சிறீராகம் இருபத்தோராவது மேளகர்த்தா இராகமும், "வேத" என்று அழைக்கப்படும் நான்காவது சக்கரத்தின் நான்காவது இராகமுமாகிய கரகரப்பிரியாவின் ஜன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம் தொகு

இந்த இராகத்தில் சட்சம் (ச), சதுச்ருதி ரிசபம் (ரி2)சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம் (ப), கைசிக நிசாதம் (நி2), சதுச்ருதி தைவதம் (த2), சாதாரண காந்தாரம் (க2) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு[1]:

ஆரோகணம்: ச ரி21 ப நி2 ச்
அவரோகணம்: ச் நி2ப த2 நி2ப ம1 ரி22 ,ரி2

இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது "வர்ஜ" இராகம் எனப்படுகிறது. இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 7 சுரங்களும் உள்ளன. இதனால் இது "ஔடவ சம்பூர்ண" இராகம் எனப்படுகின்றது. இதன் அவரோகணத்தில் தைவதம், நிசாதம், காந்தாரம் என்பன ஒழுங்கு மாறி வருகின்றன. இதனால் இது வக்கிர இராகம் எனப்படுகின்றது.

குறிப்பு தொகு

  1. Music Handbook - Raga Index -S 18 பெப் 2011 அன்று பார்க்கப்பட்டது.

இவற்றையும் பார்க்கவும் தொகு

வெளியிணைப்புக்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறீராகம்&oldid=702869" இலிருந்து மீள்விக்கப்பட்டது