சடங்கு (ritual) என்பது, சமயம் அல்லது மரபு வழியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட குறிப்பிட்ட சில செயல்முறைகளின் தொகுப்பு ஆகும். பொதுவாகக் குறியீட்டுத் தன்மைகளைக் கொண்டதான இச் செயல்பாடுகள், மனிதரின் அல்லது சமூகத்தின் பயன் கருதிச் செய்யப்படுகின்றன.

இந்து கோவில் ஒன்றில் அனுசரிக்கப்படும் சடங்கு மாதிரி

சடங்குகள், ஒழுங்கான கால இடைவெளிகளிலோ, குறிப்பிட்ட சந்தர்ப்பங்களிலோ அல்லது அவரவர் விருப்பப்படியோ நடைபெறலாம். சடங்குகள் தனி மனிதர்களால், குழுக்களால் அல்லது முழுச் சமுதாயத்தாலுமே நிகழ்த்தப்படலாம். இதற்கெனக் குறித்து ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமன்றி எந்த இடத்திலும் நடத்தப்படக்கூடிய சடங்குகளும் உண்டு. சில சடங்குகள் பொதுவாக நடத்தப்படுகின்றன. வேறுசில தனிப்பட்ட சடங்குகளாகும். இன்னும் சில குறிப்பிட்ட ஒரு குழுவினர் மட்டும் பங்குபற்றும் சடங்குகளாக உள்ளன.

சடங்குகளில் நோக்கங்கள் பல்வேறுபட்டவையாக உள்ளன. சில சடங்குகள் சமயக் கடமைகளை நிறைவேற்றுவதற்காக நிகழ்த்தப்படுகின்றன. சில, சடங்கு செய்பவரின் ஆன்மீக மற்றும் உணர்வுபூர்வமான திருப்திக்காகச் செய்யப்படுவன. சமூகப் பிணைப்புக்களை வலுப்படுத்தல், மரியாதையை வெளிப்படுத்தல் அல்லது அடிபணிதல், பொதுவான அல்லது குறிப்பிட்ட நிகழ்வுகளுக்கான சமூக அங்கீகாரம் பெறுதல், அல்லது வெறுமனே சடங்குகள் செய்வதில் உள்ள இன்பத்துக்காகக் கூடச் சடங்குகள் இடம்பெறுவது உண்டு.


உலகின் பல்வேறு சமூகத்தவரிடையே பல்வேறு விதமான சடங்குகள் நடைபெற்று வருவதைக் காணலாம். சமயங்களினால் வழிபாட்டுத் தேவைகளுக்காக விதிக்கப்படுகின்ற சடங்குகள் ஒருபுறம் இருக்க ஏராளமான சமயம் சார்ந்தனவும் சாராதனவுமான சடங்குகள் உள்ளன. மனிதரின் வாழ்வோடு சம்பந்தமான பல சடங்குகள் உள்ளன. பிறப்பு, பெயர் சூட்டுதல், காது குத்துதல், பூப்படைதல், திருமணம், வளைகாப்பு, அறுபதாம் கல்யாணம், இறப்பு ஆகியவற்றோடு தொடர்புடைய சடங்குகள் தமிழ் மக்களுடைய வாழ்வியலோடு தொடர்புள்ளவை. இவற்றைவிட வீடு கட்டுதல், வண்டிகள் வாங்குதல், தொழில் தொடங்குதல் என்பவை தொடர்பிலும் பல சடங்குகள் நடை பெறுகின்றன.

மேற்காட்டிய பழைய மரபு சார்ந்த சடங்குகள் தவிரப் பல்வேறு தற்கால நடவடிக்கைகளோடு ஒட்டிய நிகழ்வுகளிலும் சடங்குத் தன்மை பொருந்திய அம்சங்கள் காணப்படுகின்றன. நாடாளுமன்றக் கூட்டங்கள், புதிய அரசுகள் பொறுப்பெடுத்தல், அறிவியல் மகாநாடுகள், நீதிமன்ற விசாரணைகள், குற்றவாளிகளைத் தூக்கில் இடுதல் என்பவற்றில் கூட இவ்வாறான சடங்குத் தன்மைகளைக் காணமுடியும். கைகுலுக்குதல், கண்டதும் வாழ்த்துக் கூறுதல் என்பனவும் சடங்குத் தன்மை கொண்டனவே.

இவ்வாறு சடங்குகள் மனிதரின் வாழ்வில் பலவாறாகப் பரந்து கிடப்பினும், இவை எல்லாவற்றுக்கும் பொதுவான ஒரு அம்சம் உண்டு. அதாவது, இச் சடங்குகளின் குறியீட்டுத் தன்மையானது அச் சடங்கை நிகழ்த்துபவரால் தன்னிச்சையாகத் தெரிந்தெடுக்கப்படுவது அல்ல. இது சமயம், அரசு, நிறுவனங்கள் போன்ற வெளிச் சக்திகளினால் விதிக்கப்படுகின்றன அல்லது மரபுவழியாகப் பெறப்படுகின்றன.

சடங்கு என்பது மக்களால் மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு வரன்முறை ஆகும். மனிதனும் மனித சமூகமும் வாழ்க்கையை நெறிப்படுத்த ஏற்படுத்திக் கொண்ட ஒழுக்கம் என்று கூட இதனைச் சொல்லலாம். ‘புனிதத் தன்மையின் பால் மக்கள் மேற்கொள்ளும் நடத்தைக் கோலங்களின் தொகுப்பே சடங்கு’ என்றும், ‘நம்பிக்கைகளின் அடிப்படையில் மக்களால் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும் புனிதச் செயல்களே சடங்குகள்' என்றும் சடங்கு குறித்துப் பல்வேறு விளக்கங்கள் முன்வைக்கப்படுகின்றன. மேற்கூறிய கருத்துகளின் அடிப்படையில் ‘சடங்கு என்பது புனிதத்துவம் கருதி ஒரு குறிப்பிட்ட ஒழுங்கு முறையுடன், குறியீட்டு நிலையில் மக்களால் மேற்கொள்ளப்படும் செயல்பாடு’ என்று விளங்கிக் கொள்ளலாம்.

சடங்கின் தோற்றம் தொகு

மனிதன் தோன்றிய அன்றே சடங்கும் தோற்றம் பெற்றுவிட்டது என்றுதான் கூற வேண்டும். ஏனெனில் சடங்கானது மனித மனத்தின் வெளிப்பாடாகும். தொடக்கக் கால இனக்குழுச் சமூகத்தில் (PRIMITIVE SOCIETY) சடங்குகளே வாழ்க்கையாகவும் வாழ்க்கையே சடங்குகளாகவும் இருந்தன. வேட்டைக்குச் செல்லும் முன் வேட்டைச் சடங்கு நிகழ்த்திச் சென்றதற்கான சான்றுகள் காணக் கிடைக்கின்றன. இத்தகைய சடங்குகளே இனக்குழுச் சமூகத்தை இயக்கின; இணைத்தன. இந்நிலை இன்றும் தொடர்ந்து வருவதை நீங்கள் அறியலாம். இயற்கை விளைவுகளால் நன்மை ஏற்படும் பொழுது மகிழ்ச்சியடைந்த மனிதன் அதற்கு நன்றி செலுத்தும் பொருட்டும், பாதிப்பு அடையும் போது இயற்கையைத் திருப்திப்படுத்தும் வகையிலும், நம்பிக்கையின் அடிப்படையில் சில சடங்குகளை மேற்கொண்டான். மனிதனால் குறியீட்டு நிலையில் நிகழ்த்தப்பட்ட இத்தகைய சடங்குகள் திரும்பத் திரும்ப மேற்கொள்ளப்பட்டு நிலைத்த வடிவம் பெற்றன. தொடர் செயல்பாட்டிற்கு உரிய ஒன்றாய் விளங்கின; விளங்கி வருகின்றன.

சடங்கின் நோக்கம் தொகு

சடங்கு பல்வேறு நோக்கங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குடும்பம் தழைக்க, நோயின்றி வாழ, பழி பாவங்களைப் போக்க, துன்ப துயரங்கள் விலக, உறவுகள் நீடிக்க, எதிரிகளைத் தண்டிக்க, இயற்கையை வசப்படுத்த, விஞ்சிய ஆற்றலைப் பெற என்றவாறு பல்வேறு வகை நோக்கங்கள் மற்றும் எதிர்பார்ப்புகளை முன்னிட்டுச் சடங்குகள் நிகழ்த்தப்படுகின்றன. இத்தகைய சடங்குகள் முழுக்க முழுக்க மக்களின் நம்பிக்கை சார்ந்தவை; கூட்டாக மேற்கொள்ளப்படுபவை.

