கத்தரிப்புலம்

கத்தரிப்புலம் என்பது நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேதாரண்யத்திற்கு வடமேற்கே அமைந்துள்ள ஒரு சிற்றூர் ஆகும். இது வேதாரண்யத்திலிருந்து சுமார் 15 கி.மீ.தொலைவில் அமைந்துள்ளது.

பெயர்க்காரணம் தொகு

முன்னொரு காலத்தில் இக்கிராமத்தில் சப்த ரிசிகள் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. எனவே இவ்வூர் சப்த ரிசிப்புலம் என வழங்கலாயிற்று. காலப்போக்கில் பேச்சு வழக்கில் இப்பெயர் மருவி கத்தரிப்புலம் என அழைக்கப்பட்டு வருகின்றது.[1]

தொழில் தொகு

இவ்வூரின் முக்கிய தொழில் உழவுத் தொழில் ஆகும். நெல், தென்னை, மா, முந்திரி, சவுக்கு, வேர்க்கடலை, புளி, பயறு வகைகள் மற்றும் கத்தரிக்காய், வெண்டைக்காய், கொத்தவரங்காய், புடலங்காய், பாகற்காய் போன்ற காய்கறிகளும் இங்கு பருவ காலங்களுக்கு ஏற்ப சாகுபடி செய்யப்படுகின்றன.

மேற்கோள்கள் தொகு

  1. "சப்த ரிஷிகள் பூஜித்த தலம்! - தினமணி". 27 நவம்பர் 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கத்தரிப்புலம்&oldid=3838154" இலிருந்து மீள்விக்கப்பட்டது