குட்லாடம்பட்டி அருவி

குட்லாடம்பட்டி அருவி, மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை அடுத்த குட்லாடம்பட்டி கிராமத்திற்கு வடக்கே சிறுமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. சிறுமலையில் மழை பெய்யும் காலங்களில், இந்த அருவியில் தண்ணீர் கொட்டும். இதுபோன்ற நேரங்களில் சுற்றுலா பயணிகள் ஏராளமான அளவில் இங்கு குவிகின்றனர். இந்த அருவியில் வருடத்தில் ஐந்து முதல் எட்டு மாதங்கள் வரை தண்ணீர் வரத்து இருக்கும். வாரம் முழுவதும் மக்கள் வந்தாலும்கூட சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் கூட்டம் அதிகமாக காணப்படும்.

2010 ஆம் ஆண்டின் இறுதிப்பருவத்தில் பெய்த மழையைத் தொடர்ந்து, கொட்டும் அருவியில் உற்சாக குளியலிடும் உள்ளூர் சுற்றலா பயணிகள்.

காட்சியகம் தொகு

ஆதாரங்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=குட்லாடம்பட்டி_அருவி&oldid=3629601" இலிருந்து மீள்விக்கப்பட்டது