சடங்கின் தன்மை தொகு

சடங்கின் தன்மை பன்முகம் கொண்டது. சடங்கின் சிறப்புக் கூறு அது செயல் வடிவம் கொண்டது என்பதுதான். சடங்கு நிகழ்த்தப் படுவதாகும். நம்பிக்கை மனிதரின் உணர்வு நிலையில் இருக்க, சடங்கு செயல் வடிவில் நிகழ்த்தப்படுவது. ஒன்றைச் செய்து மற்றொன்றைப் பெறுவது சடங்கின் நோக்கமாக இருப்பதால், நிகழ்த்துதல் என்பது இதன் அடிப்படைக் கூறாக அமைகிறது. பெரும்பாலான சடங்குகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் திரும்பத் திரும்ப நிகழ்த்தப் படுகின்றன. சடங்கின் மற்றொரு சிறப்புக் கூறு பலரின் கூட்டு முயற்சியால் அது நிகழ்த்தப் படுவதாகும். சில சூழல்களில் தனி மனிதரால் நிகழ்த்தப் பட்டாலும் பெரும்பாலும் கூட்டுத் தன்மை உடையவையாக, சமூகம் சார்ந்தவையாகவே நிகழ்த்தப் படுகின்றன. ஏனெனில், சடங்கு நிகழ்வு என்பது சடங்கு செய்வோர், சடங்கில் பங்கேற்போர், பார்வையாளர் ஆகியோருடைய நடத்தை முறைகளின் தொகுப்பாகும்.

சடங்குகள் - வகைப்பாடு தொகு

மனிதன் பிறந்தது முதல் இறப்பது வரை, ஏன்? இறந்த பின்பும் கூடப் பல்வேறு சடங்குகள் மேற்கொள்ளப்படுவதை நீங்கள் அறிவீர்கள். இவ்வாறு மக்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு சடங்கின் பின்னணியிலும் ஏதேனும் ஒரு காரணம் இருக்கத்தான் செய்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. சடங்குகளை வகைப்படுத்தி விளக்குவதன் வாயிலாக எந்தெந்தச் சடங்குகள் எம்மாதிரியான சூழல்களில் என்னென்ன காரணங்களுக்காக நிகழ்த்தப் படுகின்றன என்பதை உணர்ந்து கொள்ளலாம். நாட்டுப்புற மக்களின் வாழ்வில் இடம்பெறும் சடங்குகளைக் கீழே கண்டவாறு வகைப்படுத்தலாம்.

சடங்குகளின் வகைகள் தொகு

சடங்குகளை வாழ்க்கை வட்ட சடங்குகள், வளமைச் சடங்குகள், வழிபாட்டுச் சடங்குகள், மந்திரச் சடங்குகள் என நான்காகப் பிரிக்கின்றனர்.

சடங்குகள் பெயர்க்காரணம் தொகு

சடங்கு எனும் சொல் தொகு

சடங்கு என்ற சொல்லிற்குச் ‘சட்ட’ என்ற உரிச்சொல் வேர்ச் சொல் ஆகும்.

சட்ட + அம் + கு = சடங்கு

‘சட்ட’ என்ற சொல்லிற்கு செவ்விதான, ஒழுங்கு முறையான என்று பொருள்.

‘அம்’ என்ற சொல் அழகியது என்று பொருள் உடையது

‘கு’ என்பது தன்மையைக் குறித்ததோர் விகுதி.

பண்பு+அம்+கு = பாங்கு என்று ஆகியது போல சட்ட+அம்+கு = சடங்கு என்று ஆகியது.

“சட்ட நேர்ப்பட சழக்கனேன் உனைச் சார்ந்திலேன்”

ஓர் ஒழுங்கு முறைக்கும் உட்பட்டு வராத சழக்கன் நான். அதனால் பெருமானே! உன்னைச் சார்ந்து பயன்பெற வேண்டும்.என்று அறிவில்லாதவன் என ‘சட்ட’ என்ற இந்த வேர்ச்சொல்லை பழைய வழக்குச் சொல்லாக மணிவாசகர் திருவாசகத்தில் பயன்படுத்துகிறார். எனவே சடங்கு என்றால் வாழ்வின் முக்கியமான நிகழ்வுகளைச் செவ்விதமாக ஓர் ஒழுங்கு முறையாக அழகாகச் செய்விக்கும் தன்மை உடையது என்று பொருள் கொள்ளலாம்.

சடங்கிற்கு இன்னொரு பெயர் தொகு

சடங்குகள் வாழ்வு முறைதலுக்கு அரண் செய்வது; பாதுகாப்பு அளிப்பது. இதை அடிப்படையாகக் கொண்டு சடங்கிற்கு இன்னொரு பெயர் வந்தது. அது திரிந்து வந்த முறை வருமாறு:

அரண் – அரணம் – கரணம்

மொழி முதல் எழுத்தாக வரும் அகரம் வழக்கில் ககரமாகத் திரிவது உண்டு. அனல் கனலாகத் திரிந்தது இதற்கு உதாரணம். தொல்காப்பியத்தில் சடங்கு என்ற பொருளில் கரணம் என்பது பயன்படுத்தப்பட்டுள்ளது.

“பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்

ஐயர் யாத்தனர் கரணம் என்ப”

வாழ்வின் முக்கியமான நிகழ்வுகளைக் செவ்விதாக்கி ஓர் ஒழுங்கு முறைக்குள் கொண்டு வர கரணங்களை, அதாவது சடங்குகளை யாத்தோர் தமிழ்ச்சான்றோர். நமது இலக்கியங்களில் வரும் ஐயர், அந்தணர், வேதியர், மறையோர், பார்ப்பணர் போன்ற சொற்கள் குறிப்பிட்ட சாதியினரைக் குறிப்பிடவில்லை. சான்றோர்களைக் குறிப்பிட்டது இங்கே ஐயர் என்பது சான்றோர் எனப் பொருள்படும்.

சடங்குகளின் வகைகள் தொகு

சடங்குகளை வாழ்க்கை வட்ட சடங்குகள், வளமைச் சடங்குகள், வழிபாட்டுச் சடங்குகள், மந்திரச் சடங்குகள் என நான்காகப் பிரிக்கின்றனர். [1]

இருவகைச் சடங்குகள் தொகு

சடங்குகள் இருவகைப்படும். அவை மங்கலச் சடங்கு மற்றும் அமங்கலச் சடங்கு.

மங்கலச் சடங்குகள் தொகு

  1. சேணை தொட்டு வைத்தல்
  2. தொட்டிலிட்டு குழந்தைக்குப் பெயரிடல்
  3. மகவுக்கு உணவூட்டல்
  4. வாழ்நாள் வேள்வி
  5. காதணி விழா
  6. எழுத்தறிவித்தல்
  7. சிவதீக்கை
  8. உபநயனம்
  9. பூப்புனித நீராட்டு விழா
  10. திருமண உறுதி
  11. பொன்னுருக்கல்
  12. திருமுறைத் திருமணம்
  13. வளைகாப்பு
  14. புதுமனை புகுவிழா
  15. மணி விழா,
  16. பவள விழா
  17. முத்து விழா

அமங்கலச் சடங்குகள் தொகு

  1. உயிர் புறப்பாடு
  2. சடல நீராட்டு
  3. திருவடிப் பேறு (மோட்ச தீபம்)
  4. கல் நிறுவல்
  5. ஆண்டுத் திதி

பிராமண வழி சடங்குகள் தொகு

திருமணம் (விவாகம்) தொகு

தகுதிபெற்ற வயதினை உடைய ஓர் ஆண் ஒரு பெண்ணின் கரங்களைப் பற்றி அக்கினி சாட்சியாக ஏழு முறை அக்கினியைச் சுற்றி வருதல். இறைவன் ஜோதிவடிவானவர். எனவே அக்கினியான ஜோதியை சாட்சியாக கொண்டு திருமணம் நடக்கின்றது. தமிழர்களின் திருமணத்தின் போது மணமகன் மணமகள் கழுத்தில் தாலி அணிவிக்கிறான். இது மிகவும் முக்கிய சடங்கு ஆகும். பெரும்பாலான இந்துக்கள் வாழ்நாளில் இந்த சடங்கு மிக முக்கியமானதாக மேற்கொள்ளப்படுகின்றது.

முதல் இரவு (கர்பதானம்) தொகு

திருமணமான ஆணும் பெண்ணும் குழந்தை பாக்கியத்தைப் பெறுவதற்காக இறைவனை பிரார்த்தனை செய்துகொண்டு தாம்பத்திய பந்தத்தில் ஈடுபடுதல். தாயான பெண் ஓர் உயிர் தன் உடலில் தங்கி உடலாக உருவெடுப்பதற்கு தன் கருவறையைத் ‘தானமாக’ தருகிறாள். கணவனும் மனைவியும் விளக்கேற்றி இறைவனை மனதார வழிபட்டு வாழ்க்கையைத் துவங்குவதன் மூலம் இந்த சடங்கு மேற்கொள்ளப்படுகின்றது.

கருவுற்றல் (பும்சவனம்) தொகு

கருவுற்ற மனைவி தாய் ஸ்தானத்தை அடைகிறாள். எனவே கணவன் அவளை தாயைப் போல பராமரித்து பணிவிடை செய்யவேண்டும். அவள் மனம் நோகும்படி ஒரு வார்த்தை கூட பேசாமல் விரதம் மேற்கொள்ள வேண்டும். பிருகதாரண்யக உபநிடதம் (6.4), மனைவி கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் கணவன் அவளுக்கு ஆரோக்கியமான உணவைச் சமைத்துக் கொடுக்க வேண்டும் (அல்லது ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும்) என அறிவுரை செய்கின்றது. கணவன் மனைவிக்காக பிரார்த்தனை மேற்கொள்ள வேண்டும். தன் மனைவி குழந்தையை நலமாகப் பெற்றெடுக்கும் வரை இந்த சடங்கை கடைப்பிடிக்க வேண்டும்.

