கோ. செபமலை (G. Jebamalai)(பிறப்பு சூலை 28, 1933) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் கடலூர் மாவட்டம் அ. களத்தூரைச் சார்ந்தவர். இவர் விருத்தாசலத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வியினை முடித்துள்ளார். செபமலை, திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் ஆவார். இவர் 1971ஆம் ஆண்டில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக வேட்பாளராக மங்களூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர் ஆனார்.[1]

சட்டமன்ற உறுப்பினராக தொகு

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
1971 மங்களூர் திமுக 32,612 52.24

மேற்கோள்கள் தொகு

  1. Written at Madras. தமிழ்நாடு சட்டப் பேரவை ”யார் எவர்”. 01.01.1972: Tamil Nadu Legislative Assembly Department. 1971. p. 124. {{cite book}}: More than one of |pages=, |at=, and |page= specified (help); Unknown parameter |trans_title= ignored (help)CS1 maint: location (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோ._செபமலை&oldid=3452662" இலிருந்து மீள்விக்கப்பட்டது