குரு காசி பல்கலைக்கழகம், தல்வாண்டி சாபோ

குரு காசி பல்கலைக்கழகம் (Guru Kashi University (GKU) (பஞ்சாபி:ਗੁਰੂ ਕਾਸ਼ੀ ਯੂਨੀਵਰਸਿਟੀ) என்றறியப்படும் இந்த தனியார் பல்கலைக்கழகம், இந்திய பஞ்சாப் மாகாணத்தின் பட்டிண்டா மாவட்டத்திலுள்ள தல்வாண்டி சாபோ எனும் நகர்ப்புற பகுதியில் சர்துல்கர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் சட்டமன்ற சட்டத்தின் (பஞ்சாப் சட்ட எண் 37/2011) கீழ் நிறுவப்பட்டுள்ள இப்பல்கலைக்கழகம், அனைத்து மட்டங்களிலும், மற்றும் அனைத்து துறைகளிலும், உயர்கல்வி (தொழில்முறை, மருத்துவம், தொழினுட்பம், மற்றும் பொதுக்கல்வி உட்பட) வழங்கும் நோக்குடன் 2011-ம் ஆண்டு, தொடங்கப்பட்டது.[2]

குரு காசி பல்கலைக்கழகம்
Guru Kashi University
வகைதனியார் பல்கலைக்கழகம்
உருவாக்கம்2011
வேந்தர்டாக்டர், ஜெ. எஸ். தலிவால்
(Dr.J.S Dhaliwal)
துணை வேந்தர்டாக்டர், என். எஸ். மல்கி
(Dr. N.S. Malhi)[1]
மாணவர்கள்7000-க்கும், கூடுதலாக
அமைவிடம், ,
வளாகம்சுமார் 50 ஏக்கர்
சுருக்கப் பெயர்ஜிகேயு (GKU)
சேர்ப்புயுஜிசி (UGC)
இணையதளம்gurukashiuniversity.in

சான்றாதாரங்கள் தொகு

  1. "Appointment of V-C". Archived from the original on 2012-12-05. பார்க்கப்பட்ட நாள் 2016-07-29.
  2. "About GURU KASHI UNIVERSITY". www.gurukashiuniversity.in (ஆங்கிலம்). 2015. பார்க்கப்பட்ட நாள் 2016-07-29.