வளைக்காப்பு (சீமந்தம்) தொகு

கருவுற்ற பெண் எந்தவொரு சிரமமும் இல்லாமல் மனமகிழ்ச்சியுடன் குழந்தையைப் பெற்றெடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் முக்கிய சடங்காகும். பெரும்பாலும் 8-ஆவது அல்லது 9-ஆவது மாதத்தில் மேற்கொள்ளப்படுகின்றது. கர்ப்பமாக இருக்கும் பெண்மணிக்கு அவளின் உறவினர்களும் நண்பர்களும் பழங்களும் பலகாரங்களும் ஊட்டிவிட்டு மகிழ்ச்சிப் படுத்துவார்கள். மேலும் வளையல்களும் அணிவிப்பார்கள். கர்ப்பிணி பெண் ஆசைபடும் அனைத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும், அவளுக்கு வருத்தம் ஏற்படுத்தும் விஷயங்களைத் தவிர்த்துவிட வேண்டும் என யஜ்ஞவல்கய ஸ்மிரிதி (3:79) தெரிவிக்கின்றது. மேலும் பிரசவ காலம் நெருங்கும் போது அவளின் கணவன் (மற்றும் பெற்றோர்) எப்போதும் அவளின் அருகாமையில் இருக்கவேண்டும் என்றும் நீண்டதூரப் பயணத்தை தவிர்த்து விட வேண்டும் எனவும் அறிவுரைக்கப்படுகின்றது. இது மிக முக்கியமான சடங்கு.

குழந்தை பிறந்த சடங்கு (ஜாதகர்மன்) தொகு

குழந்தை பிறந்ததைக் கொண்டாடும் சடங்காகும். இந்துதர்மத்தைப் பொறுத்தவரை ஒருவன் இரண்டு முறை பிறக்கின்றான். தாயின் கருவறையில் தோன்றி பிறப்பது ஒருமுறை, கல்வியைத் தொடங்கும் போதும் இரண்டாவது முறை ஆகும். பிறந்த குழந்தையின் நாவில் தேன் அல்லது சீனிப்பாகு தடவி இச்சடங்கு மேற்கொள்ளப்படுகின்றது. இந்த சடங்கை வீட்டிலுள்ள பெரியவர்கள் அல்லது குழந்தையின் தாய்தந்தை மேற்கொள்வர். அதன்பிறகு அனைவரும் குழந்தையின் நீண்ட ஆயுள், நிறைவான அறிவு மற்றும் தாயின் நலம் ஆகியவற்றிற்காக பிரார்த்தனை மேற்கொள்வர்.

குழந்தைக்குப் பெயர்சூட்டுதல் (நாமகரணம்) தொகு

குழந்தை பிறந்த சில தினங்களில் குழந்தைக்குப் பெயர்சூட்டப்படுகின்றது. அர்த்தமுள்ள மற்றும் இனிமையான பெயரை தேர்ந்தெடுத்து குழந்தைக்குச் சூட்டுவர். குழந்தையை குளிப்பாட்டி, புத்தாடை அணிவித்து, வீட்டு பூஜை அறையில் குழந்தையின் பெற்றோர் அந்த குழந்தையை மடியில் அமர வைத்து அதன் காதில் தேர்ந்தெடுத்த பெயரை செப்புவார்கள்.

குழந்தையை முதன்முதலில் வெளியிடத்துக்கு அழைத்துச் செல்லுதல் (நிஷ்கிராமணம்) தொகு

குழந்தை பிறந்து ஒரு மாதம் நிறைவடைந்ததும் அந்தக் குழந்தையைக் கோவிலுக்கு அழைத்துச் செல்வார்கள். குழந்தையின் தாய், தந்தை, சகோதரர்கள், தாத்தா, பாட்டி ஆகியோரும் உடன் செல்வார்கள்.

குழந்தைக்கு முதல் சோறு ஊட்டுதல் (அன்னபிராஷனம்) தொகு

குழந்தை பிறந்து சில மாதங்களில், குழந்தைக்கு சில பற்கள் முளைக்க தொடங்கியவுடன் அதற்கு சோறு ஊட்டும் சடங்கு மேற்கொள்ளப்படுகின்றது. தேனுடன் அல்லது பாலுடன் கலந்த சோற்றை அன்னையும் தந்தையும், உற்றார் உறவினரும் குழந்தைக்கு ஊட்டுவார்கள். பிறகு நண்பர்களும் அண்டை அயலார்களும் வருகைபுரிந்து குழந்தையுடன் அன்பு பரிமாறிக் கொள்வார்கள். அனைவரும் குழந்தை நீண்ட ஆயுளும் நிறைவான அறிவையும் பெற பிரார்த்தணை செய்து கொள்வார்கள்.

குழந்தைக்கு தலைமுடி நீக்குதல் (சூடாகரணம்) தொகு

குழந்தை பிறந்த சில மாதங்களில், குழந்தையின் தலைமுடி முதன்முதலில் நீக்கப்படுகின்றது. தாய் தந்தையர் பாரம்பரிய உடைகளை அணிந்து கொண்டு குழந்தையை கோவிலுக்கு அழைத்துச் சென்று மடியில் அமர்த்திக் கொண்டு குழந்தையின் தலைமுடியை நீக்குவர். தூய்மையான வாழ்க்கையின் மகத்துவத்தை உணர்த்துவதற்காக இந்த சடங்கு மேற்கொள்ளப்படுகின்றது.

குழந்தைக்குக் காது குத்துதல் (கர்ணவேதம்) தொகு

குழந்தை பிறந்த ஓராண்டில், குழந்தையின் இரண்டு காதுகளிலும் தோடு குத்தப்படும். ‘செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்’ எனும் குறளைப் போல ஒரு மனிதனிடம் இருக்கும் செல்வங்களில் மிகவும் போற்றத்தக்கது அவனின் கேட்டல் திறன் தான். ஒருவன் தன் வாழ்நாளில் ஞானிகளின் வாய்ச்சொல்லைக் கேட்டு நடந்தால் அவனின் வாழ்க்கை பொன்போல மின்னும் என்பதை உணர்த்துவதற்காக இந்த சடங்கு மேற்கொள்ளப்படுகின்றது.

கல்வி ஆரம்பம் (வித்யாரம்பம்) தொகு

குழந்தை மழலைமொழி பேசத் தொடங்கியவுடன் இந்த சடங்கு மேற்கொள்ளப்படுகின்றது. குழந்தையின் பெற்றோர் அல்லது மற்ற குடும்ப உறுப்பினர் குழந்தையின் கையைப் பிடித்து ‘அ’ எனும் முதல் எழுத்தை எழுதி பயில்விப்பார்கள். பிறகு அடிப்படையான எழுத்துகளையும் எண்களையும் கற்றுத் தருவார்கள். குழந்தை பாடசாலையில் சேர்ந்து முறையான கல்வியைக் கற்க துவங்குவதற்கு முன்னர் அதற்கு அடிப்படையான கல்வியை வீட்டிலே கற்றுத் தர வேண்டும் என்பதை இச்சடங்கு உணர்த்துகின்றது.

பாடசாலையில் சேர்த்தல் (உபநயனம்) தொகு

குழந்தை வளர்ந்து பாலகப் பருவம் எய்தியவுடன், அவனை/அவளை பாடசாலையில் சேர்க்க வேண்டும். இங்கு அந்த குழந்தை முறையான கல்வியைக் கற்க தொடங்கும். முறையான கல்வியை துவங்கும் போது ஒரு மனிதன் இரண்டாவது முறையாகப் பிறக்கின்றான் என சொல்லப்படுகின்றது. கல்வி கற்றுத்தரும் ஆசான் அவனுக்கு தாய்தந்தை ஆகின்றார். ஆரம்பகாலங்களில் உபநயனம் என்பது ஒருவன் யஜ்ஞோபவிதம் (பூணூல்) அணிந்து முறையான குருகுல கல்வியில் ஈடுபடுதல் ஆகும். இந்த சடங்கின் மூலம் அந்த குழந்தைக்கு கல்வியின் முக்கியத்துவமும் அவசியமும் உணர்த்தப்படுகின்றது. கல்வி தான் ஒருவனை பண்டிதனாக்குகின்றது. எனவே கல்வியில் தேர்ச்சிப் பெறும்வரை அவனுடைய எண்ணம் வெண்மையாக (தூய்மையாக) இருக்கவேண்டும்; தீமையானவற்றில் எண்ணம் சிதறி மாசுபடக் கூடாது எனவும் உணர்த்தப்படுகின்றது.

வேதங்களைக் கற்க தொடங்குதல் (வேதாரம்பம்) தொகு

வேதங்கள் என்பது ரிக், சாம, யஜுர், அதர்வண ஆகியவை ஆகும். வேதம் என்றால் ஞானம் எனப் பொருள்படும். வேதங்களின் சாரமாக உபநிடதங்களும், உபநிடதங்களின் சாரமாக பகவத் கீதையும் விளங்குகின்றன. ஒருவன் தன் வாழ்க்கைக்குத் தேவையான வித்தைகளை (தொழில்திறன்களை) கற்றதோடு விட்டுவிடாமல், அவன் வேதங்களையும் அவசியம் கற்க வேண்டும். மேலும் திருக்குறள், திருமுறை, பிரபந்தம் போன்ற நூல்களும் நல்லறிவை தரும் நூல்களாகும். ஒருவன் வாழ்க்கையில் பணம் ஈட்டுவதற்கு தேவையான வித்தைகளை மட்டும் கற்பதோடு நிறுத்திவிடாமல் நல்லொழுக்கத்தையும் நல்லறிவையும் தரும் நல்லநூல்களையும் கற்கவேண்டும்.

