ஏரிமலை

என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், தருமபுரி மாவட்டம், பென்னாகரம் ஊராட்சி ஒன்றியம், வட்டுவனஅள்

ஏரிமலை (Erimalai) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், தருமபுரி மாவட்டம், பென்னாகரம் ஊராட்சி ஒன்றியம், வட்டுவனஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு மலை கிராமம் ஆகும்.

ஏரிமலை
மலை கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)

அமைவிடம் தொகு

இந்த ஊரானது பென்னாகரத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும், மாவட்டத்தின் தலைநகரான தருமபுரியில் இருந்து 28 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 312 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

பிற தகவல்கள் தொகு

இந்த மலை கிராமமானது கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1100 அடி உயரத்தில் உள்ளது. மேலும் மலையடிவாரத்தில் இருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு சுமார் 150 இருளர் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.[1] இந்த மலைக் கிராமத்துக்குச் செல்ல சாலை வசதி கிடையாது. அதனால் ஏழு கிலோமீட்டர் நடந்தே செல்லவேண்டியுள்ளது. இதனால் தேர்தலின்போது இந்த மலை கிராமத்துக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கழுதை மேல் பொதி ஏற்றப்பட்டு கொண்டு செல்வது வழக்கம். தங்களுக்கு சாலை வசதி உள்ளிட்ட வசதிகளை ஏற்பட்டுத்தித் தரவேண்டி இக்கிராம மக்கள் பல்லாண்டுகளாக கோரிவருகின்றனர். இக்கோரிக்கையை வலியுறுத்தி 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் முழுமையாக தேர்தலைப் புறக்கணிப்பதாக என முடிவெடுத்தனர். அதிகாரிகள் இவர்களை சமாதானப்படுத்திய நிலையில் நான்கரை மணி நேர தாமத்திற்குப் பிறகு வாக்குப்பதிவு தொடங்கியது.[2]

மேற்கோள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏரிமலை&oldid=3601074" இலிருந்து மீள்விக்கப்பட்டது