காசி விசுவநாத பாண்டியன்

எட்டையபுர இளையாராஜாவாக இருந்தவர்

காசி விசுவநாத பாண்டியன் (7 மார்ச் 1888 - 10 நவம்பர் 1941) எட்டயபுரம் இளையரசராக இருந்தவர். இராமாயணக் கதையை அடிப்படையாகக் கொண்டு தயாளன் என்னும் பெயரில் ஒரு நாடகத்தை எழுதி அரங்கேற்றினர். இக் கதை பின்னர் தயாளன் என்ற பெயரிலேயே திரைப்படமாகவும் வந்தது. "காசி மகாராஜா பிக்சர் சர்க்யூட்" என்று நிறுவனத்தின் மூலம் இப்படத்தைத் தயாரித்தார்.[1] இவர் "சிறுவர் நாடகக் குழு" என்ற நாடகக்குழுவை நடத்தினார்.

காசி விசுவநாத பாண்டியன் அவர்களின் உருவப்படம்

மேற்கோள்கள் தொகு

  1. "Dayalan (1941)". The Hindu (in Indian English). 2014-04-12. பார்க்கப்பட்ட நாள் 2024-02-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காசி_விசுவநாத_பாண்டியன்&oldid=3889158" இலிருந்து மீள்விக்கப்பட்டது