பருவமடைந்த சடங்கு (கேஷாந்தம்) தொகு

ஆரம்பகாலங்களில் ஆண்களும் பெண்களும் பருவமடைந்தவுடன் ‘கேஷாந்தம்’ அல்லது ’ரிதுசுத்தி’ எனப்படும் சடங்கு மேற்கொள்ளப்பட்டன. பருவ வயதை (பெரும்பாலும் 16 வயதை) அடைந்த ஆணின் சிகையும் முகத்திலுள்ள முடிகளும் மழிக்கப்படும். பிறகு நீராடி விட்டு, பாரம்பரிய உடை அணிந்துகொண்டு, இனி அவனுக்கு உண்டாகும் பாலுணர்வு ஆசைகளை எப்போதும் கட்டுப்பாட்டுடன் வைத்திருக்க விரதம் மேற்கொள்கிறான். அதேபோல் பருவமடைந்த பெண்களும் நீராடிவிட்டு பாரம்பரிய உடை அணிந்து விரதம் மேற்கொள்கின்றனர். பண்டைய காலத்தில் இது எளிமையான ஒரு சடங்கு ஆகும். ஆனால் தற்போது இந்த சடங்கு ஆண்களுக்காக மேற்கொள்ளப்படுவது மிக அரிதாகும். ஆயினும் பெண்களுக்கு மிகவும் பெரிதாகவும் ஆடம்பரமாகவும் மேற்கொள்ளப்படுகின்றது. காலப்போக்கில் இந்த சடங்கில் சாஸ்திரங்களில் பரிந்துரைக்கப்படாத நிறைய விஷயங்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன.

பட்டம் பெறுதல் (சமாவர்தனம்) தொகு

உயர்நிலைக் கல்வியில் தேர்ச்சி அடைந்து பட்டம் பெறும் சடங்காகும். இது பெரும்பாலும் ஒருவன் உயர்கல்வியை முடித்துவிட்டப் பின்னர் மேற்கொள்ளப்படுகின்றது. பட்டம் பெற்றவிட்ட அவன் எப்போதும் சத்தியத்தையும் தர்மத்தையும் போற்ற வேண்டும், நேர்மையையும் கடமையையும் கடைப்பிடிக்க வேண்டும், முக்கியமான ஒன்று என்னவென்றால் அவன் எப்போதும் கற்பதை நிறுத்தக் கூடாது என தைத்திரிய உபநிடதம் (1.11.1) குறிப்பிடுகின்றது. “கற்றது கைம்மண் அளவு, கலலாதது உலக அளவு” அல்லவா? பட்டம் பெற்றவுடன் பெற்றோர் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுவிட்டு, ஆசானுக்கு நன்றி கூறிவிட்டு, கோவிலுக்கு சென்று வழிபாட்டில் ஈடுபடுவதே இந்த சடங்குமுறை ஆகும். ஆரம்பகாலத்தில் இந்த சடங்கு குருகுலக் கல்வியை முடித்துவிட்டு திரும்பும் போது மேற்கொள்ளப்பட்டது.

(இதன்பிறகு ஒருவன் திருமண வாழ்க்கையில் ஈடுபட எண்ணங்கொண்டால், அவன் திருமண சடங்கை மேற்கொள்வான். குழந்தை பெற்றவுடன் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மற்றமற்ற சடங்குகளையும் தன் குழந்தை(களு)க்கு மேற்கொள்வான்.)

இறுதிசடங்கு (அந்தயெஷ்டி) தொகு

ஒருவன் வாழ்க்கையின் இறுதிச் சடங்கு என்பது அவன் இறந்துபோனவுடன் அவனின் உடலுக்கு அவனின் சொந்தபந்தங்களும் நண்பர்களும் மேற்கொள்ளும் முக்கிய சடங்காகும். இது அவனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மேற்கொள்ளப்படுகின்றது. குழந்தைகளின் உடல் புதைக்கப்பட வேண்டும் எனவும் வாலிப வயதை தாண்டிய பெரியவர்களின் உடல் தகனம் செய்யப்பட வேண்டும் எனவும் ரிக்வேதம் (10:16) அறிவுரைக்கின்றது. இந்த சடங்கு ஓரிரண்டு நாட்கள் முதல் பதினாறு நாட்களுக்கு நீடிக்கின்றது. இறந்தவரின் உடல் நீராடப்பட்டு, புத்தாடைகள் அணிவிக்கப்பட்டு, கால் கட்டைவிரல்கள் ஒன்றாக கட்டப்பட்டு, நெற்றியில் திலகம் இடப்படுகின்றது. பின்னர் அவரின் உடல் முறையான ஓர் இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்படுகின்றது. பதினாறு நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்பட்டு பின்னர் பதினாறாம் நாள் ஏழை எளியவர்களை வீட்டிற்கு அழைத்து அவர்களுக்கு உணவு தானம் வழங்கபடுகின்றது. இறந்தவரின் சார்பாக ஏழை எளியவர்களுக்குத் அன்ன தானம் வழங்குவதால், அவரின் ஆன்மா இனிவரும் பிறவிகளில் நற்கதி அடையும்.

இந்த பதினாறு சடங்குகளையும் இந்துக்கள் கட்டாயமாக மேற்கொள்ளவேண்டும் என எந்த சாஸ்திரநூலும் தெரிவிக்கவில்லை. மாறாக அக சடங்குகள் என்று சொல்லப்படும் மேற்கூறிய எட்டு நற்பண்புகள் தான் கட்டாயமானவை. புற சடங்குகளின் உண்மையான அர்த்தங்களை உணர்ந்து, அகசடங்குகளைக் கடைப்பிடித்து, எளிமையான முறையில், தானம் மற்றும் தர்மத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து மேற்கொள்ளப்படும் சடங்கு தான் சாலச்சிறப்புடையதாகும். திருமணம், குழந்தைக்குப் பெயர்சூட்டுதல், தலைமுடி நீக்குதல், காது குத்துதல் மற்றும் இறுதிச்சடங்கு போன்ற ஐந்து சடங்குகளை தற்போது பெரும்பாலான இந்துக்கள் மேற்கொள்கின்றனர். காலச்சுழற்சியில் மற்ற சில சடங்குகள் அரிதாகி விட்டன.

மக்கள் வாழ்வில் சாங்கியம் சடங்குகள் தொகு

நலம் குலைந்தார் வாழ்வில் நலமே விளைய வேண்டி மேற் கொள்ளப்படும் சடங்குகளும், சடங்கியல் சார் நம்பிக்கைகளும் எளிய மக்கள் வாழ்வில் காணப்படுகின்றன. இயற்கையுடன் உறவாடி இயற்கை நிகழ்வுகளைக் கண்டு தமக்கான வளம் இயற்கையைப் போல நடந்து கொள்வதன் மூலமே கிடைக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுவனவாக அவை அமைந்துள்ளன. இவற்றை வளமைச் சடங்குகள் (FERTILITY RITUALS) என அழைக்கலாம். தொடக்க காலத்திலிருந்தே கடைபிடிக்கப்பட்டு வரும் இச்சடங்குகளை இன்றும் வேளாண்குடிகளாக விளங்கும் மக்கள் பின்பற்றுகின்றனர். மேற்கு தமிழகத்தின் கிருஷ்ணகிரி- தருமபுரி மாவட்டத்தில் பரவலாக பின்பற்றப்படும் சடங்குகள் இங்கு ஆராயப்படுகின்றது. அம்மக்களின் பிறப்பு, இறப்பு, திருமணம் ஆகிய நிகழ்வுகளில் மேற்கொள்ளப்படும் இச் சடங்குகள் அவர்களது நடைமுறை வாழ்வின் கண்ணோட்டங்களிலிருந்தே தோன்றியவை ஆகும்.

