் உயிர் நீதானே (En Uyir Nee Thaane) என்பது 1998 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் காதல் நாடகத் திரைப்படம் ஆகும். எஸ். பி. இராஜ்குமார் இயக்கிய இப்படத்தில் பிரபு, தேவயானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இப்படம் தெலுங்கு படமான பெல்லிசேசுகொண்டாம் படத்தின் மறு ஆக்கம் ஆகும்.[1] படம் 1998 அக்டோபர் 19 அன்று கலவையான விமர்சனங்களுக்கு வெளியானது.

என் உயிர் நீதானே
இயக்கம்எஸ். பி. இராஜ்குமார்
தயாரிப்புஅன்னூர் என். செந்தில்,
திப்பு, எஸ் செல்வராஜ்
இசைதேவா
நடிப்புபிரபு
தேவயானி
கவுண்டமணி
செந்தில்
மகேஷ்வரி
ஒளிப்பதிவுஇரமேஷ் காந்தி
படத்தொகுப்புகே. தணிகாச்சலம்
கலையகம்ஜீவஜோதி பிலிம்ஸ்
வெளியீடு19 அக்டோபர் 1998 (1998-10-19)
ஓட்டம்150 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதை தொகு

வாசு ( பிரபு ) ஒரு பணக்கார தொழிலதிபர். தனது தந்தைக்கு முறை தவறி பிறந்த மகனை அவன் தாயின் மரணத்திற்குப் பிறகு எடுத்து வளர்க்கிறார். இதை அவரது தந்தை எதிர்க்கிறார். இதனால் குழந்தையுடன் தனியாக வாழ வாசு வீட்டை விட்டு வெளியேறுகிறான். ஜானகி ( தேவயானி ) ஒரு கொலை வழக்கில் கொலைகாரனுக்கு எதிராக சாட்சியமளிக்கிறாள். இதனால் கொலைகாரனின் சகோதரன் பழிவாங்குவதற்காக ஜானகியை பாலியல் பலாத்காரம் செய்கிறான். இதன்பிறகு ஜானகியை அவரது சகோதரர் வீட்டிலிருந்து வெளியேற்றுகிறார். அவள் தன் தொழியின் வீட்டிற்குச் செல்கிறாள், ஆனால் அங்கே கூட, அவள் வெளியேற்றப்படுகிறாள். வாசு அவளை காப்பாற்ற வருகிறான். வாசுவின் முறைதவறி பிறந்த சகோதரனுக்கு தாயாகவும், வாசுவின் ஆலையில் மேலாளராகவும் ஜானகி ஆகிறாள். வாசு அவளை நோக்கி ஈர்க்கப்பட்டு அவளை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறான். அவள் அனுதாபத்தினால் அவ்வாறு செய்கிறான் என்று அவள் நம்புகிறாள். தனது அத்தை மகள் ( மகேஷ்வரி ) அமெரிக்காவிலிருந்து வருவதால், வாசு அவளையே திருமணம் செய்யவேண்டும் என்பதால் அவனது விருப்பத்தை ஏற்க்க வேண்டாம் என்று வாசுவின் தாயார் ( ஸ்ரீவித்யா ) ஜானகியிடம் கூறுகிறார. ஜானகி அதற்கு சம்மதித்து, தனக்கு பதிலாக மகேஸ்வரியை திருமணம் செய்து கொள்ளுமாறு வாசுவிடம் கேட்கிறாள். ஜானகியை பாலியல் வன்புணர்வு செய்தவன் அவளை திருமணம் செய்து கொண்டு, அவள் வழக்கை திரும்பப் பெறுச்செய்து பின்னர் அவளைக் கொன்றுவிட திட்டமிடுகிறான். வாசு அவளைக் காப்பாற்றுகிறான். இறுதியாக, மகேஸ்வரி ஜானகி மீதான வாசுவின் காதலை உணர்ந்து அவரை திருமணம் செய்ய மறுத்துவிடுகிறாள். வாசுவும் ஜானகியும் ஒன்றுபடுகிறார்கள்.

நடிகர்கள் தொகு

இசை தொகு

இப்படத்திற்கு தேவா இசையமைத்தார். ஒலிப் பேழையில் 5 பாடல்கள் உள்ளன.[2][3] பழனி பாரதி, காமகோடியன், அறிவுமதி, எஸ். பி. ராஜ்குமார் ஆகியோர் பாடல் வரிகளை எழுதியுள்ளனர்..

எண். பாடல் பாடகர்கள் பாடல் வரிகள் நீளம் (மீ: கள்)
1 ஜனவரி நிலவே கிருஷ்ணராஜ், சுஜாதா எஸ். பி. ராஜ்குமார் 05:31
2 மெல்ல மெல்ல மனோ, சித்ரா பழனி பாரதி 05:16
3 நிக்கோபார் மனோ, தேவா காமகோடியன் 05:15
4 பதினெட்டு வயசு சுஜாதா, எஸ். பி. பாலசுப்பிரமணியம் பழனி பாரதி 05:03
5 சிம்பொனி பி. உன்னிகிருஷ்ணன், ஹரிணி அறிவுமதி 05:01

குறிப்புகள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-09-29. பார்க்கப்பட்ட நாள் 2021-02-10.
  2. http://tamiltunes.com/en-uyir-neethane.html
  3. http://mio.to/album/29-tamil_movie_songs/16264-En_Uyir_Neethane__1998_/#/album/29-tamil_movie_songs/16264-En_Uyir_Neethane__1998_/[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்_உயிர்_நீதானே&oldid=3941457" இலிருந்து மீள்விக்கப்பட்டது