சங்கமகிராமம்

சங்கமகிராமம் (Sangamagrama), இந்தியாவின் கேரளா மாநிலத்தின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சிற்றூர் ஆகும். இதனருகே உள்ள மணவளச்சேரியில் கூடல்மாணிக்கம் கோயில் உள்ளது. இரிஞ்ஞாலகுடா நகராட்சிக்கு கிழக்கே 9.6 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்த சங்கமகிராமத்தில் முன்னர் அந்தணர்கள் அதிகம் வாழ்ந்தனர். அதில் சங்கமகிராம மாதவன் என்பவர் கணிதவியல் மற்றும் வானியலில் பிரபலமானவர் ஆவார். சங்கமகிராம மாதவன் கேரளாவில் வானவியல் மற்றும் கணிதவியல் பள்ளியை நிறுவியனார்.[1] சங்கமகிராமத்தில் வாழ்ந்த நாராயணன் மிஸ்ரா என்பவர் வதூல கிரகாய ஆகம விருத்தி ரகஸ்யம் எனும் நூலை இயற்றியுள்ளார்.[2]

சங்கமகிராமம்
கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்திருச்சூர்
மொழிகள்
 • அலுவல் மொழிகள்மலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
வாகனப் பதிவுKL-

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கமகிராமம்&oldid=3775303" இலிருந்து மீள்விக்கப்பட்டது