பூச்செடியில் வைத்தல் தொகு

மழலை முதல் சிறு வயது குழந்தைகள் வரை இறந்தால் மேற் கொள்ளப்படும் சடங்கு இது. அக் குழந்தைகளைப் புதைக்கும் போது மஞ்சள் சாந்தில் நனைக்கப்பட்ட வேட்டியில் சுற்றிக் கட்டியே புதைக்கின்றனர். மஞ்சள் பூசிய துணியில் சுற்றிக் கட்டுதல் என்பது மீண்டும் கருவறைக்குச் செல்வதற்கான சடங்காகும். கைக்குழந்தையாயிருப்பின் அக்குழந்தையின் தாயாரிடம் இருந்து பால் பெறப்பட்டு அதனை இறந்த குழந்தைக்கு திலகமாய்

இட்டு வாயிலும் ஊற்றி மஞ்சள் துணியில் சுற்றி கட்டி புதைப்பர். பதினோறாம் நாள் அக்குழந்தையின் வயதுக்கேற்ற ஆடைகளும், கருகமணி வளையல், பூ, தின் பண்டங்கள், பொறிகடலை ஆகியவற்றை நீர் நிறைந்த கிணற்று மேட்டில் உள்ள செவ்வரளி போன்ற பூஞ்செடியின் வேரில் வைத்து சடங்கு மேற்கொள்கின்றனர். இது மீண்டும் அக்குழந்தை தாயின் வயிற்றில் வந்து பிறக்க வேண்டும் என்ற அடிப்படையில் நிகழ்வதாகும். அம்மை, காலரா முதலான நோய்களால் இறந்திருந்தாலும் மாரி யம்மனால் அழைத்துக் கொள்ளப்பட்ட அக்குழந் தைகள் மீண்டும் வந்து பிறப்பர் என்று நம்புகின்றனர். மீண்டும் பூவாய் மலரும் என்ற நம்பிக் கையே “பூச்செடியில் வைத்தல்” சடங்காகும்.

எருவின் மீது மறுமணம் செய்வித்தல் தொகு

இது இளம் விதவை திருமணத்தில் மேற் கொள்ளப்படும் சடங்காகும். திருமணம் ஆன சிறிது காலத்தில் கணவனை இழந்த பெண்ணை மணக்க வேறு ஆண் முன் வரும் போது உற்றார் மறுமணம் செய்விக்க முயலும் போது மேற்கொள்ளப்படும் சடங்காகும். முதல் கணவன் விபத்தினால், கொள்ளை நோயினால், எதிர்பாராத நிகழ்வுகளால் மரண முற்று விதவையாகியிருப்பர். அவர்களுக்கான திருமணம் ‘இரவில்’ நடைபெறும். தரையில் தொழுஉரமான ‘எரு’வினைக் கொட்டி நிரவி அதன் மீது வெள்ளை வேட்டி போர்த்தி அதன் மீது மணமக்களை அமரச் செய்து திருமணம் நிகழ்த்தப்படுகின்றது.

மணமகளின் கையில் ‘நல்ல விளக்கு’ ஏற்றித் தரப்படுகின்றது. மண நிகழ்வின் போது மணமகளின் கையில் ஏற்றப்படும் ‘நல் விளக்கு’ தீபமானது, அவளது இருண்ட வாழ்வில் மீண்டும் ஏற்றப்பட்ட ஒளிவிளக்காகும். அதன் பிறகு தாலிகட்டுதல் நடைபெறும். இத்திருமணத்தைப் பொறுத்தவரை, அவளின் தாய்வீட்டிலேயே நிகழ்த்தப்படுகின்றது. கோயில், மண்டபம், மண மகன் இல்லம் முதலிய இடங்களில் நடத்து வதில்லை.

இது மிகுந்த கவனத்துடன் எதிர்பார்ப் புடனும், நம்பிக்கையுடனும் மேற்கொள்ளப்படு கின்றதையே உணர்த்துகின்றது. மேலும் நாற்று விடும் போது, முளைவிடும் நாற்று பழுதானால், வளர்ந்து பயிராகாமல், நோயினால் தாக்குண்டு அழிந்து போனால், மீண்டும் நன்றாக எருவிட்டு, பழுது நீக்கி நாற்று விட்டு விவசாயம் மேற் கொள்ளுவதை ஒத்ததாகவே இந்த மறுமணச் சடங்கு நிகழ்வுகள் அமைந்துள்ளன. இங்கு திருமணம் என்பது வேளாண்மைச் செயலாகவே கருதப்படுகின்றது. வேளாண்மை செழிக்க எரு விட்டு நீர் பாய்ச்ச வேண்டும் என்று வள்ளுவர் கூறுவதை எண்ணிப் பார்த்தல் வேண்டும். பட்டுப் போன மணமகளின் வாழ்வு செழிக்க எருவிட்டு நீர்பாய்ச்சத் தகுந்த ஆடவனை கரம் பிடிக்கும் திருமணம் இவ்வகையில் நடைபெறுகின்றது.

நாக்கு சுட்டு சேர்த்துக் கொள்ளுதல் தொகு

தம் குடிவிட்டு, ஊர் விட்டு வேற்றுப் புலங் களுக்குச் சென்று வாழ நேரிடும் போது, தொழில் புரியும் நிலையில் வேற்று சாதியாருடன் பழகி கலந்துறவாடும்போது காதல் தோன்றுவதும், மணம்புரியும் நிலைக்கு உறவு வலுப்படுவதும் நிகழ்வதுண்டு. இந்நிலையில் வேற்றுப்புலத்தில் மணம் புரிந்தோ, மணம் புரிந்துகொள்ள தமது சுற்றத்தார், ஊராரிடம் தமது இணையுடன் வரும் போதோ அவர்களை சாதி கெட்டவர்களாகக் கருதி ஒதுக்கிவைப்பது பொதுவான வழக்கம். ஆனால் அவ்வாறு சாதி கெட்டவர்களாகக் கருதி ஒதுக்கி வைக்காமல் மீண்டும் தம்மவராகவே சேர்த்துக் கொள்வதற்கான ஒரு சடங்காகவே ‘நாக்கு சுட்டு சேர்த்துக் கொள்ளுதல்’ சடங்கு அமைந்துள்ளது.

வேற்றுப் புலத்திலிருந்து தமது சாதியைச் சார்ந்த ஆடவனால் அழைத்து வரப்படும் பெண்ணையும் தமது சாதிக்குள் இணைத்துக் கொள்ளும் சடங்காகவும் அமைந்துள்ளது. குல தெய்வத்தின் முன்பாக பாதம் மறையும் அளவு குழி வெட்டி அக்குழியினுள் பசுவினுடைய சாணத்தைக் கரைத்து ஊற்றி, அதனுள் மணத்தம்பதியரை நிறுத்தி வைத்து, குல தெய்வத்தை வணங்கிய பிறகு, அத்தெய்வத்திற்கு ஏற்றப்பட்ட தீபத்தின் திரியைக் கொண்டு வந்து இருவரின் நாக்கையும் நீட்டச் செய்து நுனியைச் சுடுவதன் மூலமாக சாதி தீட்டு கழிந்ததாகக் கருதுகின்றனர். அதன் பிறகு எவ்விதத் தடையுமின்றி தம்மவராக ஏற்றுக் கொள்கின்றனர். வேற்றுமை பாராட்டுவதில்லை.

முறைப்பாடு தீர்த்தல் தொகு

ஒரு குடியைச் சார்ந்தவர்களுக்குள் ஏற்படும் முறைப்பாடு (அ) கோரிக்கைக்காக பிணக்குகள் ஏற்பட்டு பேச்சுவார்த்தை அற்றுப் பல காலம் இது நீடித்து வரும் நிலையில் அக்குடியினுள்ளே நிகழும் இறப்பு, திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு மீண்டும் பிரிந்துள்ளவர்கள் ஒன்று சேர்ந்து செயலாற்ற வேண்டிய நிலையில் அல்லது இறந்து போனவரின் இடத்திலிருந்து செயலாற்ற பேசா திருப்பவரே பொறுப்பேற்க வேண்டிய உறவுடைய வராய் இருக்கும்போது, இரத்த உறவுள்ள குடி களுக்குள்ளே இச்சடங்கு மேற்கொள்ளப்படு கின்றது. இறப்பு, திருமணம் போன்ற நிகழ்வில், இரு தரப்பினரும் ஒன்று கலந்து சடங்கு மேற் கொள்ளும் முன்பு ‘முறைப்பாடு தீர்த்துக் கொண்ட’ பிறகு சடங்கினைத் தொடங்குகின்றனர்.

அவ்வாறு தீர்த்துக் கொள்ளாமல் நேரடியாக ஒன்று கலந்து செயலாற்றும்போது முறைப்பாடு தாக்கும் என்றும், இதனால் மேலும் தீங்கும், உயிர் சேதம் போன்ற விளைவுகளும் நேரலாம் என்றும் கருதுகின்றனர். சில வேளைகளில் இறப்பு நேர்ந்துள்ள குடிகளில் அடுத்தடுத்து மரணங்கள் நேர்ந்து விடலாம். அம் மரணங்கள் நோய், விபத்து முதலான காரணங் களால் ஏற்பட்டிருக்கலாம்.

ஆனால் தொடக்கத்தில் நிகழ்ந்த இறப்பில் பிணக்குற்று பேசாதிருந்தவர்கள், பிரிந்திருந்தவர்கள் இறப்பில் அதனை மறந்து ஒன்று சேர்ந்ததால் தான் “முறைப்பாட்டின் தாக்கத்தால்” தொடர்ந்து உயிர் சேதங்கள் ஏற்படு கின்றது என்று காரணம் கற்பித்து இக்குறை பாட்டை நிவர்த்தி செய்திட பெருமளவில் ஆடு, மாடு, அசையும், அசையா சொத்துக்களை பறித்துக் கொள்ள புரோகிதக் கூட்டங்கள் முயன்ற போது, அதற்கு மாற்றாக சில சடங்குகள் நிகழ்த்தி சரிப்படுத்திக் கொண்டு ஒரு வாயிலில் நுழைந்து ஒரு இல்லிடத்தில் புழங்குபவர்களாக மீண்டும் மாற்றமடைகின்றனர். இது முறைப்பாடு கழித்தல் ஆகும்.

