ஓம் பிரகாஷ் ராவத்

ஓம் பிரகாஷ் ராவத் (பிறப்பு திசம்பர் 2, 1953) முன்னாள் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஆவார். இவர் மத்தியப் பிரதேச பிரிவைச் சேர்ந்த, 1977 ஆம் ஆண்டு குழுவில் வந்த ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அலுவலராவார். மத்திய சட்ட அமைச்சகம் இவரைத் தலைமைத் தேர்தல் ஆணையராக சனவரி 20 அன்று நியமித்தது. தலைமைத் தேர்தல் ஆணையராகப் பதவி வகித்து வந்த ஏ.கே. ஜோதியின் பதவிக்காலம் சனவரி 22 ஆம் தேதி நிறைவடைந்தது. புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக ஓம் பிரகாஷ் ராவத் சனவரி 23 அன்று பதவியேற்றார்.[1][2] இவர் முன்னதாக இந்திய பொதுத்துறை தொழில் அமைச்சக செயலராகவும் பணியாற்றியுள்ளார்.

கல்வி தொகு

இவர் முதுகலை இயற்பியல் பட்டத்தை வாரனாசி, பனாரசு இந்துப் பல்கலைக்கழகத்திலும் முடித்துள்ளார்.[3][4][5] இவர் 1989-90 ஆண்டுகளில், ஐக்கிய இராச்சியத்தில், சமூக வளர்ச்சித் திட்டமிடல் பாடத்தில் முதுகலைப் பட்டத்தைப் பெற்றுள்ளார்.

மேற்கோள்கள் தொகு

  1. "Om Prakash Rawat to take over as chief election commissioner on January 23". The Times of India. 23 சனவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 30 சனவரி 2018.
  2. "Om Prakash Rawat appointed new Chief Election Commissioner". The Hindu. 21 January 2018. பார்க்கப்பட்ட நாள் 30 சனவரி 2018.
  3. "Om Prakash Rawat - Executive Record Sheet". Department of Personnel and Training, இந்திய அரசு. பார்க்கப்பட்ட நாள் September 2, 2017.[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "Sh. Om Prakash Rawat takes over as new Election Commissioner of India" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். August 14, 2015. பார்க்கப்பட்ட நாள் September 5, 2017.
  5. "Election Commissioner - Shri Om Prakash Rawat". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் September 2, 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓம்_பிரகாஷ்_ராவத்&oldid=3779014" இலிருந்து மீள்விக்கப்பட்டது