கற்றளி (ஒலிப்பு) என்பது கற்களால் கட்டப்பெற்ற கோயில்களைக் குறிப்பதாகும். இவை கற்கோயில்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இம்முறையில் கற்களை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி கட்டப்பெற்றன. இம்முறையில் சுண்ணம் கலவைக் கூட பயன்படுத்தப் பெறவில்லை.

இக்கற்றளிகள் அமைப்பது கி.பி ஏழாம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து தொடங்கப் பெற்றது. செங்கற்கள் கொண்டு அமைக்கப் பெற்ற கோயில்களும், மரக் கோயில்களும் பிற்காலத்தில் அரசர்களால் கற்றளிகளாக மாற்றப்பட்டன.

கருவி நூல் தொகு

  • தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் - மயிலை சீனி வேங்கடசாமி

இவற்றையும் காண்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கற்றளி&oldid=2553943" இலிருந்து மீள்விக்கப்பட்டது