மலேசியாவின் கூட்டாட்சிப் பகுதிகள்

(கூட்டாட்சிப் பகுதி (மலேசியா) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கூட்டாட்சிப் பகுதி (மலாய்: Wilayah Persekutuan; ஆங்கிலம்: Federal Territories) என்பது மலேசியாவின் கோலாலம்பூர், புத்ராஜாயா, லபுவான் பகுதிகளை மலேசியக் கூட்டாட்சி அரசாங்கத்தால் நேரடியாக ஆளப்படும் ஆட்சிப் பகுதிகளைக் குறிப்பிடுவதாகும்.

மலேசியாவின் கூட்டாட்சிப் பகுதி
Wilayah Persekutuan
Federal Territories
联邦直辖区
அலுவல் சின்னம் மலேசியாவின் கூட்டாட்சிப் பகுதி
சின்னம்
Location of மலேசியாவின் கூட்டாட்சிப் பகுதி
உள்ளடங்கியவைகோலாலம்பூர்
லபுவான்
புத்ராஜெயா
கூட்டாட்சிப் பகுதியானதுகோலாலம்பூர்: 1 பெப்ரவரி 1974
லபுவான்: 16 ஏப்ரல் 1984
புத்ராஜெயா: 1 பெப்ரவரி 2001
அமைச்சகத்தின் கீழ் அமைப்பு27 மார்ச் 2004
அரசு
 • அமைச்சர்சகிடான் காசிம்
பரப்பளவு
 • மொத்தம்381.65 km2 (147.36 sq mi)
மக்கள்தொகை (2004)
 • மொத்தம்1,602,388
 • அடர்த்தி4,198.6/km2 (10,874/sq mi)
மலேசிய அஞ்சல் குறியீடுகோலாலம்பூர்
50xxx முதல் 60xxx வரை
68xxx
லபுவான்
87xxx
புத்ராஜெயா
62xxx
மலேசியத் தொலைபேசி எண்03a
087b
மாநில கொள்கைமாஜூ டான் செஜாத்திரா
Maju dan Sejahtera
மாநில நாட்டுப்பண்மாஜூ செஜாத்திரா
நிர்வாகம்கூட்டாட்சிப் பகுதி அமைச்சகம்
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள்W1
L2
PUTRAJAYA3
இணையதளம்www.kwp.gov.my
a கோலாலம்பூர் மற்றும் புத்ராஜாயா
b லபுவான்
1 கோலாலம்பூர்
2 லபுவான்
3புத்ராஜாயா

கோலாலம்பூர் மலேசியாவின் தலைநகரமாகவும்; புத்ராஜாயா நிர்வாக தலைநகராகும்; லபுவான் கடல் கடந்த பன்னாட்டு நிதி மையமாகவும் செயல்படுகின்றன..கோலாலம்பூர் கூட்டாட்சிப் பகுதி; புத்ராஜாயா கூட்டாட்சிப் பகுதி; ஆகிய இரு கூட்டாட்சிப் பகுதிகளும் சிலாங்கூர் மாநிலத்திற்குள் உள்ளன; லபுவான் கூட்டாட்சிப் பகுதி, சபா மாநிலத்தில் உள்ள ஒரு தீவாகும்.

நிர்வாகங்கள் தொகு

கோலாலம்பூர், புத்ராஜாயா, லபுவான் ஆகிய அந்த மூன்று கூட்டரசுப் பகுதிகளும் மலேசியக் கூட்டரசுப் பிரதேச அமைச்சின் (Ministry for the Federal Territories) அதிகார வரம்பிற்கு உட்பட்ட பகுதிகளாகும்.[1]

1979-ஆம் ஆண்டில் முதலில் கூட்டரசுப் பிரதேச அமைச்சகம் நிறுவப்பட்டது அந்த அமைச்சு, கோலாலம்பூர்; கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதிகளின் திட்டமிடல் மற்றும் நிர்வாகத்திற்கு பொறுப்பாக இருந்தது.

கூட்டரசுப் பிரதேச அமைச்சகம் தொகு

1981-ஆம் ஆண்டில் பிரதமர் அலுவலகத்தின் கீழ் கிள்ளான் பள்ளத்தாக்கின் திட்டமிடல் பிரிவாகச் செயல்படுவதற்கு கூட்டரசுப் பிரதேச அமைச்சகம் மறுசீரமைப்புச் செய்யப்பட்டது

பின்னர் 2004-ஆம் ஆண்டில் கூட்டரசுப் பிரதேச அமைச்சகம் ஒரு முழு அளவிலான அமைச்சகமாக மாற்றப்பட்டது. அந்தப் புதிய அமைச்சகம், மூன்று கூட்டரசுப் பகுதிகளான கோலாலம்பூர், லாபுவான் மற்றும் புத்ராஜெயாவின் வளர்ச்சியில் கவனம் செலுத்தி வருகிறது.[2]

வரலாறு தொகு

கூட்டாட்சி பிரதேசங்கள் முதலில் சிலாங்கூர் மற்றும் சபா ஆகிய இரண்டு மாநிலங்களின் ஒரு பகுதியாக இருந்தன. கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா இரண்டும் சிலாங்கூரின் ஒரு பகுதியாக இருந்தன, அதே சமயம் லாபுவான் சபாவின் ஒரு பகுதியாக இருந்தது.[3]

தொடக்கக் காலத்தில் கோலாலம்பூர் நகரம் சிலாங்கூர் மாநிலத்தின் தலைநகரமாக இருந்தது. 1948-ஆம் ஆண்டில், மலாயா கூட்டமைப்பின் (Federation of Malaya) தேசியத் தலைநகரமாக மாறியது.

பாரிசான் நேசனல் கட்சியின் ஆளுமை தொகு

1957-ஆம் ஆண்டில் மலேசியா சுதந்திரம் பெற்றது. அதில் இருந்து, கோலாலம்பூர் நகரமும் சிலாங்கூர் மாநிலமும் பாரிசான் நேசனல் கட்சியின் ஆளுமையில் இருந்தது. 1969-ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில், கோலாலம்பூர் நகரத் தொகுதிககளில் சிலவற்றை பாரிசான் நேசனல் கட்சி இழந்தது.

இருப்பினும் சிலாங்கூர் மாநிலத்தைத் தக்க வைத்துக் கொண்டது. அதே தேர்தல் கோலாலம்பூரில் பெரும் இனக் கலவரத்தையும் ஏற்படுத்தியது.

வெளி இணைப்புகள் தொகு

  1. "Ministry of Federal Territories and Urban Wellbeing (Kementerian Wilayah Persekutuan Dan Kesejahteraan Bandar) Malaysia". MALAYSIA CENTRAL (ID). 20 September 2011. பார்க்கப்பட்ட நாள் 27 March 2022.
  2. "Kementerian Wilayah Persekutuan - Latar Belakang". 2021-07-16. Archived from the original on 16 July 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-09-10.
  3. Kaur, Dashveenjit (31 January 2019). "The journey of Putrajaya — Malaysia's jewel capital city". The Malaysian Reserve இம் மூலத்தில் இருந்து 14 ஆகஸ்ட் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200814190551/https://themalaysianreserve.com/2019/01/31/the-journey-of-putrajaya-malaysias-jewel-capital-city/.