சிகப்பி (நெல்)

சிகப்பி என்றழைக்கப்படும் இந்த நெல் வகை, சி. ஆர். 1009 என்கிற நெல் ரகத்தில், வெள்ளத்தைத் தாங்கி வளரக்கூடிய மரபணுவைச் சேர்த்து, பாரம்பரியப் பயிர் இனவிருத்தி மூலம், இந்த நெல் வகை உருவாக்கப்பட்டுள்ளது.

சிகப்பி
பேரினம்ஒரய்சா சாட்டிவா
கலப்பினப் பெற்றோர்சி. ஆர். 1009
பயிரிடும்வகைவேளாண் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
தோற்றம்2013, சிதம்பரம், தமிழ் நாடு,  இந்தியா

வெளியீடு தொகு

தமிழக கடலூர் மாவட்டத்தின், சிதம்பரத்தில் அமைந்துள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் விவசாயத் துறை 2013 இல் அறிமுகப்படுத்தியது. அதற்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் இணைவேந்தர் எம். ஏ. எம். ராமசாமியின் மனைவியார் சிகப்பி ஆச்சியின் பெயரைச் சூட்டியுள்ளனர். [1]

சாகுபடி தொகு

இந்த இரகம் நீர்ப்பாசன வசதியுள்ள கடலூர் மாவட்ட விவசாயிகளால் தற்போது சாகுபடி செய்யப்படுகிறது. மேலும் கேரளத்தின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள பழையன்னூர் வட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு, நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சிறப்புப் பண்புகள் தொகு

  • இந்த நெல் ரகம் சுமார் 10 நாட்கள் வெள்ளத்தில் மூழ்கியிருந்தாலும், அழுகிப் போகாது.
  • இதன் தானியமணிகள் தடிமான அளவில் உள்ளது.

இவற்றையும் காண்க தொகு

சான்றுகள் தொகு

  1. ந. வினோத் குமார் (4 நவம்பர் 2017). "'சிகப்பி'க்கு 'பச்சை' கிட்டுமா..?". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 4 நவம்பர் 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிகப்பி_(நெல்)&oldid=3577199" இலிருந்து மீள்விக்கப்பட்டது