துக்க வீட்டிற்கு துக்கம் கேட்க புகும் முன்பு இடைவழியிலேயே பிரிந்திருப்பவர்களை தனித் தனியே நிறுத்தி இருதரப்பாருக்கும் இடையில் திரையிடப்படுகின்றது. கிழக்கு மேற்காக நிறுத்தப்பட்டுள்ள அவர்களின் இரண்டு தரப்பிலும் தலைமையானவர்கள் எதிரே இருப்பவருடன் இனி எப் போதும் ஒன்றாகவே இருப்போம் என்று ஒரு மனதுடன் கூறி எதிரே இருப்பவர்களுக்கு நெற்றியில் திலகமிடுகின்றனர். அவ்வாறே எதிர்தரப்பும் இவர்களுக்கு கூறுவதுடன் திலகமிடுகின்றனர். இவ்வாறு இரண்டு தரப்பிலும் அனைவருக்கும் இடப்பட்டவுடன் ஒன்றாக செயல்படுகின்றனர்.

முளைப் பண்டம் கட்டுதல் தொகு

அரசாணி கொம்பு நட்டு பந்தக்கால் நாட்டிய பிறகு பச்சைப் பந்தலின் நடுவில் மரக்குந்தாணியைக் கவிழ்த்து அதன் மீது நவதானியங்களை ஊற வைத்து முளைப்பண்டம் கட்டிவைப்பர். மறுநாள் திருமணச்சடங்கு நிறைவடைந்தபிறகு மணமக்கள் இருவரும் சேர்ந்தே முளைப்பண்டத்தையும் களைக் கொட்டு, குடம் ஆகியவற்றுடன் கிணற்று மேட்டிற்கு செல்கின்றனர். ஒரே களைக்கொட்டை இருவரும் தத்தமது வலதுகையால் சேர்த்துப் பற்றி கிணற்று மேட்டில் கொத்தி முளை வந்துள்ள பண்டங்களை அவ்விடத்தில் தூவுகின்றனர். பிறகு கிணற்றி லிருந்து நீரெடுத்து தெளிக்கின்றனர். பிறகு திரும்பி வரும்போது புற்றிலிருந்து சிறிது மண்ணெடுத்து வந்து குழைத்து வீட்டின் அடுப்பை மணமகள் செப்பனிடும் சடங்கும் நடைபெறுகின்றது.

இல்வாழ்வில் புதிதாக அடியெடுத்து வைக்கும் மணமக்களுக்கு அவர்களின் நடைமுறை வாழ்க்கை யையும், பொறுப்புக்களையும் அறிமுகப்படுத்தும் சடங்குகளாக இவை அமைந்துள்ளன. இச்சடங்கு களை மணமக்கள் உரிய கரிசனத்துடன் மேற் கொள்வதைக் கணக்கில் கொண்டே அவர்களது வருங்காலத்தில் இல்லறவாழ்வில் பொறுப்பும், பற்றுறுதியுடனும் நடந்து கொள்வார்கள் என் பதை கணிக்கின்றனர். அவர்கள் வாழ்க்கை எத்தனை சிறப்பானதாக இருக்கும் என்று அதனடிப் படையில் நம்புகின்றனர். மேலும் கிணற்று மேட்டில் இடப்பட்ட நவதானியங்கள் முளைத்து செழித்து வளர்வதைப் போன்று அவர்களது வாழ்வும் செழிக்கும் என்பது நம்பிக்கையாகும்.

நலுங்கு வைத்தல் தொகு

திருமணத்திற்கு ஒரு வார காலம் இருக்கும் போதே மணமக்களுக்கு நலுங்கு வைத்தல் சடங்கு தொடங்குகிறது. இச்சடங்கினை மேற்கொள் பவர்கள் மணமக்களுக்கு முறையானவர்களாக இருப்பர். முதலில் எண்ணெய் தேய்த்தும், பிறகு மஞ்சள் சாந்தினை முகம் தோள், மார்பு, உடம் பெங்கும் தடவியும் நலுங்கு வைக்கப்படுகின்றது. நலுங்கு வைக்கும்போது காதுமடல், தோள், மார்பு பகுதிகளில் தடவி விடுவதன் மூலம் புதிய வாழ்க்கை முறை, புதிய சூழலை எதிர்கொள்வதற்கான தகுதியை இச்சடங்கு வழங்குகின்றது.

அதன் பிறகு சிறப்பாக குளிப்பாட்டி புத்தாடை வழங்கி, உளுந்தால் செய்யப்பட்ட இனிப்பு, காரம் முதலியவை பரிமாறப்படுகின்றன. இச்சடங்கின் மூலம் மணமக்களின் உடல்நலம் மேலும் கூட்டப் படுகின்றது. இல்வாழ்வில் அடியெடுத்து வைக்கும் மணமக்களுக்கு பாலுறவு பற்றிய கூச்சம், அச் சங்களைப் போக்கும் நடைமுறைகளாகவும் இச் சடங்கு அமைந்துள்ளது. ஒரு சில பழங்குடி களிடம் திருமணத்திற்கு முன்பு மணமக்களுக்கு பாலுறவு முறையினை அக்குடியில் வயதில் முதிர்ந்த வர்கள் கற்றுத் தருவதாக அறியப்படுகின்றது. நாகரிக சமூகத்தில் நலுங்கு வைத்தல் சடங்கு அதன் எச்சமாக அமைந்ததே ஆகும்.

தொப்புள் கொடி தொகு

திருமணம் ஆகி நீண்ட காலத்திற்குப் பிறகும் குழந்தைப் பேறு வாய்க்காதவர்கள் உள்ளத்தாலும், உடலாலும் சோர்வடைந்து பெரும் மனச்சுமைக்கு ஆளாகிவிடுவர். அந்நிலையில் கர்ப்பிணிப் பெண் களுக்கு பிள்ளைப் பேறு நிகழ்ந்தவுடன் குழந்தையி லிருந்து நீக்கப்படும் நஞ்சுக்கொடி அல்லது தொப்புள் கொடியின் சிறு பகுதியை பெற்று கருத்தரிக்காதவர்கள் வாழைப்பழத்தில் வைத்து விழுங்கிவிட்டால் அதன் பிறகு அவர்கள் கருவுற்று மகப்பேறு அடைவர் என்பதும் ஒரு நம்பிக்கையாக உள்ளது. நவீன சமூகத்தில் அறிவியல் வளர்ந்துள்ள நிலையில் தொப்புள் கொடியில் ஸ்டெம் செல் ஆய்வினை மேற்கொண்டு உயிரணுக்களை உருவாக்க முடியும் என்று கண்டறிந்துள்ளனர்.

பழங்குடிச் சமூகங்களில் தொப்புள் அடையாளம் பிறர் கண்படுதலில் இருந்து காக்கப்படுவது பற்றிய நம்பிக்கைகளை சி. மகேசுவரன் தமது ஆய்வில் குறிப்பிட்டுள்ளார். காரிய சாத்தியமானதாகவே இந்த நம்பிக்கைகள் அமைந்திருக்கின்றன என் பதற்கு மேலும் ஓர் எடுத்துக்காட்டாக தொப்புள் கொடி சார்ந்த செயல்பாடுகள் அமைந்திருக்கக் காண்கிறோம். இவ்விதமான நம்பிக்கைகள் அனைத்தும் தொல் பழங்காலம் முதலே இருந்து வருகின்ற நம்பிக்கைகளின் தொடர்ச்சியே ஆகும். தாந்திரிகம், சாங்கியம் மற்றும் உலகாயதம் போன்ற பொருள்முதல்வாத கொள்கையினரும் கூட இவ்வாறான சடங்குகளைப் பின்பற்றியுள்ளனர். அவை வைதீக சமயத்தாரின் சுயநலமிக்க, மக்களின் உபரி உற்பத்தியைப் பறிக்கும் நோக்கிலான முயற்சி களை முறியடிக்கும் வகையில் “முள்ளை முள்ளால் எடுத்தல்” எனும்படி அமைந்தவையாகும்.

கோயில் - கருவறை - சிலை தொகு

தாந்திரீகர்கள் பெண்ணின் பிறப்புறுப்பைப் போற்றி வழிபடுவார்கள். இவ்வுலகினை, நதி யினை எல்லாம் பெண்ணாகவே பாவிப்பதும் நிலமும் பெண்ணாகவே வணங்கப்படுவதும் உயிர் களின் தோற்றத்திற்கு தாய்மைப் பேறுதான் அடிப் படை என்பதாலேயே ஆகும். இன்றும் இத்தகைய வழிபாட்டு கோயில்கள் இருப்பது தெரியவரு கின்றது. ‘அல்குல்’ என்ற நூலில் பெண்ணின் பிறப்புறுப்பு பற்றி பல பத்து சொற்களை தமிழ் நாடனும், கி. ராஜநாராயணனும் பட்டியலிடு கின்றனர். அவை அனைத்துமே பெண்ணை பகடி செய்தும் ஏளனமாக, எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில், சினம் கொண்டு புத்தி பேதலித்த நிலையில் பேசக்கூடிய சொற்களாகவே இருக்கின்றன.

