சன்னிஹித் சரோவர்
அரியானாவில் உள்ள நதி
சன்னிஹித் சரோவர் (Sannihit Sarovar) என்பது அரியானா மாநிலத்தில் குருசேத்திர மாவட்டத்தில் தென்னசர் என்னும் இடத்தில் ஓடும் ஒரு புனித நீர்த்தேக்கம் ஆகும். இது ஏழு புனித சரசுவதிகள் சந்திக்கும் இடமாக நம்பப்படுகிறது.[1]
சன்னிஹித் சரோவர் | |
---|---|
அமைவிடம் | பழைய குருசேத்திர நகரம், அரியானா |
ஆள்கூறுகள் | 29°58′00″N 76°50′09″E / 29.96667°N 76.83583°E |
வடிநில நாடுகள் | இந்தியா |
பிரபலமான நம்பிக்கையின்படி சரோவரில் புனித நீர் உள்ளது. அமாவாசை தினத்தன்று (முழு இருள் சூழ்ந்த இரவு) அல்லது கிரகண நாளில் குளத்தின் புனித நீரில் நீராடுவது அசுவமேத யாகம் செய்வதற்கு சமமான புண்ணியங்களை அளிப்பதாக நம்பப்படுகிறது. பக்தர்கள் ஓவ்வொரு மாதமும் அமாவாசை நாட்களில் இங்கு நீராட வருகின்றனர்.
கடவுள் தொகு
இப்புனித நதியை சுற்றி விஷ்ணு, நாராயணன், லட்சுமி நாராயணன், அனுமன், துர்க்கை ஆகிய கடவுள்களுக்கான கோவில்கள் உள்ளது.
இதனையும் காண்க தொகு
மேற்கோள் தொகு
- ↑ "Tirath in Kurukshetra - Sannehit Sarovar". Kurukshetra district website. Archived from the original on 2014-08-06. பார்க்கப்பட்ட நாள் 2014-08-08.