சரசுவதி சுப்பையா

இந்திய அரசியல்வாதி

சரசுவதி சுப்பையா (Saraswathi Subbiah)(22 அக்டோபர் 1924 - ஜூன் 2005) என்பவர் இந்தியப் பொதுவுடைமை கட்சியினைச் சார்ந்த புதுச்சேரி ஒன்றிய அரசியல்வாதி ஆவார். சரஸ்வதி சுப்பையா இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளார். மருத்துவம் படிக்க ஆரம்பித்த இவரின் படிப்புக்கு இடையூறு ஏற்பட்டது. இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பில் ஆகஸ்ட் 19, 1959 முதல் 30 ஜூன் 1963 வரை காசுக்கடை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்தார். ஜூலை 1963 முதல் ஒரு வருடம் அவர் பிரதிநிதி சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.[1] அவர் இந்திய மகளிர் தேசிய கூட்டமைப்பின் தலைவராகவும் இருந்தார்.[2]

சமூகத்திற்கு இவர் செய்த சேவையை அங்கீகரிக்கும் விதமாகப் புதுச்சேரி அரசாங்கத்தின் மகளிர் திலகம் விருதினை வழங்கியது. இந்த விருது பெற்ற முதல் பெண்மணி சரஸ்வதி சுப்பையா ஆவார். இவர் மூத்த பொதுவுடைமைக் கட்சித் தலைவர் வ. சுப்பையாவின் மனைவி.[1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 தி இந்து. Saraswathi Subbaiah passes away
  2. New Age. Paying Homage to Comrade V. Subbaiah பரணிடப்பட்டது 2012-03-25 at the வந்தவழி இயந்திரம்

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=சரசுவதி_சுப்பையா&oldid=3356883" இலிருந்து மீள்விக்கப்பட்டது