காரா குலாகு

காரா குலாகு என்பவர் சகதாயி கானரசின் கான் ஆவார். இவர் முத்துகனின் மகன் ஆவார். முத்துகன் சகதாயி கானின் விருப்பத்திற்குரிய மகன் ஆவார். ஆனால் இவர் 1221ஆம் ஆண்டு பாமியான் முற்றுகையின்போது கொல்லப்பட்டார். காரா குலாகு கானாகுவதற்காக சகதாயி கான் மற்றும் ஒக்தாயி கான் முன்மொழிந்தனர். காரா குலாகுவிற்கு வயது குறைவாக இருந்த காரணத்தால் எபுசுகுன் அவருக்குப் பிரதிநிதியாகச் செயல்பட்டார். தனக்கு உண்மையான அதிகாரம் இருக்க வேண்டும் என்பதற்காக 1246ஆம் ஆண்டு ககானான குயுக் கான் காரா குலாகுவைப் பதவியிலிருந்து நீக்கி, காரா குலாகுவின் சிற்றப்பன் எசு மோங்கேயைப் பதவியில் அமர்த்தினார்.[1]

காரா குலாகு
சகதாயி கானரசின் கான்
முதல் ஆட்சி1242–1246
முன்னையவர்சகதாயி கான்
பின்னையவர்எசு மோங்கே
இரண்டாவது ஆட்சி1252
முன்னையவர்எசு மோங்கே
பின்னையவர்முபாரக் ஷா
பிறப்புதெரியவில்லை
இறப்பு1252
துணைவர்ஒர்கானா
மரபுபோர்சிசின்

எனினும் குயுக் கானுக்குப் பிறகு பதவிக்கு வந்த மோங்கே கானுக்கு ஒக்தாயி குடும்ப உறுப்பினர்களை ஒழித்துக்கட்டுவதில் உதவிகரமாக இருந்ததால் காரா குலாகு ககானின் விருப்பத்திற்குரியவர் ஆனார். காரா குலாகுவிற்குச் சகதாயி கானரசின் கானாக மீண்டும் பதவி வழங்கப்பட்டது. எனினும் தனது நாட்டிற்குத் திரும்பும் முன்னரே இவர் இறந்தார். இவரது மனைவியான ஒர்கானா கதுன் பிரதிநிதியாகச் செயல்படமோங்கே அனுமதி அளித்தார். காரா குலாகுவிற்குப் பிறகு அவரது மகன் முபாரக் ஷா ஆட்சிக்கு வந்தார்.

உசாத்துணை தொகு

  1. Boyle, John Andrew (1971). The Successors of Genghis Khan. Columbia University Press. p. 149.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=காரா_குலாகு&oldid=3462218" இலிருந்து மீள்விக்கப்பட்டது