கணபதி ஐயர் (1709 - 1794) ஈழத்தில் மரபுவழி நாடகங்களின் முன்னோடி என அறியப்படுபவர். அத்துடன் இவர் ஒரு சிற்றிலக்கியப் புலவரும் ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு தொகு

இப்புலவர் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் வசித்தவர். தமது சுற்றத்தவர்களுள் ஒருவரான சண்முக ஐயர் என்பவர் சில கீர்த்தனைகளுடன் தொடங்கி நிறைவேற்றாதுவிட்ட சுந்தரி நாடகத்தை வாளபிமன் நாடகம் என்று மாற்றி, எல்லோரும் வியக்கும் வண்ணம் பாடி முடித்தவர்.

இயற்றிய நூற்கள் தொகு

நாடகங்கள் தொகு

  • வாளபிமன் நாடகம்
  • வயித்திலிங்கக்குறவஞ்சி
  • மலையநந்தினி நாடகம்
  • அலங்காரரூப நாடகம்
  • அதிரூபவதி நாடகம்

சிற்றிலக்கியங்கள் தொகு

  • வட்டுநகர்ப்பிட்டி வயற்பத்திரகாளி பேரில் பதிகம், ஊஞ்சற் பிரபந்தம்
  • பருத்தித்துறை கணேசர் பேரில் வெண்பா, ஆசிரியம், கலி, வஞ்சி, மருள் என்னும் நூறு கவிதைகள்

உசாத்துணை தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கணபதி_ஐயர்&oldid=961837" இலிருந்து மீள்விக்கப்பட்டது