காசிம் புலவர்

காசிம் புலவர் ஓர் இசுலாமிய தமிழ், தமிழிசை அறிஞர் ஆவார். இவர் திருவடிக் கவிராயர் எனும் சான்றோரிடம் கல்வி கற்றார். கற்ற நூல்களுள் அருணகிரிநாதரின் திருப்புகழில் மிகவும் ஈடுபாடு கொண்டு தானும் அதுபோல் ஒரு நூல் இயற்ற விரும்பி நபிகள் நாயகத்திடம் அருள் வேண்டினார். அன்பரின் வேண்டுகோளைக் கேட்ட நபிகள்நாயகம் புலவரின் கனவில் தோன்றிப் ' பகரும்' என்று அடியெடுத்துக் கொடுக்க உடனே புலவரும் ' பகரு முருவிலி அருவிலி வெருவிலி' என்று தொடங்கித் திருநபிகள் நாயகத்தின் மீது ஒரு திருப்புகழ் நூலினைப் பாடினார். திருப்புகழுக்கு இணையான நபிகள் நாயகம் அவர்கள் மீதான திருப்புகழுக்காக இவர் அறியப்படுகிறார். இவர் 14 நூல்களை இயற்றி உள்ளார். சவ்வாதுப் புலவரால் 'மதுர கவி' என்று பாராட்டப்பட்ட பெருமையுடையவர் ஆவார்.

காஸிம்
பிறப்புகாயல்பட்டினம், தமிழ்நாடு
இறப்பு12 துல்கஅதா 1177 (ஹிஜ்ரி)
தொழில்புலவர், ஸூபி ஞானி
மொழிதமிழ், அறபு

படைப்புகள் தொகு

உசாத்துணை தொகு

  • தமிழிலக்கிய வரலாறு. ஜனகா பதிப்பகம் . 1997

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=காசிம்_புலவர்&oldid=3627162" இலிருந்து மீள்விக்கப்பட்டது