கௌரி குண்டம்

கௌரி குண்டம் (Gauri Kund) இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் ருத்திரப்பிரயாகை மாவட்டத்தில் உள்ள கேதார்நாத் கோயிலுக்குச் செல்லும் வழியில் அமைந்த கௌரி குண்டம், இந்துக்களின் புனித யாத்திரைத் தலம் ஆகும். [1][2] இது உத்தரகாண்ட் மாநிலத்தின் கார்வால் கோட்டத்தின் இமயமலையில் 6,520 அடி உயரத்தில் அமைந்துள்ளது. கௌரி குண்டத்தில் வெந்நீர் ஊற்றுகள் ஊரும் குண்டம் உள்ளது. [3] இத்தலத்தில் உள்ள குளத்தில் குளித்த பின்னரே பார்வதி தேவி, சிவபெருமானை மணந்து விநாயகரை உருவாக்கியதாக இந்து தொன்மவியல் நம்பிக்கை ஆகும். கௌரி குண்டத்திலிருந்து 13 கிமீ தொலைவில் இமயமலையில் கேதார்நாத் கோயில் உள்ளது.

கௌரி குண்டம்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:உத்தராகண்ட்
அமைவு:ருத்திரப்பிரயாகை மாவட்டத்தில் உள்ள கேதார்நாத் கோயிலின் அடிவாரம்
ஆள்கூறுகள்:30°38′N 79°1′E / 30.633°N 79.017°E / 30.633; 79.017
கோயில் தகவல்கள்

ரிஷிகேசிலிருந்து 220 கிமீ தொலைவில் கௌரி குண்டதில் அநேகதங்காபதம் அருள்மண்ணேசுவரர் கோயில் உள்ளது. கௌரி குண்டத்திலிருந்து 13 கிமீ தொலைவில் கேதார்நாத் கோயில் உள்ளது.

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Army restores road link to Gauri Kund". The Times of India. 29 June 2013 இம் மூலத்தில் இருந்து 29 அக்டோபர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131029210924/http://articles.timesofindia.indiatimes.com/2013-06-29/allahabad/40270767_1_army-camp-army-helicopter-army-medical-team. பார்த்த நாள்: 1 July 2013. 
  2. Page 224, Hill Resorts of U.P. Himalaya: A Geographical Study, By Nutan Tyagi, Published 1991 by Indus Publishing, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-85182-62-0
  3. R., Dr. Vijayalakshmy (2001). An introduction to religion and Philosophy - Tévarám and Tivviyappirapantam (1st ed.). Chennai: International Institute of Tamil Studies. pp. 110–11.


வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கௌரி_குண்டம்&oldid=3242504" இலிருந்து மீள்விக்கப்பட்டது