கார்த்தி கோவிந்தர்

கார்த்திகேசன் கோவெண்டர் (ஆங்கில மொழி: Karthigasen Govender) கார்த்தி கோவெண்டர் தென்னாப்பிரிக்க மனித உரிமைகள் ஆணையத்தின் ஆணையராக இருமுறை (1995 முதல் 2009 வரை) பணியாற்றியவர்[1]. ஜோடி கோலப்பன், கார்த்தி கோவெண்டர் இருவரும் தென்னாப்பிரிக்காவில் சிறுபான்மையினராக இருக்கும் தமிழ்க்குல மரபைச் சேர்ந்த ஆணையராவர்.

குவாசூலு-நடால் மாநில பல்கலைக்கழகத்தின் சட்டத்துறையில் இணை பேராசிரியராகப் பணியாற்றும் இவர் அரசியல் சாசனம் மற்றும் ஆட்சிமுறை சார்ந்த சட்டங்களைப் பயிற்றுவிக்கின்றார். மிச்சிகன் பல்கலைக்கழக சட்டப்பள்ளியில் வருகைதரு பேராசிரியராகவும் பணியாற்றுகின்றார். அரசியல் சாசன சட்டங்கள் தொடர்பான பல ஆக்கங்களைப் படைத்துள்ளார்.

மேற்கோள்கள் தொகு

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்த்தி_கோவிந்தர்&oldid=3799945" இலிருந்து மீள்விக்கப்பட்டது