ஆனால் மேற்கு மாவட்டங்களில் பெண் களே தமக்குள் உரையாடும்போது பயன்படுத்தும் சொற்களாக கோயில், கருவறை, சிலை ஆகிய சொற்கள் அமைந்துள்ளன. பெண்ணின் பிறப் புறுப்பினை கோயில் என்றும், ஆணின் பிறப் புறுப்பு சிலை என்றும் அவை இணைந்து கரு உருவாகும் இடம். ‘கருவறை’ என்றும் பொருள்பட உரைக்கின்றனர். இச்சொற்களை ‘அல்குல்’ நூலில் காணமுடியவில்லை. இது தாந்திரிக வழிபாட்டின் எச்சமாக நீடித்திருக்கும் சொற்களாகும்.

அவ்வாறே தமிழகத்தின் மேற்கு மாவட்டங் களான கிருஷ்ணகிரி- தருமபுரி மாவட்டங்களில் இந்த நம்பிக்கை சடங்குகளை ‘சாங்கியம்’ என் கின்றனர். இந்த சாங்கிய விதிகளை அறிந்த முதிய வர்கள் வாழ்வின் பல நெருக்கடிகளை இந்த சாங்கியங்களை மேற்கொண்டு தீர்த்து வைத்து விடுவர். இதில் படைப்பு கடவுள், வழிபாடு ஆகிய வற்றிற்கு இடமில்லை. உலகாயதர்களும் வைதீக மரபிற்கு எதிராக இவ்வாறான சடங்குகளை நிகழ்த்தியுள்ளனர்.

பிறப்புச் சடங்குகள் தொகு

பிறப்புச் சடங்கில் பிறந்த குழந்தை ஆரோக்கியமாக வளரவேண்டும் என்கிற காரணத்தினால் பல்வேறு சடங்குகள் செய்யப்படுகின்றன. அதில் முக்கியமானவை சேனை தொடுதல், தொட்டில் கட்டுதல், காது குத்துதல் மற்றும் மொட்டை அடிப்பது போன்ற சடங்குகள் ஆகும்.

சேனை தொடுதல் தொகு

இந்த சடங்கின் அர்த்தம் குழந்தைக்கு சர்க்கரையுடன் நெய் கலந்த சேனை தொட்டு குழந்தைக்கு ஊட்டுவதுசேனை தொடுதல் ஆகும். சேனை வைக்கும் பெரியவர்களின் குணம் குழந்தைக்கும் வரவேண்டும் என்பது இந்த சடங்கின் மகிமையாகும்.

தொட்டில் கட்டுவது தொகு

குழந்தையை தொட்டிலில் தூங்கவைப்பது தமிழர்கள் மட்டுமே இதற்கான காரணம் குழந்தைக்கு எந்தவொரு சங்கடமின்றி தாயின் தாலாட்டை கேட்டுக்கொண்டே தாயின் வாசம் தூங்கும்போதும் வீசவேண்டும் என்பது இதன் பண்பாகும்.

காது குத்துதல் தொகு

குழந்தை சடங்குகளில் மிகவும் முக்கியமான சடங்கு காது குத்துதல் ஆகும். குலதெய்வ சன்னதியில் மூளை வளர்ச்சியும் ஞாபக சக்தியும் பெருகும் என்பது நமது முன்னோர்களின் நம்பிக்கை ஆகும்.

மொட்டை அடித்தல் தொகு

பிறந்த குழந்தைக்கு மொட்டை அடிப்பதின் நோக்கம் மனித உடம்பில் அதிக அழுக்கு படியும் இடம் தலைமுடி என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்தாகும். கருவில் குழந்தையின் தலையில் அதிகளவில் அழுக்கு சேர்ந்திருக்கும் அதனை அகற்றுவதற்காக மொட்டை அடிக்கும் சடங்கு நடத்தப்படுகிறது.

பூப்புனித நீராட்டு விழா தொகு

சிறுமியாக இருப்பவள் குமரியாக மாறும் பருவ வயதை அடையும் பெண்ணை தூய்மை படுத்துவது பூப்புனித விழாவின் விளக்கம் ஆகும். ஒரு பெண்ணின் முதல் மாதவிடாய் நாளில் தான் அவள் பருவ நிலைக்கு மாறுகிறாள் என்பது நமது முன்னோர்கள் நமக்கு கற்பித்த பண்பாடு ஆகும். சுமங்கலிப் பெண்கள் ஒன்றிணைந்து பூப்புனித பெண்ணை மஞ்சள் நீரில் நீராட்டுவது இதன் முக்கிய அம்சம் ஆகும். மேலும் தாய்மாமன் பச்சை ஓலைகளால் கட்டும் குச்சுக்குள் அந்த பெண் 16 நாட்கள் இருக்க வேண்டும் அப்படி இருப்பதினால் எதிர்காலத்தில் அவள் ஓர் குழந்தையை தாங்கும் அளவிற்கு அவளுக்கு சத்தான ஆகாரங்களை கொடுத்து அவளை வலிமை படுத்துவது இதன் நோக்கமாகும். மேலும் இவ்விழா நடத்துவதின் முக்கிய நோக்கம் எங்கள் வீட்டில் இல்லற வாழ்க்கைக்கு தகுதியடைந்த பெண் இருக்கிறாள் என ஊர் மக்களுக்கும் உறவினர்களுக்கும் தெரியப்படுத்துவது இந்த விழாவின் மேலும் ஒரு சிறப்பாகும்.

திருமணச் சடங்குகள் தொகு

பெரும்பாலான இன்றைய சமுதாயம் காதல் திருமணத்தைக் கூட நிச்சயித்த திருமணமாக நடத்த ஆசைப்படுகின்றன. இதற்கான காரணம் நம் சமுதாயத்தில் இருக்கும் எண்ணற்ற திருமண சடங்குகள் ஆகும். பெண்ணிற்கு பூவைப்பது தென் தமிழகத்தில் மிகவும் பிரபலம் ஆகும். ஒரு பெண்ணை பார்த்து ஜாதக கட்டங்கள் பொருந்தும் பட்சத்தில் மணமகன் வீட்டார் மணமகளுக்கு பூவைப்பார்கள் இதற்கு மற்றொரு பெயர் பரிசம் போடுதல் ஆகும். இப்படி செய்வதினால் அந்த பெண்ணை வேறு எவரும் பெண் பார்க்க வரமாட்டார்கள் என்பது இதன் ஐதிகம் ஆகும்.

நிச்சயதார்த்தம் தொகு

பெண்ணுக்கு ஆணையும், ஆணுக்கு பெண்ணையும் பிடிக்கும் பட்சத்தில் இரு குடும்பத்தினரும் திருமணத்திற்கு சம்மதித்து திருமணத்திற்கு நாள் குறிப்பது நிச்சயதார்த்தம் ஆகும். வீட்டு வாசலில் முகூர்த்த கால் நட்டு வீட்டின் பூஜை அறையில் முகூர்த்த அரிசி அள்ளிப்போட்டு மண்டபத்திற்கு குடும்பத்துடன் புறப்படுவார்கள். இவ்வாறு செய்வதினால் திருமணத்தில் எந்தவொரு தடங்களும் வராது என்பது நம்பிக்கை ஆகும். திருமணத்திற்கு முந்தைய நாள் மாப்பிள்ளை அழைப்பு முதல் சாந்தி முகூர்த்தம் வரை பல சடங்குகள் அடங்கும்.

மாப்பிள்ளை அழைப்பு தொகு

மாப்பிள்ளை மண்டபத்திற்கு வந்த பின் அவர பெண்வீட்டார்கள் மேளதாளத்துடன் வாணவேடிக்கையுடன் சுமங்கலி பெண்கள் ஆரத்தி எடுத்து மணமகனை மண்டபத்திற்குள் அழைத்து செல்வார்கள்.

காப்புக்கட்டுதல் தொகு

தொடங்கிய காரியம் நிறைவேறும் வரை எந்தவொரு தீங்கும் மணமக்களை நெருங்க விடாமல் தடுக்கவே காப்புக்கட்டப் படுகிறது. நவதானிய பூஜை சுமங்கலி பெண்களால் சிறிய மண் சட்டிகளில் நவதானியங்களை செலுத்தி வழிபாடு செய்வது. இவ்வாறு செய்வதினால் நவதானியங்கள் போல மணமக்களின் திருமண வாழ்க்கையும் வளர வேண்டும் என்பது இந்த சடங்கின் பொருள் ஆகும்.

கன்னிகாதானம் தொகு

அனைத்து வளங்களும் பெற்று இவர்கள் வாழ வேண்டும் என்று இரு வீட்டாரும் ஒருவருக்கொருவர் திலகமிட்டு மரியாதை செய்துக் கொள்வர்கள்.

அம்மி மிதித்தல் தொகு

பெண்ணின் வலது காலில், மணமகன் கையால் அம்மியில் வைத்து பெருவிரலுக்கு அடுத்துள்ள விரலில் மெட்டி அணிவிக்க வேண்டும். இந்தக் கல்லைப் போல் வாழ்வில் எப்போதும் நிலையாக நின்று எதிரிகளைச் சகித்துக் கொள். இது பெண்ணிற்கு கற்பையும் ஆணுக்கு ஒழுக்கத்தையும் கற்பிக்கிறது. கல் எப்படி எதனையும் தாங்குமோ அதுபோல வாழ்கையிலும் இன்ப துன்பங்கள் இரண்டையும் கண்டு பயமில்லாமல், உறுதியான கொள்கைகளைக் கடைப்பிடித்து நடக்க வேண்டும் என்று உணர்த்துவது இதன் பொருளாகும்.

