சூதர் (Sūta) (சமசுகிருதம்:सूत) என்பது மனுதரும சாத்திரத்தின்படி சத்திரியத் தந்தைக்கும், பிராமணத் தாய்க்கும் பிறந்த அனுகூல சாதியினர் ஆவார். மகாபாரத காவியம் மட்டும் சூதர் சமூகத்திரைத் குறித்துள்ளது. சூதர் வகுப்பினர் அம்பஷ்தர்களைப் போன்று இருபிறப்பாளர்களால் தீண்டத்தக்க சமூகத்தினர் ஆவார். சூத சமூக ஆண்களுக்கும் பூணூல் அணியும் கடமை உண்டு. சூதர்களின் குலத்தொழில் தேர் ஓட்டுதல் மற்றும் தரும சாத்திரங்கள், இதிகாசங்கள் மற்றும் புராணங்களை மக்களிடத்தில் பரப்புதல் ஆகும்.[1]{[2][3][2] மகாபாரதம் கூறும் சூதர்களில் புகழ்பெற்றவர்கள் சஞ்சயன், ரோமஹர்சணர், உக்கிரசிரவஸ், கீசகன் மற்றும் கர்ணன் (தேரோட்டியின் வளர்ப்பு மகன்) ஆவர்.

இதனையும் காண்க தொகு

அடிக்குறிப்புகள் தொகு

  1. Ghurye, G.S. (1969). Caste and Race in India. p. 85. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788171542055.
  2. 2.0 2.1 Mittal, Sushil; G. R. Thursby (2004). The Hindu World. Routledge. p. 103. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-21527-5.
  3. Muir, J. The People of India, Their religions and institutions.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூதர்&oldid=3693424" இலிருந்து மீள்விக்கப்பட்டது