ஐயாம் தாரானே, 15
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. (April 2012) |
ஐயாம் தாரானே, 15 (I'm Taraneh, 15) என்பது 2002 ஆம் ஆண்டு ராசூல் சதார் அமெலி (Rasul Sadr Ameli) இயக்கத்தில் பாரசீக மொழியில் வெளிவந்த ஈரானிய நாட்டு திரைப்படம் ஆகும். 75வது திரைப்படவிழாவில் சிறந்த வெளிநாட்டு மொழிப்படத்திற்காக நுழைந்த முதல் ஈரானிய திரைப்படம் ஆகும்.[1]
ஐயாம் தாரானே, 15 | |
---|---|
இயக்கம் | ராசூல் சதார் அமெலி |
நடிப்பு | தாரானே அலிடோச்டி |
வெளியீடு | 2002 |
ஓட்டம் | 100 நிமிடங்கள் |
நாடு | ஈரான் |
மொழி | பாரசீகம் |
கதை தொகு
தாய் இல்லாத, தன் தந்தை சிறை வாசம் அனுபவிக்கும் நிலையில் உள்ள இவர்களின் மகளான தாரானே என்பவளுக்கு தற்போது 15 வயதுதான் நடக்கிறது. இவளை ஒரு கம்பளி வியாபாரியான அமீர் என்பவன் மணமுடிக்கிறான். இருவருக்குமிடையில் எந்த பொருத்தமும் இல்லாததால் நான்கே மாதங்களில் பிரிந்துவிடுகின்றனர். அமீர் தொழில் செய்வதற்காக செர்மனிக்கு சென்றுவிடுகிறான். அத்தருவாயில் தான் கருவுற்றிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தாலும், தன் குழந்தையை பெற்றுவளர்க்க முடிவுசெய்கிறாள். அதன்பின் அவள் படும் துன்பங்கள்தான் மீதிக் கதை.