அருந்ததிப் பார்த்தல் தொகு

அருந்ததி நட்ச்சத்திரதை மணமக்கள் பார்ப்பதினால் அவர்களது இல்லற வாழ்க்கை அருந்ததி நட்சத்திரத்தைப் போன்று உன்னதமாக இருக்கும் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கை ஆகும்.

வளைகாப்புச் சடங்கு தொகு

திருமணமாகிய பெண்ணின் கர்ப்பகாலத்தில் எழாவது மாதத்தில் வளைகாப்புச் சடங்கு நடத்தப்படுவது தமிழர்கள் வழக்கம் ஆகும். பெண் வீட்டார்கள் தங்களது உறவினர்களுடன் பலவிதமான உணவுகளை சமைத்து மாப்பிள்ளை வீட்டிற்கு எடுத்து செல்வது வழக்கம். பெண்ணிற்கு கண்ணாடி வளையல்கள் அனுவித்து அவரை தங்களது வீட்டிற்க்கு அழைத்து செல்வார்கள். குழந்தை பெற்றெடுப்பது என்பது ஒருவகையில் மறு பிறவியாகும். கருவுற்ற பெண்ணிற்கும் பிறக்கபோகும் குழந்தைக்கும் எந்தவொரு கெடுதலும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக வளைகாப்புச் சடங்கு நடத்தப்படுகிறது.

இறப்புச் சடங்கு தொகு

மனிதன் பிறக்கும் முன் தொடங்கும் சடங்கு மனிதன் இறந்தப்பின்பும் தொடர்கின்றது. பெரும்பாலும் கிராமப்புறங்களில் ஒருமனிதன் இறந்தபின்பு துா்நாற்றம் வராமல் இருப்பதற் வாயில் மண்என்ன ஊற்றி குளிக்கவைத்து புத்தாைட அணிவித்து, வாக்கட்டு(நாடிகட்டு), கால்கட்டு மற்றும் நெற்றியில் காசுைவத்து தரையில் அல்லது நிறைமரக்கால் நெல்வைத்து அல்லது நெல்களை நிரப்பி அதன் மீது ஒரு விளக்கேற்றி வாழைப்பழம் தேங்காய் வைத்து மாழை அணிவித்து வழிபடுவார்கள். பின்பு இறந்தவாின் உடலை எடுப்பதற்கு முன்பு இறந்தவாின் மகன், மகள் பங்காளிகள் போன்ற உரவினா்கள் இனைந்து நீா்மாைழை எடுத்துவந்து, இறந்தவாின் உடல் வைத்திருந்த இடத்தில் நவதானியம், பசு மாட்டு சானம், கோமியம் ஆகியவற்றை கலந்து சுவற்றில் வட்டவடிவில் இட்டு வைப்பாா்கள் இதற்கு (சீதேவி வாங்குதல் என்று பொருள்) பின்பு மரக்காளில் இருக்கும் நெல் மீது உள்ள விளக்குடன் எடுத்துவந்து மகனும் மருமகளும் இறந்தவாின் உடலை மூன்று முறை சுற்றிவந்து இறந்தவரின் தலையில் என்னெய் வைத்து இறந்தவரை குழிக்க வைத்து புத்தாடை அனிவித்து, பின் உளக்கை இறந்தவாின் தலையில் உலக்கை வைத்து அபிசேகம் செய்துவிட்டு இறந்தவரை எடுத்து தோில் வைக்கும்போது அவா்முகம் வீட்டை பாா்க்கும்படி வைத்து எடுத்துச் செல்வாா்கள் அந்த ஊாின் முச்சத்திக்க சென்றவுடன் தேறை மூன்று சுத்து சுத்தி கீழே வைத்து மகேளா, மருமகேளா குடம் உடைத்து தலையில் வைத்து மூன்று சுத்து சத்தி திரும்பி பாா்க்காமல் வீட்டிற்கு சென்றுவிடுவாா்கள் பின் இறந்தவாின் உடலை சுடுகாட்டை பாா்க்கம் படி வைத்து எடுத்துச் செல்வாா்கள் எடுத்துச்சென்று இறந்தவாின் உலை சுடுகாட்டில் இரக்கி வைத்து அபிசேகம் செய்துவிட்டு பிள்ளைகள் பங்காளிகள் வாய்கு அாிசி போட்டு சுத்திவந்து இறந்தவைர குழியில் இரக்கிைவத்து தலையை தெற்குபக்கமாக வைத்து முகத்தை கிழக்கு பக்கம் திருப்பி இறந்தவாின் இடது கையை கத்தியால் கிழித்து பின்பு மண் தள்ளுவாா்கள் ( இந்த சடங்குகள் நடக்கம் பொழுது இறந்தவாின் மகன் மொட்டை அடிக்க வேண்டும்) பின்பு தலைஇறுக்கும் பகுதியில் துளசிசெடி நட்டு இறந்தவாின் மகன் மூன்றுசுற்று சுத்தி குடம் உடைக்க வேண்டும் (எாித்தாள் மண் தள்ளுவதற்கு பதில் கொள்ள வைக்க வேண்டும் பின்பு எாித்த சாமபளை கருமாதி அன்று ஆற்றில் கரைக்க வேண்டும்) சென்று உடல் தகனம் செய்வாா்கள் பின்பு மாமன், மைத்துனா் கொள்ளி வைத்தவறுக்கு புது துனியை தலையில் முக்காடுபோட்டு வீட்டிற்கு அழைத்துச்செல்வாா்கள். பின்பு இறந்தவாின் வீட்டின் முன் வாசலில் உளக்கையை போட்டு தண்ணீாில் வேபந்தளையை போட்டு வைத்திருப்பாா்கள் தண்ணீாில் கால்களை கலுவி உளக்கையை தாண்டி வீட்டினுல் சென்று இறந்தவாின் உடல் இருந்த இடத்தை தொட்டு கும்பிட வேண்டும். மறுநாள் இளநீா், நவதானியம், பால், கோமியம் மற்றும் அவா் விரும்பி உட்கொள்ளும் உனவுப் பொருட்களை வாங்கி சென்று அடக்கம் செய்த இடத்தில் பால், கோமியம தெளித்து அபிசேகம் செய்து அவா்கள் உண்ணும் உணவு பதாற்தங்களை காக்கைக்கு இட்டு வீட்டிற்கு செல்லவேண்டும் வீட்டிற்கு சென்று வீட்டின் முன் வாசலில் உளக்கையை போட்டு தண்ணீாில் வேபந்தளையை போட்டு வைத்திருப்பாா்கள் தண்ணீாில் கால்களை கலுவி உளக்கையை தாண்டி வீட்டினுல் சென்று இறந்தவாின் உடல் இருந்த இடத்தை தொட்டு கும்பிட வேண்டும். மறுநாள் இரவு நிரசெம்பு தண்ணீா் வைத்து அழுவாா்கள்- இதேபோல் கருமாதிக்க (5 அல்லது 7) முந்திய நாள் வரை செய்து ஒவ்வொரு நாளும் பயிா் வகைகளில் எவையேனும் ஒன்றை வேகவைத்து அழவரும் பெண்களுக்கு அழுதுவிட்டு வீட்டிற்கு செல்லும்போது கொடுத்து அனுப்பவேண்டும். அடுத்து கருமாதி அன்று மறு மொட்டை அடித்து பச்சாிசி மாவில் எள்ளு கலந்து ஏழு பிண்டம் பிடித்து பால், கோமியம் இளநீா், இறந்தவா் விரும்பி உட்கொள்ளும் உனவுப் பொருட்களை வாங்கிவைத்து அபிசேகம் செய்து உணவுப்பொருட்களை காகைக்கும் மீதியுள்ள பொருட்களை ஆற்றில் கரைக்கவேண்டும் (இறந்தவைர எாித்தால் எாித்த சாம்பளை இதனுடன் சோ்த்து கரைக்க வேண்டும்) இவ்வாறு செய்வதினால் இறந்தவரின் உயிர் ஒளியாக வீட்டில் இருக்கும் என்பது கிராமப்புற மக்களின் நம்பிக்கை ஆகும். இதனால்தான் இன்றும் நமது வீடுகளில் இறந்தவர் புகைப்படங்களுக்கு மாலை அனுபவித்து விளக்கேற்றி வழிபாடு செய்கின்றோம். புகைப்படம் இல்லாத காலத்தில் வீட்டின் பூஜை அறையில் ஒரு ஆணியை அடித்து அதற்கு பூஜை செய்யும் வழக்கம் இன்றும் பலரது வீட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெளி இணைப்புகள் தொகு

மக்கள் வாழ்வில் சாங்கியம் சடங்குகள்

மேற்கோள்கள் தொகு

  1. http://www.tamilvu.org/courses/degree/a061/a0614/html/a0614112.htm#book1 சடங்குகள் - வகைப்பாடு தமிழாய்வு தளம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சடங்கு&oldid=3180130" இலிருந்து மீள்விக்கப்பட்டது