களப்பணி (நாட்டுப்புறவியல்)

நாட்டுப்புறவியலில் களப்பணி என்பது நாட்டார் பாடல்கள், கூத்து முதலிய கலைகளை செய்வோரிடம் சென்று தகவல்களை சேகரித்தல் மற்றும் ஆவணப்படுத்துதலாகும்.[1] களப்பணியில் ஆய்வைக் களத்தினை தேர்வு செய்தல், நாட்டாரை அனுகுதல், தகவல்களை ஆவணமாக்கள் ஆகிய பகுதிகள் உள்ளன. இவற்றோடு கிடைத்த தரவுகளை வகைப்படுத்துதலும் முக்கியத்துவமானது.

களத்தேர்வு தொகு

நாட்டார்ப் பாடல்கள், கூத்து இவை நடக்கும் இடங்களை அறிந்துகொண்டு அவ்விடத்தினை தேர்வு செய்கிறார்கள். [2] அவ்விடங்களில் நண்பர்கள், உறவினர்களை அணுகி கலைஞர்களை தொடர்பு கொள்கிறார்கள்.

களத்தினை தேர்வு செய்ததும் அவ்விட அமைவிடம், மக்களின் சாதி, இனம் மற்றும் அவர்களின் பழக்க வழக்கங்கள் குறித்தான தகவல்களையும், முன்பு களப்பணிக்காக சென்றவர்களின் குறிப்பைகளையும் அறிந்து கொள்கிறார்கள்.

தகவல் சேகரித்தல் தொகு

களப்பணியில் ஈடுபடுபவர் உற்று நோக்கல்,நேர் காணல், வினாத் தொகுப்பு ஆகிய முறைகளில் தகவல்களைப் பெறுகின்றார்கள். களப்பணி செய்யும் இடத்திற்கு தக்கவாறு இம்முறைகளில் ஒன்றினை தேர்வு செய்கின்றனர்.


தரவுகளை வகைப்படுத்துதல் தொகு

களப்பணியை மேற்கொண்டவர் இரண்டு விதமாக தரவுகளை வகைப்படுத்துகின்றனர். [3]

  1. முதல் நிலைத் தரவுகள் - உற்று நோக்கல், நேர்காணல், வினாத் தொகுப்பு போன்றவை மூலமாக சேகரித்த தரவுகள்.
  2. துணை நிலைத் தரவுகள் - செய்திதாள்கள், இதழ்கள், வானொலி, தொலைக்காட்சி செய்திகள்

ஆவணமாக்கள் தொகு

களப்பணி செய்து அறிந்து கொண்டதை நூலாக தொகுத்து ஆவணம் செய்கின்றனர். நாளிதழ்கள், இலக்கிய இதழ்கள் போன்றவற்றில் எழுதியும், வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றில் நடத்தப்படும் நிகழ்ச்சியிலும் ஆவணமாக்கள் செய்கின்றனர்.

ஆவணமாக்களில் பெரும்பங்கு அச்சு இதழ்களுக்கு உள்ளது.

ஆதாரங்கள் தொகு

  1. http://www.tamilvu.org/courses/degree/a061/a0611/html/a0611005.htm
  2. களத்தேர்வில் கவனிக்க வேண்டிவை - தமிழாய்வு தளம்
  3. தரவுகளின் வகைப்பாடு - தமிழாய்வு

வெளி இணைப்புகள் தொகு