சிலுவையின் புனித யோவான்

சிலுவையின் புனித யோவான் (எசுப்பானியம்: San Juan de la Cruz, ஆங்கில மொழி: Saint John of the Cross, சூன் 24, 1542டிசம்பர் 14, 1591), உரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் முப்பத்தியாறு மறைவல்லுனர்களுள் ஒருவர். கத்தோலிக்க மறுமலர்ச்சியில் பெரும் பங்கு வகித்த எசுப்பானிய மறையியலாளரான இவர் கார்மேல் சபைத் துறவியும் குருவும் ஆவார். சிறந்த எழுத்தாளரும் கவிஞருமான இவரது படைப்புகள் எசுப்பானிய இலக்கியத்தில் முதன்மை இடம் பெற்றுள்ளன.

சிலுவையின் புனித யோவான்
Saint John of the Cross
சிலுவையின் புனித யோவான்
ஆதினத் தலைவர், மறைவல்லுநர்
பிறப்பு(1542-06-24)சூன் 24, 1542
போண்டிவேரோஸ், எசுப்பானியா[1][2]
இறப்புதிசம்பர் 14, 1591(1591-12-14) (அகவை 49)
ஊபெதா, அந்தலூசியா, எசுப்பானியா
ஏற்கும் சபை/சமயங்கள்கத்தோலிக்கம், ஆங்கிலிக்கம், லூத்தரன்
அருளாளர் பட்டம்ஜனவரி 25 1675 by திருத்தந்தை பத்தாம் கிளமன்ட்
புனிதர் பட்டம்டிசம்பர் 27 1726 by திருத்தந்தை பதிமூன்றாம் பெனடிக்ட்
முக்கிய திருத்தலங்கள்எசுப்பானியா நாட்டில் உள்ள சிலுவையின் புனித யோவானின் கல்லறை
திருவிழாடிசம்பர் 14
பாதுகாவல்தியான வாழ்வு, ஆழ்ந்த சிந்தனை, மறைமெய்ம்மையியல், மறையியலாளர்கள், எசுப்பானியா நாட்டு கவிஞர்கள்

கார்மேல் சபையைச் சீர்திருத்திய இவர், புனித அவிலா தெரேசாவோடு இணைந்து பெண்களுக்கான கார்மேல் சபையை உண்டாக்குவதில் பெரும் பங்காற்றினார். திருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்ட் 1726 இல் இவருக்கு புனிதர் பட்டமளித்தார்.

மேற்கோள்கள் தொகு

  1. Thompson, C.P., St. John of the Cross: Songs in the Night, London: SPCK, 2002, p. 27.
  2. Roth, Norman. Conversos, Inquisition, and the Expulsion of the Jews from Spain, Madison, WI: The University of Wisconsin Press, 1995, pp. 157, 369
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிலுவையின்_புனித_யோவான்&oldid=3719431" இலிருந்து மீள்விக்கப்பட்டது