கமல் தேசாய்

இந்திய நாவலாசிரியர்

கமல் தேசாய் (Kamal Desai) இந்தியாவின் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர் ஆவார். 1928 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். மராத்தி மொழியில் நாவல்கள் எழுதினார்.[1] இரண்டு சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார்.

பெல்காம் மாவட்டத்தில் உள்ள யம்கான் மார்டியில் பிறந்தார். பெல்காமில் படித்தார். பம்பாய் பல்கலைக்கழகத்தில் மராத்தியில் முதுகலைப் பட்டம் முடித்தார்.[2] கமல் தேசாய் 1955 ஆம் ஆண்டு முதல் எழுதத் தொடங்கினார் மற்றும் புனேவில் ஓய்வு பெற்றார்.[1]

1975 ஆம் ஆண்டு வெளிவந்த தொப்பி அணிந்த பெண் என்ற நாவலுக்காக இவர் மிகவும் பிரபலமானவர்.

தேர்ந்தெடுட்க்கப்பட்ட படைப்புகள்[1] தொகு

  • ரேங்கு (நிறங்கள்), கதைகள் (1962)
  • ரேட்ராந்தின் அம்கா யுதாச்சா பிரசாங்கு (நாங்கள் இரவும் பகலும் போரை எதிர்கொள்கிறோம்), நாவல் (1963)
  • கால சூர்யா (இருண்ட சூரியன்), நாவல் (1972)
  • ரேங்கு-2, கதைகள் (1998)[2]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 Tharu, Susie J; Lalita, Ke (1993). Women Writing in India: The twentieth century. pp. 265–67. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1558610294.
  2. 2.0 2.1 Miller, Jane Eldridge (2001). Who's who in Contemporary Women's Writing. pp. 81–82. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0415159806.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கமல்_தேசாய்&oldid=3416276" இலிருந்து மீள்விக்கப்பட்டது