காஸ்டர் செமன்யா

மோக்காடி காஸ்டர் செமன்யா (பிறப்பு 7 சனவரி 1991), ஒரு தென்னாப்பிரிக்க நடுத்தர-தொலைவு ஓட்டப்பந்தய வீரரும் உலக வாகையரும் ஆவார்.

2009 பெர்லினில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற செமன்யாவின் பதக்கம், பாலின பரிசோதனையால் பறிக்கப்பட்டது. நாடு திரும்பிய செமன்யாவை தென்னாப்ரிக்க விளையாட்டுத்துறை அமைச்சர் நேரில் சென்று ‘தாங்கள் இருப்பதாக’ ஆறுதல் கூறினார். தென்னாப்ரிக்க பிரதமர் செமன்யாவிற்கு ஆதரவாக, அந்தச் சோதனையை எதிர்த்து கடுமையான எதிர்ப்பை பதிவுசெய்தார். அந்நாட்டு அரசே அவருக்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் அவையில் வழக்கு தொடர்ந்து, வெற்றியும் கண்டது.

2012ஆம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவில், தென்னாப்ரிக்காவின் சார்பாக அந்நாட்டு கொடியை கையில் ஏந்தி சென்றவர் அதே காஸ்டர் செமன்யாதான்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=காஸ்டர்_செமன்யா&oldid=3481697" இலிருந்து மீள்விக்கப்பட்டது