கெய்புல் லாம்சோ தேசியப் பூங்கா

கெய்புல் லாம்சோ தேசியப் பூங்கா (The Keibul Lamjao National Park) இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் பிஷ்னுபூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இப்பூங்காவின் மொத்தப் பரப்பளவு சுமார் 40 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். இது இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இப்பூங்காவினுள் லோக்டாக் ஏரி அமைந்துள்ளது. பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்களின் முயற்சியால் இது 1966 ஆம் ஆண்டு வனவிலங்குகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டு பின்னர் 1977 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27 ஆம் தியதி தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது.[1][2][3][4][5] இத்தேசியப் பூங்காவானது மீன் பிடிப்போராலும், வெள்ளப்பெருக்கினாலும், மின் உற்பத்தி நிலையத்தினாலும் பாதிக்கப்படுவதாக இயற்கை ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இப்பூங்கா மணிப்பூர் தலைநகர் இம்பால் நகரிலிருந்து 53 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது.

கெய்புல் லாம்சோ தேசியப் பூங்கா
பரப்பளவு40 சதுர கிலோமீட்டர்கள்
நிறுவப்பட்டது28 மார்ச் 1977
manipurforest.gov.in/KeibulLamjao.htm

புகைப்படங்கள் தொகு

இப்பூங்காவிலுள்ள விலங்குகள் மற்றும் பறவைகளின் புகைப்படங்களுள் சில கீழே,

மேற்கோள்கள் தொகு

  1. "Keibul Lamjao National Park Wild Life parks". பார்க்கப்பட்ட நாள் 2009-03-29.
  2. "Keibul Lamjao National Park Forest Department, Government of Manipur". Archived from the original on 2008-10-15. பார்க்கப்பட்ட நாள் 2009-01-09. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  3. E. Ishwarjit Singh (1998-10-06). Manipur, a Tourist Paradise. B.R. Pub. Corp., 2005, Original from the University of Michigan. p. 79. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7646-506-2, 9788176465069. பார்க்கப்பட்ட நாள் 2009-03-29. {{cite book}}: Check |isbn= value: invalid character (help)
  4. "Keibul Lamjao National Park". Archived from the original on 2005-11-09. பார்க்கப்பட்ட நாள் 2009-03-29. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  5. Christen M.Wemmer (1998). Deer : status survey and conservation action plan. IUCN. p. 69. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 2-8317-0454-5. பார்க்கப்பட்ட நாள் 2009-03-29. {{cite book}}: Unknown parameter |coauthors= ignored (help)[தொடர்பிழந்த இணைப்பு]