சீ. தம்பிராசா

மேடைப் பேச்சாளர்

பண்டிதர் சீ. தம்பிராசா (பிறப்பு: 1924) ஈழத்து தமிழறிஞர். இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் “தமிழ் ஒளி” விருது பெற்றவர். பல இலக்கியக் கட்டுரைகளை எழுதியவர். மேடைப் பேச்சாளர்.

சீ. தம்பிராசா
பிறப்பு1924
பெரிய கல்லாறு மட்டக்களப்பு
தேசியம்இலங்கைத் தமிழர்
அறியப்படுவதுஈழத்து எழுத்தாளர்

வாழ்க்கைக் குறிப்பு தொகு

பண்டிதர் தம்பிராசா 1924 இல் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரிய கல்லாறு கிராமத்தில் பிறந்தவர். 1951 முதல் 1971 வரையிலான 20 வருடங்கள் இவர் பெரிய கல்லாறு சைவ மகா சபையின் செயலாளராகத் தொடர்ந்து பணியாற்றியுள்ளார்.

எழுதிய நூல்கள் தொகு

  • இருபா இருபஃது (1993)
  • கதிர்காமம் (2002)
  • சங்க இலக்கிய சமுத்திர முத்துக்கள் (2005)
  • பெரியகல்லாறு சர்வார்த்த ஸ்ரீ சித்திவிநாயகர் தோத்திரப் பாடல்கள் (2007)
  • கல்லாற்றுக் கடல் நாச்சியார் துதி மலர் (2007)
  • பெரிய கல்லாறு மண்டபத்தடிப் பிள்ளையார் ஆலய வரலாறும் திருப்பொன்னூஞ்சலும் (2008)
  • எனது இலக்கியச் சிந்தனைகள் (2010)

விருதுகள் தொகு

இவரது சமய இலக்கிய பணிகளுக்காகப் பல்வேறு கெளரவங்களும், பரிசுகளும் பாராட்டுகளும் இவருக்குக் கிடைத்துள்ளன.

  • தமிழ் மறைக் கழகம் நடத்திய “திருக்குறள்” கட்டுரைப் போட்டியில் முதற்பரிசு (1962) இதற்கான பரிசளிப்பு விழா 1962, மே 18 இல் வேலணையில் நடைபெற்றது. தில்லியிலிருந்து முனைவர் சாலை இளந்திரையன் பிரதம விருந்தினராகப் பங்குபற்றிய இவ்விழாவில் பண்டிதர் தம்பிராசாவுக்குத் தங்கப்பதக்கம் சூட்டப்பட்டது.
  • இந்து சமய கலாசார திணைக்களம் ‘தமிழ் ஒளி’ விருதை இவருக்கு வழங்கியுள்ளது.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீ._தம்பிராசா&oldid=3244878" இலிருந்து மீள்விக்கப்பட்டது