சிறுநீரகக் கொடை

சிறுநீரகக் கொடை அல்லது சிறுநீரக தானம் என்பது தனது ஒரு சிறுநீரகத்தை, சிறுநீரகம் பாதிப்படைந்தவர்களுக்குத் தானமாக அளிப்பதாகும். ஒவ்வொருவருக்கும் உடலில் இரு சிறுநீரகங்கள் இருக்கின்றன. ஆனால் ஒரு சிறுநீரகம் மட்டுமே பயன்பாட்டில் இருக்கிறது. ஒரு சிறுநீரகம் பழுதடையும் போது மற்றொரு சிறுநீரகம் தானாகவே பயன்பாட்டுக்கு வந்துவிடுகிறது. இரு சிறுநீரகமும் செயலிழக்கும் நிலையில் அவருக்கு மாற்றுச் சிறுநீரகம் தேவைப்படும் போது இந்த சிறுநீரகம் தானமாகப் பெறப்படுகிறது. ஒருவர் உயிருடன் இருக்கும் போது சிறுநீரகம் பாதிப்படைந்த மற்றொரு நபருக்கு சிறுநீரகத்தைத் தானம் செய்ய முடியும். இப்படி சிறுநீரக தானம் செய்பவரின் ரத்த வகையும், தானம் பெற்றுக் கொள்பவரின் இரத்த வகையும் ஒரே பிரிவாக இருக்க வேண்டும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறுநீரகக்_கொடை&oldid=3715510" இலிருந்து மீள்விக்கப்பட்டது