கொள்ளிடம் ஆறு

காவிரியாற்றின் கிளை ஆறு

கொள்ளிடம் ஆறு (பிரித்தானிய ஆட்சிக்கால ஆங்கிலம்: Coleroon) தமிழ்நாட்டில் ஓடும் காவிரி ஆற்றின் கிளை ஆறு ஆகும். காவிரியின் வெள்ளப் பெருக்கைக் கொள்ளும் இடம் கொள்ளிடம் எனப் பெயர் பெற்றது.[1]

கொள்ளிடம் ஆறு

ஆற்றின் போக்கு தொகு

திருச்சி அருகே திருவரங்கம் தீவில் மேலணை எனப்படும் முக்கொம்பில் காவிரியில் இருந்து பிரிந்து வடக்கே சென்று பின்னர் திருச்சி, அரியலூர், தஞ்சை, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களுக்கு இடையே கிழக்கு முகமாக ஓடி ஆயங்குடி, முட்டம் வழியே பரங்கிப் பேட்டைக்கு 5 கி.மீ. தெற்கில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

கரையில் உள்ள நகரங்கள் தொகு

கொள்ளிடம், காவிரியின் வெள்ள வடிகாலாக பயன்படுகிறது.[2] சிதம்பரம் நகர் இவ்வாற்றின் கரையில் உள்ள புகழ்பெற்ற இடமாகும்.அரியலூர் மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற திருமழபாடி மற்றும் திருமானூர் ஆற்றின் வட கரையில் உள்ளது .

மேற்கோள்கள் தொகு

  1. கணேசன். இரா (1974) அறிவியல் துறைச் சொல்லாக்க முறைகள். இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்ற ஆறாவது கருத்தரங்கு ஆய்வுக்கோவை, பாண்டிச்சேரி, தாகூர் அரசினர் கலைக்கல்லூரித் தமிழ்த்துறைச் சார்பு வெளியீடு. பக்க எண்கள் 893, 895
  2. பொதுப்பணித்துறை,கடலூர்

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொள்ளிடம்_ஆறு&oldid=3784123" இலிருந்து மீள்விக்கப்பட்டது