கடகத்தூர்

தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர்

கடகத்தூர் (Kadagathur) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், தருமபுரி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1]

கடகத்தூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
636809

அறிமுகம் தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவிலும், மாநில தலையநகரான சென்னையிலிருந்து 291 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. இந்த கிராமம் ஒரு பழமையான கிராமம் ஆகும் இந்த கிராமத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட புத்தர் சிலையானது தருமபுரி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த கிராமம் நான்கு தெருக்களைக் கொண்டுள்ளது. அவை கவுண்டர் தெரு, கீழ் தெரு, பாவடை தெரு மற்றும் சேரித் தெரு என்பவை ஆகும். நான்கு தெருக்களுக்குப் பிறகு கடகத்தூரில் புதியதாக மற்றொரு தெரு உருவானது அது மேல் தெரு என்று அழைக்கப்படுகிறார்கள். கடகத்தூரில் வாழும் மக்களில் பெரும்பாலோர் வன்னியர் மற்றும் ஆதிதிராவிட மக்களாவார்.

மக்கள் வகைபாடு தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 1456 குடும்பங்கள் வசிக்கின்றன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 6096 ஆகும். இதில் பெண்களின் எண்ணிக்கை 2945 என்றும், ஆண்களின் எண்ணிக்கை 3151 என்றும் உள்ளது. மொத்த எழுத்தறிவு விகிதம் 64.8 % ஆகும்.[2] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.

கோயில்கள் தொகு

மேற்கோள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கடகத்தூர்&oldid=3868932" இலிருந்து மீள்விக்கப்பட்டது